Saturday, August 23, 2014

அதிகமா வியர்குதா? அதை தடுக்க இதோ சில வழிகள்!!!


எப்போதும் அதிகமாக வியர்த்தால், அது மிகுந்த சங்கடமான நிலையை ஏற்படுத்தும். வியர்வை அதிகம் வெளிவந்தால், அது உங்களின் மீது துர்நாற்றத்தை ஏற்படுத்துவதுடன், நம் அருகில் இருப்போரின் முகத்தை அது சுளிக்கச் செய்யும். எனவே பலர் வியர்வை துர்நாற்றம் வெளிவராமல் இருப்பதற்கு, பலர் டியோடரண்ட் அடித்துக் கொள்வார்கள். இருப்பினும் ஒரு கட்டத்தில் அந்த வியர்வையானது டியோடரண்ட்டின் நறுமணத்தை போக்கி, துர்நாற்றத்தை
அதிகமாக்கிவிடும். அதுமட்டுமின்றி, பலருக்கு வியர்வையினால் ஆடைகளின் மேல் பல ஓவியங்கள் போன்று வெள்ளை நிறத்தில் இருக்கும். இதனைப் பார்க்கும் போதே, நமக்கு வெட்கமாக இருக்கும். இத்தகைய வியர்வை பிரச்சனைக்கு தீர்வு இல்லையா என்று பலர் ஏங்குவதுண்டு. அத்தகையவர்களுக்காக, தமிழ் போல்ட் ஸ்கை ஒருசில இயற்கை நிவாரணிகளைக் கொடுத்துள்ளது. அதன்படி செய்தால், அதிகமாக வியர்ப்பதைத் தடுக்கலாம். ஆப்பிள் சீடர் வினிகர் ஆப்பிள் சீடர் வினிகரை தினமும் இரவில் படுக்கும் முன் சிறிது அக்குளில் தடவி படுத்தால், அதிகமாக அக்குள் வியர்ப்பதைத் தடுக்கலாம். இல்லாவிட்டால், தினமும் காலையில் குளிப்பதற்கு 30 நிமிடத்திற்கு முன் அக்குளில் தடவி, பின் குளித்தால், அதிகமாக வியர்ப்பதைத் தடுக்கலாம். இருப்பினும் இரவில் பயன்படுத்தினால் தான் இன்னும் நல்ல பலன் கிடைக்கும். பேக்கிங் சோடா பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, அதனை அக்குளில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், அக்குள் வியர்க்காமல் வறட்சியுடன் இருப்பதை நன்கு காணலாம். கார்ன் ஸ்டார்ச் அக்குளில் டால்கம் பவுடரைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, சிறிது கார்ன் ஸ்டார்ச் தடவினால், அது அக்குளில் உள்ள அதிகப்படியான ஈரப்பசையை உறிஞ்சி, வியர்வை துர்நாற்றம் வருவதைத் தடுக்கும். குறிப்பாக இப்படி செய்யும் போது அடர் நிறம் கொண்ட ஆடைகளை உடுத்த வேண்டாம். இல்லாவிட்டால், அது நன்கு வெளிப்படும். எலுமிச்சை எலமிச்சைக்கு அதிகமாக வியர்ப்பதை தடுக்கும் சக்தி உள்ளது. அதற்கு எலுமிச்சை துண்டை அக்குளில் தடவி தேய்த்து, கழுவ வேண்டும். இதனால் வியர்ப்பது குறைவதுடன், அக்குள் கருமையும் நீங்கும். காட்டன் ஆடைகள் காட்டன் ஆடைகளை உடுத்தினால், அது அதிகப்படியன வியர்வையை உறிஞ்சி, அக்குளில் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்கும். காரமான உணவுகளைத் தவிர்க்கவும் அதிகமாக வியர்ப்பதற்கு முக்கிய காரணம் அளவுக்கு அதிகமாக கார உணவுகளை உண்பது தான. ஆகவே காரமான உணவுகள் உண்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக அதிகமாக வியர்க்கும் பிரச்சனை உள்ளவர்கள் உணவில் குடைமிளகாய், பச்சை மிளகாய் போன்றவற்றை அதிகம் சேர்க்க வேண்டாம்.

பெண்களுக்கு பயனுள்ள 15 கட்டளைகள்


உங்களின் எடை குறைந்துவிட்டதா? கவலை வேண்டாம். உங்களுக்கு ஜீன்ஸ் பொருத்தமாக இருக்கும். அதை அணிந்து அழகு பாருங்கள். அதே நேரத்தில் திடீரென்று உங்கள் எடை குறைந்தது ஏன் என்பதைக் கண்டறிய மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தினருக்கோ, அருகில் வசிப்பவர்களுக்கோ சிறு விபத்தோ, இதய பாதிப்போ ஏற்படலாம். அவரை ஆஸ்பத்திரியில் கொண்டு சேர்ப்பது அவசியம் என்றாலும், உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட வேண்டும். முதலுதவி பற்றி நீங்களும் தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள். எப்போதும் சரியான
உள்ளாடைகள் அணிவது அவசியம். இறுக்கமான உள்ளாடைகளை அணிவது பல்வேறு உடல் தொந்தரவுகளுக்கு காரணமாகும். அதுபோல் தொள தொள உள்ளாடைகளும் அணியக்கூடாது. எப்போதும் பொருத்தமான உள்ளாடைகளை மட்டுமே அணிய வேண்டும். பெண்கள் புதிதாக தொழில் தொடங்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அவர்கள் முக்கியமாக தொழில் நேர்த்தியை கற்றுக்கொள்ள வேண்டும். நட்பான அணுகுமுறை அவர்கள் முன்னேற்றத்தின் படிக்கல் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். சிலர் ஹோட்டலில் சுவை நன்றாக இருக்கிறது என்று எண்ணி அடிக்கடி ஹோட்டல்களில் சாப்பிடுகிறார்கள். ஆனால் வீட்டில் சமைக்கும் உணவில்தான் உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கிறது. வீட்டில் சாதம், கூட்டு, பொரியல் ஆகியவற்றை சுவையாக சமைப்பது எப்படி என்பதை பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அது பற்றி பல தகவல்கள் புத்தகங்களிலும், இணையதளங்களிலும் கிடைக்கின்றன. வீட்டில் பொழுதுபோக்குக்காக ஒதுக்கப்படும் நேரங்களில் இசையை ஈடுபாட்டுடன் கேட்கலாம். மனது இலகுவாகும். டி.வி பார்க்கும் போது அருகில் இருப்பவர்கள் திடீரென உங்கள் மீது விழுந்தாலோ, அருகில் உள்ள மேஜையிலிருந்து யாராவது இருமினாலோ உங்களுக்கு எரிச்சல் வரும் என்று வைத்துக் கொள்ளுங்கள். முதலிலே நீங்களாகவே அந்த மாதிரியான தொந்தரவுக்கு இடம் கொடுக்காமல் தள்ளி உட்கார்ந்து விடுங்கள். வீட்டில் பொருள்கள் ஆங்காங்கே ஒழுங்கு இல்லாமல் சிதறிக் கிடந்தால் எரிச்சல் ஏற்படும். இப்படி சிதறிக் கிடக்கும் பொருள்களை ஒழுங்குபடுத்தலாம். மேலும் ஆங்காங்கே கிடக்கும் குப்பைகளை எடுத்து குப்பைத் தொட்டியில் சேகரிக்கும் நல்ல பழக்கத்தையும் கற்றுக் கொள்ளலாம். குடிரை கொதிக்க வைக்கும்போது அதில் சீரகம் கலந்திடுங்கள். கொதிக்க வைத்து ஆறியபின் அதை குடிநீராக அருந்துங்கள். தினமும் 3 லிட்டர் தண்ணீர் அருந்தினால் உடல் சூடு குறையும். சீரக தண்ணீர் உடல் ஆரோக்கியத்தையும் சீராக வைத்திருக்க உதவும். வீட்டில் தனியாக இருக்கும் போது திருடர்கள் உங்களை தாக்கும் நோக்கத்தோடு வந்தால் அவர்களிடமிருந்து தப்பிக்க காரத்தே போன்ற கலைகளை தெரிந்து வைத்திருங்கள். தற்காப்பு கலை எதுவும் தெரிந்திருக்காவிட்டாலும் உங்கள் மனது எப்போதும் தன்னம்பிக்கையோடு இருக்கட்டும். பெண்கள் தொழில், படிப்பு போன்ற காரணங்களுக்காக வெளியூர்களில் தனியாக வசிக்க நேரிடலாம். அந்த மாதிரியான வேளைகளில் தனியாக இருக்க பழகிக்கொள்ள வேண்டும். அப்படி இருபதால் மனரீதியாக தைரியம் கிடைக்கும். பெண்கள் பணத்தை சம்பாதிப்பதை விடவும், அதை சேமிப்பதில் அதிக அக்கறை காட்ட வேண்டும். சரியான நிறுவனங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்ய வேண்டும். நுறு ருபாய் என்றாலும் ஒன்றுக்கு பலமுறை யோசித்தே முதலீடு செய்யவேண்டும். திடீரென உங்கள் வீட்டிற்கு உறவினர்கள் அதிக பேர் வந்தால் உங்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். அந்த நேரங்களில் டென்ஷன் ஆகாமல் இன்முகத் தோடு வேலையை பாருங்கள். உங்கள் முகத்தில் தோன்றும் புன்னகையே விருந்தாளிகளின் பாதி பசியை போக்கிவிடும். புத்தகங்களை படிப்பது போல் சிறந்த பொக்கிஷம் வேறென்றும் இல்லை. நல்ல நல்ல சிந்தனை உள்ள புத்தகங்களைம், வரலாற்று பதிவுகளையும் படிப்ப தன் முலம் பல விஷயங்களை வீட்டில் இருந்தவாறு தெரிந்து கொள்ளலாம். தினமும் அதிகாலை 5 மணிக்கு எழும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். வெயில் வரும் முன்னே சமையல், வீட்டு வேலைகளை முடித்து விடுவது நல்லது.

Sunday, August 3, 2014

எறும்புகள்

Posted By Muthukumar On Aug 3,2014
வீட்டில் எறும்புகள் வருவதைத் தடுக்கலாம்.
மசாலாப் பொருட்கள் மசாலாப் பொருட்களான மிளகு தூள், மஞ்சள் தூள், பட்டைத் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை எறும்புகள் வரும் இடத்தில் தெளித்தால், எறும்புகள் வருவதைத் தடுக்கலாம்.
வெள்ளரிக்காய் எறும்புகளை கொல்வதற்கு உதவும் பொருட்களில் ஒன்று தான் வெள்ளரிக்காய். அதற்கு வெள்ளரிக்காயை எறும்புகள் வரும் இடத்தில் வைத்தால், எறும்புகள் வராமல் தடுக்கலாம்.
டால்கம் பவுடர் இது மிகவும் சிறப்பான ஒரு எறும்புக் கொல்லிப் பொருள். அதற்கு எறும்புகள் உள்ள இடத்தில் டால்கம் பவுடரை தூவி விட வேண்டும்.
கிராம்பு சர்க்கரை டப்பாவில் 1-2 கிராம்புகளை போட்டு வைத்தால், எறும்புகள் சர்க்கரை டப்பாவில் வராமல் இருக்கும்
பூண்டு பூண்டுகளை தட்டி, அதனை எறும்புகள் உள்ள இடத்தில் வைத்தால், நொடியில் எறும்புகள் அனைத்தும் மாயமாய் மறைந்துவிடும்.
எலுமிச்சை சாறு எறும்புகள் மொய்க்கும் இடத்தில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றினால், இனிமேல் எறும்புகள் வராமல் இருக்கும். அதிலும் வீட்டை மாப் கொண்டு துடைக்கும் போது, எலுமிச்சை சாறு கலந்த நீரில் நனைத்து துடைத்தால், எறும்புகள் வருவதைத் தடுக்கலாம்
வீட்டில் எறும்புகள் வருவதைத் தடுக்கலாம்.
மசாலாப் பொருட்கள் மசாலாப் பொருட்களான மிளகு தூள், மஞ்சள் தூள், பட்டைத் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை எறும்புகள் வரும் இடத்தில் தெளித்தால், எறும்புகள் வருவதைத் தடுக்கலாம்.
வெள்ளரிக்காய் எறும்புகளை கொல்வதற்கு உதவும் பொருட்களில் ஒன்று தான் வெள்ளரிக்காய். அதற்கு வெள்ளரிக்காயை எறும்புகள் வரும் இடத்தில் வைத்தால், எறும்புகள் வராமல் தடுக்கலாம்.
டால்கம் பவுடர் இது மிகவும் சிறப்பான ஒரு எறும்புக் கொல்லிப் பொருள். அதற்கு எறும்புகள் உள்ள இடத்தில் டால்கம் பவுடரை தூவி விட வேண்டும்.
கிராம்பு சர்க்கரை டப்பாவில் 1-2 கிராம்புகளை போட்டு வைத்தால், எறும்புகள் சர்க்கரை டப்பாவில் வராமல் இருக்கும்
பூண்டு பூண்டுகளை தட்டி, அதனை எறும்புகள் உள்ள இடத்தில் வைத்தால், நொடியில் எறும்புகள் அனைத்தும் மாயமாய் மறைந்துவிடும்.
எலுமிச்சை சாறு எறும்புகள் மொய்க்கும் இடத்தில் சிறிது எலுமிச்சை சாற்றினை ஊற்றினால், இனிமேல் எறும்புகள் வராமல் இருக்கும். அதிலும் வீட்டை மாப் கொண்டு துடைக்கும் போது, எலுமிச்சை சாறு கலந்த நீரில் நனைத்து துடைத்தால், எறும்புகள் வருவதைத் தடுக்கலாம்