Sunday, February 22, 2015

உலகில் கொட்டிக்கிடக்கும் வியத்தகு விசித்திரங்கள்




அன்றாட வாழ்க்கையில், நிறைய நகைச்சுவைகள் மற்றும் அனுபவத்தைப் பெறுகிறோம். ஆனால் இன்றைய
நவீன உலக வாழ்க்கையை பார்க்கும்போது, சாதாரண விஷயங்களில் உள்ள நிறைய உண்மைகள் விசித்திரமாகவே கருதப்படுகின்றன. மேலும் அத்தகைய உண்மை களைக் கேட்டால், பலரும் வாயில் கை வைத்து ‘அப்படியா!!!’ என்று ஆச்சரியமாக கேட்பார்கள். சொன்னால் கூட நம்பமாட்டார்கள். உதாரணமாக, உலகிலேயே வெடி குண்டு வெடித்தாலும் இறக்காத பூச்சி கரப்பான் பூச்சி என்று தெரியும். ஆனால் அந்த பூச்சி தலை இல்லாமல் கூட உயிருடன் இருக்கும் என்று சொன்னால் ஆச்சரியம் தானே.
இது போன்று நிறைய விசித்திரமான சில உண்மைகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் வேறு ஏதாவது இயற்கையில் உள்ள சில விசித்திரமான உண்மைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சரி, அந்த விசித்திரமான உண்மைகளை ப் பார்ப்போமா !!!
லிப்ஸ்டிக்
பெண்களுக்கு லிப்ஸ்டிக் என்றால் அவ்வளவு பிரியம். ஆனால் அந்த லிப்ஸ்டிக்கை போடும் முன், அது எதனால் ஆனது என்று சற்று யோசியுங்கள். ஏனெனில் லிப்ஸ்டிக்கில் மீன் செதில்கள் உள்ளன.
ஹெட்போன்
தொடர்ச்சியாக விருப்பமான பாடல்களை ஹெட்போனில் கேட்கிறீர் களா? அவ்வாறு ஒருமணிநேரம் பாட்டு கேட்டால், காதுகளில் பாக்டீ ரியாவானது 700 மடங்கு அதிகரிக்கும்.
இறால்
கடல் உணவுகளில் இறால் ரொம்ப பிடிக்குமா? அப்படியெனில் அடுத்த முறை அதன் தலையை சாப்பிடும் போது, அதன் இதயத்தை சாப்பிடும் உணர்வைப் பெறுவீர்கள். ஏனெனில் இறாலுக்கு இதயமானது அங்கு தான் உள்ளது.
நாக்கு
எப்படி கைவிரலில் உள்ள ரேகைகள்  ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறதோ, அதேப் போன்று உதடுகளின் ரேகைகளும்.
பட்டாம்பூச்சி
இந்த அழகான பட்டாம்பூச்சி, பூக்களில் உள்ள தேனின் சுவையை வாயால்தான் சுவைக்கிறது என்று நினைத்தால், அதுதான் தவறு. ஏனெ னில் உண்மையில் பட்டாம் பூச்சி தேனின் சுவையை அதன் கால்களில் தான் சுவைக்கிறது.
யானை
பாலூட்டிகளிலேயே யானை யின் பிரசவ காலம்தான் அதிகம்.அதுவும் 645நாட்கள், யானையானது தன் கருவை சுமக்கும்.
 
ஆங்கில மொழி
ஆங்கில மொழியில் உள்ள ரைம்ஸ்களில் மாதம், ஆரஞ்சு, ஊதா மற்றும் சில்வர் போன்ற வார்த்தைகளே வராது என்ற உண்மை தெரியுமா?
நெருப்புக்கோழி
உலகிலேயே மிகவும் பெரிய பறவையான நெருப்புக்கோழியின் மூளையைவிட, அதன் கண்கள் பெரியது என்பது ஆச்சரிய ப்பட வைக்கும் ஒரு உண்மை.
புகைப் பிடித்தல்
ப்போது சொல்லப்போகும் உண்மை அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது என்னவெனில், சிகரெட்டை பற்ற வைக்கும் லைட்டரானது, தீக்குச்சிக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது.
முழங்கை ட்ரிக்
கைகளை எவ்வளவு தான் அங்கும் இங் கும் அசைக்க முடிந்தாலும், முழங்கையை மட்டும் எவராலும் நாக் கால் தொட முடியாது. இப்போது அதை நிச்சயம் முயற்சிப்பீர்கள் பாருங்களேன்.
சிலந்தி
உலகில் எத்தனையே ஃபோபியாக்களைப் பார்த்திருப்போம். ஆனால் இன்றும் சிலந்தியின் மீதுள்ள பயத்தாலேயே உயிர் போகும் வாய்ப்பு உள்ளது.
தும்மல்
சொன்னால் நம்பமாட்டீர்கள், மிகவும் கடுமையாக தும் மினால் விலா எலும்புகளில் முறிவு ஏற்படும்.மேலும் இவ்வாறு திடீரென்று கடுமையாக தும்பும்போது, சிலநேரங்களில் தலை அல்லது கழுத்தில் உள்ள இரத்த நாளங்கள் சிதைவடைந்து இறப்பை சந்தி க்கவும்கூடும். ஆகவே இம் மாதிரியான கடுமையான தும்மல் வரும் சூழ்நிலையில், கண்களை திறந்துதும் மினால், இத்தகைய அபாயத்தில் இருந்து விடுபடலா ம்.
பிறப்பு
குழந்தையாக இருந்து வளர வளர, உடலின் கண்கள் மட்டும் பிறக்கும் போது இருந்த அளவில் தான் இருக்கம். ஆனால் மூக்கு மற்றும் காதுகள் வளர்ச்சியடையும் என்பது தெரியுமா?
 
கம்ப்யூட்டர்
கம்ப்யூட்டர் கீ போட்டின், ஒரே வரி சையில் ‘typewriter’ என்னும் மிகவும் நீளமான வார்த்தையை டைப் செய் யலாம்.
முதலை
பொதுவாக கீழ் தாடை இறங்கி தான் வாயானது திறக்கப்படும். ஆனால் முதலைக்குமட்டும்தான், மேல்தாடை தூக்கி வாய் திறக்கப் படும்.
கரப்பான்பூச்சி
வீட்டில் பெரும் தொல்லையைக் கொடுக்கும் கரப்பான் பூச்சி, தலை இல்லாமல், 9 நாட்கள் உயிருடன் வாழும் தன்மை கொண்டது. எனவே வீட்டில் கரப்பான்பூச்சி அடித்து கொல்லும்போது, கவனமாக அடித்து க் கொல்லுங்கள்.
வெங்காயம்
யாருக்குமே வெங்காயம் வெட்டுவது என்பது பிடிக்கா து. ஏனெனில் அது தேவையில்லாமல் அழ வைக்கும். ஆனால் அவ்வாறு வெ ங்காயத்தை வெட்டும் போது கண்ணீர் வரக்கூடாது என்றால், வாயில் சூயிங் கம் போட்டுக் கொண்டு வெட்டினால், உண்மையில் கண்களில் இருந்து கண் ணீர் வருவதை தவிர்க்கலாம்.
தூசிப்படிந்த வீடு
வீட்டில் அடிக்கடி தூசி படிகிறதா? அப்படியெனில் அதற்கு காரணம், சரு மத்தில்உள்ள இறந்தசெல்கள் தான். அவை தான் வீட்டில் படிந்து, வீட்டை அடிக்கடி தூசியடைய வைக் கின்றன.
கர்ப்பமான மீன்
வீட்டில் தங்கமீன் கர்ப்பமாக இருந்தால், அதனை ‘ட்விட்’ (twit) என்று தான் சொல்ல வேண்டுமே தவிர, ‘கர்ப்பமா ன தங்கமீன்’ என்று சொல்லக்கூடாது.

Wednesday, February 11, 2015

பெண்களே! உங்க க‌ணவர்களை, முந்தானையில் முடிந்து கொள்ள‍ சில ஆலோசனைகள்



பெரியர்கள் சொல்ல கேட்டிருப்பீர்கள். அவளா, அவளோட கணவனை முந்தானையில்
முடிந்து வைத்திருக்கிறாளே! என்று அது எப்ப‍டி சாத்தியம் என்று கேள்வி எழும். இதில் எந்தவிதமான மாய மந்திரமோ அல்ல‍து அடிமைத்தனமும் இல்லை. 
த‌னது கணவனுக்கு தான் எப்ப‍டி நடந்துகொள்ள‍ வேண்டும், எப்ப‍டி நடந்தால் தன்னை தனது கணவன் நேசிப்பான் என்றெல்லாம் ஆராய்ந்து பார்த்து, அதன் படி கணவனுக்குப் பிடித்த‍தை மனைவி செய்து, அவனது மனதில் நீங்கா இடம்பிடிக்க வேண்டும்.  அப்போது தான் அவனது மனதில் ஆஹா, தனக்காக அவளையே மாற்றிக்கொண்டு வாழ்கிறாளே! என்று அவரது மனைவியான உங்கள் மீது ஒரு மதிப்புத் தோன்றும் அந்த மதிப்பு நாளடைவில் மரியாதையாக மாறி உங்களது வார்த்தைகளுக்கு கட்டுப்படுவார்.
இதைத்தான் பெரியவர்கள் தன் கணவனை முந்தானையில் முடிந்துகொண்டாள் என்று கூறுவார்கள்.
“கல்யாணமான புதுசுல தேன் தடவின மாதிரி இனிக்க, இனிக்க எப்படிப் பேசுவாரு. இப்ப எதுக்கெடுத்தாலும் எரிஞ்சு விழறாரு. அதுக்குள்ள நான் அலுத்துப் போயிட்டேன் போலருக்கு” என்று அலுப்பா? இதையெல்லாம் பின்பற்றிப் பாருங்களேன்.பேச்சைக் குறைத்துக் கொள்ளுங்கள். அவர் பேசுவதைக் காது கொடுத்துக் கேட்க ஆரம்பியுங்கள்.
உங்களுடன் வண்டியில் போகும் போது உங்களுக்குத் தெரிந்தே மற்ற பெண்களை சைட் அடிக்கிறாரா? உங்களுக்குத் தெரியாமல் தனது வண்டியில் பெண்களுக்கு லிஃப்ட் தருகிறாரா? அதையெல்லாம் பெரிதுபடுத்தா தீர்கள். மன்னித்து, மறந்துவிடுங்கள்.ஏதேனும் முக்கி யமான பிரச்சனை குறித்து விவாதிக்கிறீர்களா? பேச்சு சண்டையில் முடியும் போலத் தெரிகிறதா? சட்டென்று பேச்சை நிறுத்திக் கொள்ளுங்கள் அல்லது வேறு விஷயத்திற்குத் தாவி விடுங்கள்.

அவரைப் பார்த்துப் பொறாமைப்படுங்கள். அது ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். கட்டுப்பாட்டிற்குள் இருக்கவேண்டும். பைசா பெறாத விஷயத்திற்குக் கூடத்தானே முடிவெடுக்க வேண்டும் என்று நினைப்பவரா? போகட்டும், விட்டுவிடுங்கள். அந்த முடிவு பாதக விளைவுகளைத் தரும்போது நாசுக்காய் சுட்டிக் காட்டுங்கள். உங்களுக்குள் என்னதான் கருத்து வேறுபாடு இ ருந்தாலும் அவற்றை யெல்லாம் பெட்ரூமுக்கு உள்ளே வர அனுமதிக்காதீர்கள். உங்கள் உடல், மனநிலைக் கேற்ப அடிக்கடி செக்ஸ் உறவில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.

அம்மாவை நேசியுங்கள். உங்கள் அம்மாவை இல்லை. அவரது அம்மாவை. கொஞ்சம் கஷ்டம்தான். இருந்தாலும் முயற்சி செய்து பாருங்கள். பிறகென்ன, மனிதர் உங்களைத் தலையில் வைத்துக்கொண்டாட ஆரம்பித்து விடுவார்.போனால் போன இடம், வந்தால் வந்த இடம் என்று இருப்பவரா உங்களவர்? உங்களை எங் கேயாவது அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லி விட்டு, சொன்ன வார்த்தையைக் காப்பாற்றத் தவறி விடுகிறாரா? ஆளைப்பார்த்தும் ஆத்திரமாகக் கத்தாதீர்கள். ஏமாற்றத்தை வார்த்தைகளிலோ, முகத்திலோ காட்டிக்கொள்ளாதீர்கள். அவரது செயல் உங்களை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்கிறபடி உங்கள் நடவடிக்கை இருக்கட்டும். மனிதர் தானாக வழிக்கு வருவார். அடுத்தமுறை அதே தவறைச் செய்யத் தயங்குவார்.

அவரது நண்பர்கள், உறவினர்கள் என எல்லோரிடமும் நன்றாகப் பேசிப் பழகுங்கள். யார் மீதாவது உங்களுக்கு வெறுப்பு இருந்தாலும் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாதீர்கள்.உங்களவருக்கு நெருங்கிய நண்பர்களாவோ, உறவினர்களாகவோ இருந்தாலும் கூட மூன்றாம் நபருக்கு எதிரில் அவரை விட்டுக் கொடுத்துப் பேசாதீர்கள்.

எக்காரணம் கொண்டும் உங்களவரை மற்ற ஆண்களுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள். இந்த விஷயத்தில் பெரும் பாலான ஆண்களுக்குப் பரந்த மனப்பான்மை கிடையாது.கணவன்-மனைவிக்குள் சண்டைகளே இருக்கக் கூடாது என்று நினைக்காதீர்கள். அப்படி சண்டைகளே இல்லாமல் வாழ்வதாகச் சொல்பவர்களையும் நம்பாதீர்கள்.

Saturday, February 7, 2015

மேக்கப் போடும் பெண்களுக்கான அவசியமான ஆலோசனைகள்



திருமணம், திருவிழா ஏதேனும் பார்ட்டி என்று வந்தால் உடனே
மேக்அப் போட்டு கொண்டு அழகாய்வலம் வருவோம். நாம் போட்டு இருக்கும் மேக் அப் கலைந்து விடாமல் நம்மை அழகாய் காட்டவேண்டும். அழகாய் காட்டுவதற்கு நாம் போட்டு இருக்கும் மேக் அப் கலையாமல் பாதுகாக்க வேண்டும். மேக் அப் போடும்போது அதிகமாகி விட் டாலும் அதனை திருத்தமாக போ டுவதில்தான் இருக்கிறது அழகின் ரகசியம். மேக்அப் போட ஆரம்பிக் கும்போதே போதுமான அளவில்  மேக் அப் செய்து கொள்ள வேண்டும். மேக் அதிகமாக போட்டு விட்டோமே என்று நினைப்பவர்கள் சிறிதளவு பஞ்சு எடுத்து அதிகமுள்ள இடங்களில் துடைக்கவும், அந்த இடத்தில் காம்பாக்ட் பவுடர் போட்டு அட் ஜஸ்ட் செய்ய வேண்டும்.
அதிகப்படியான மேக் அப் செய்திருந்தால் அதனை சரி செய்ய பே ஷியல் கிளன்சர் சிறந்த பொருளாகும். அதிகமாக இருக்கும் இடங்க ளில் கிளன்சர்போட்டு கழுவலாம். கன்னத்தில் அதிகமாக ரூஜ் அப்பி விட்டால் பஞ்சு எடுத்து கன்னங்களில் உருட்டிவிட்டு சிறிதளவு காம்பாக்ட் பவுடர் போட்டு அட்ஜஸ்ட் செய்யலாம். கண் இமைகளின் மேல் ஐஷேடோ அதிகமாவிட்டால் சிறித ளவு கிரீம்போட்டு கழுவிவிடலாம் . உதடுகளில் லிப்ஸ்டிக் அதிகமா கிவிட்டால் பிளைன் டிஸ்யூ பேப்பர் வைத்து லேசாக உதட்டின் மேல் வைத்து ஒற்றி எடுக் கலாம்.
இவ்வாறுசெய்தால் லிப்ஸ்டிக் அதிகமாகபோட்டதுபோல தெரியாது. பண்டிகை, திருவிழா மற்றும் பார்ட்டிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய பின்னர், தூங்கச் செல்வதற்கு முன்பாக மேக்கப்பை நன்றாகக ழுவிவிடவும். இதனால் சருமத்தின் இயல்புத்தன்மை பாது காக்கப்படும். மேக்அப் போட் டபடியே தூங்குவது சருமத்தி ற்கு பாதிப்பை ஏற் படுத்தும்.
எனவே சருமத்தைப் பற்றி க வலைப்படுபவர்கள் மேக்அப் கலைத்து விட்டு தூங்குவது பாதுகாப்பானது என்கின்றன ர் அழகியல் நிபுணர்கள். மேக்கப்பை கழுவி சுத்தம் செய்யும் போது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் முகத்தில் கரும் புள்ளிகள் ஏற்பட்டு விடும்.

குறிப்பாக கண்களைச் சுற்றியிருக் கும் மேக்கப்பை கலைப்பதற்கு பேபி ஷாம்புவை பயன்படுத்துவது சிறந்ததாகும். 2சொட்டு பேபி ஷாம் புவை எடுத்து கைவிரல்களில் தட விக்கொண்டு, கண் இமை மற்றும் கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடவவும். பின்னர் நன்றாக கண் களை மூடிக் கொண்டு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இதன் பின்னர் தூங்கினால் நன்றாக தூக்கமும் வரும் அழகும் பாதுகாக்கப்படும்.