Thursday, April 30, 2015

தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடித்தால், ஏற்படும் விளைவு


நாம், தினமும் எவ்வ‍ளவு தண்ணீர் குடித்து வருகிறோம் என்று கேட்டால்,  ஒன்று இரண்டு குவளை (தம்ளர்) இருக்கும் என்பீரகள். இதற்கு காரணம் தண்ணீருக்கு பதிலாக
பாட்டிலிலடைக்க‍ப்பட்ட‍குளிர்பானங்கள் செயற்கைபானங்களைவாங்கி , உங்களது வாழ்க்கைத் தரத்தை காண்பிக்கவும், வறட்டு கௌரவத்திற்காகவும், குடிப்பீர்கள். இத னால் உங்கள் உடல் எடையும் அதிகமாகி, தொப்பையும்போட்டு உங்களது உடலமைப்புசீர்க்கெட்டு போயிருக்கும்.
இதோ உங்கள் உடல்எடையும் குறைக்க‍வும், தொப்பையைக்கரைக்க‍வும் ஓர் எளிய யோசனை
தினமும் குறைந்தது 8டம்ளர் தண்ணீர்குடித்தால் ஏற்படும் விளைவு நன்மையில்தான் முடியும் ஆம்! தினமும் குறை ந்தது 8 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடலில் ஏற்படும் வற ட்சியைப்போக்கி குளிர்ச்சியாக வைத்திருப்பதோடு, நமதுஉடம்பில் கொட்டிக்கிடங்கும் நச்சுக்கள் அனைத்தும் வியர் வை, சிறுநீர் வழியாக‌ வெளியேற்றிவிடும். மேலும் அவ்வப் போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்து வந்தால், உடலின்மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் தொப்பையும்குறைந்து, உங்கள்உடலின் கட்ட‍மைப்புசீராகும் .

Monday, April 20, 2015

வெள்ளி நகைகள் கருக்காமல் இருக்க



அரை டம்ளர் தண்ணீரில் ஷாம்பூ போட்டுக் குலுக்கி அரைமணி நேரம் கழித்த பிறகு அதில்
வெள்ளி கொலுசுகளைப் போட்டுக் கசக்கி, சுத்தமான தண்ணீரில் தேய்த்துக் கழுவி ஈரம் போகத் துடைத்தால் பளபளவென்று இருக்கும்
வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைதத் தவிர்க்கலாம்.
புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரைமணி நேரம் ஊறப்போட்டு பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.
கல் பதிக்காத நகைகளை ஆல்கஹாலில் அமிழ்த்தி எடுத்து துடைத்தால் அவை பளபளப்பாகிவிடும். கல் பதித்த நகைகளை ஆல்கஹாலில் அமிழ்த்தி எடுக்கக்கூடாது.
வெள்ளி நகைகள் மற்றும் பாத்திரங்கள் பளபளக்க அவற்றை ஜாடியில்  சில நிமிடங்கள் ஊறவைத்து   குளிர்ந்த தண்ணீரில் கழுவினால் போது மானது.

Friday, April 17, 2015

அகத்தின் அழகு நகத்தில் தெரியும்


உடல் ஆரோக்கியத்துக்கு முக்கிய பங்கு வகிப்பன நகங்கள். நகங்களை, முறையாக பராமரிப்பது அவசியம். அகத்தின் அழகை பிரதிபலிப்பதில், நகங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. உடல் உள்ளுறுப்புகளில் ஏதாவது பாதிப்பு இருந்தால், நகம் அதை வெளிப்படுத்தி விடும். நகங்கள் பாதிக்கப்பட்டால், அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.
வைட்டமின் சி குறைபாடு இருந்தால், நகங்கள் பாதிக்கப்படும். நகம் கடிக்கும் பழக்கம், உடலுக்கு உபாதைகளை ஏற்படுத்தும். நகக்கணுக்களை நோய் கிருமிகள் அதிகம் தாக்கும். நகம் கடிக்கும் போது இந்த கிருமிகள் உடலுக்குள் செல்வதால், எளிதில் நோய் உபாதைகளுக்கு வழி வகுத்து விடும். உணவு உட்கொள்ளும் முன்பும், கழிப்பிடத்துக்கு சென்று வந்த பின்பும், கைகளை நன்றாக, சோப்பு போட்டு தேய்த்து கழுவ வேண்டும்.
பெண்கள் பாத்திரம் தேய்த்த பின், கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் ரசாயனங்கள், நகக்கணுக்களில் தங்கிவிட்டால், நகங்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். குழந்தைப் பருவம் தொட்டே, இத்தகைய பழக்கங்களை ஏற்படுத்த வேண்டும். சர்க்கரை நோயாளிகள், நக பராமரிப்பில் தனி கவனம் செலுத்த வேண்டும். கை நகங்களை போலவே கால் நகங்களின் பராமரிப்பிலும் அக்கறை செலுத்த வேண்டும்.
பெரும்பாலான நோய் தொற்றுகளுக்கு, நகமே முக்கிய காரணம். பெடிக்யூர், மெனிக்யூர் என, நகங்களை பராமரிக்க பிரத்யேக பராமரிப்பு முறைகளும் சாதனங்களும் உள்ளன. இதற்கென அழகு நிலையங்கள் இருந்தாலும், வீட்டிலேயே செய்து கொள்வது எளிது. வாரத்தில், இரண்டு அல்லது மூன்று முறை, இந்த பராமரிப்பு முறையை மேற்கொள்ளலாம். நகங்களில் அடிபட்டாலோ, சொத்தை, நகச்சுற்று போன்ற பாதிப்புகள் இருந்தாலோ, மருத்துவரை நாடுவது நல்லது. மருத்துவக் குணம் கொண்ட மருதாணி இலைகளை அரைத்து
கைகளில் இடுவது நகங்களை பாதுகாப்பதோடு, உடலுக்கும் குளிர்ச்சி தரும்.
தரமான நெயில் பாலிஷ்களை உபயோகிப்பது நகங்களுக்கு பாதுகாப்பானது. அடிக்கடி நகக்கணுக்களில் மிருதுவான பிரஷ் அல்லது துணிகளைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். நகம் வெட்டும் போது சதைப்பகுதி பாதிக்கப்படாமல் கவனமாக வெட்ட வேண்டும். நகங்கள் சிலருக்கு உடைந்து போகும். இதற்கு கால்சியம் குறைபாடுதான் காரணம்.
உணவில், அதிகம் கால்சியம் சேர்த்துக் கொள்வதாலும், மருத்துவர் பரிந்துரையின் பேரிலும், கால்சியம் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதாலும், பாதிப்பு சரியாகும். சர்க்கரை நோயாளிகள், இதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காய்கறிகள், பழங்கள் என, ஊட்டச்சத்துள்ள சரிவிகித உணவு சாப்பிடுவதன் மூலம் நகங்களை பாதுகாக்கலாம். இதில், எவ்விதத்திலும் அலட்சியம் காட்டக் கூடாது.