Posted By Muthukumar,On Sep 29,2015
ஜோதிடம் பார்க்கும்போது,ராசிபலன்,நட்சத்
இருவருக்கும் ராசி பொருத்தம்,லக்ன பொருத்தம்,சந்திர லக்னத்துக்கு ஏழாம் அதிபதி,லக்னத்துக்கு ஏழாம் அதிபதி மறையாமல் இருக்கிறதா என பார்த்துவிட வேண்டும்..அதன் பின் இருவருக்கும் பாதகாதிபதி திசை நடக்கிறதா ,பகை,நீச ,வக்ர ,பாவ கிரக திசை நடக்கிரதா என பார்த்துக்கொள்ள வேண்டும்.குரு,சுக்கிரன் இருவருக்கும் கெடாமல் இருக்கிறதா என பார்த்துக்கொள்ள வேண்டும்.அடேயப்பா இவ்வளவு பார்த்தா 40 வயசானாலும் கல்யாணம், பண்ண முடியாது என்கிறீர்களா..? நல்ல ஜாதகமாக இருந்தால் நல்ல ஜாதகத்துடன் இணைப்பதே சிறப்பு.நம்முடையது ஓட்டை வண்டி எனில் ,சதாரணமாக பார்த்தாலே போதும்.நம்ம ஜாதகம் மோசமாக இருந்தால் ஒரு நல்ல பெண்ணின் வாழ்க்கையை ,நல்ல பையன் வாழ்க்கையை கெடுக்கவும் கூடாது.
7ஆம் அதிபதி,எட்டாம் அதிபதி,குடும்பாதிபதி கெடாமல் இருக்கும் ஜாதகங்கள் ,அதே போல நல்ல ஜாதகத்துடன் சேர்ந்தால் நல்ல வாழ்க்கை அமையும் இல்லையேல் பிரிவு உண்டாக்கிவிடுகிறது.
7ஆம் அதிபதி கெட்டிருக்கும் பையனுக்கு பொண்ணை கொடுத்தால் அவன் மனைவியை நேசிக்க மாட்டான்...பத்தோடு பதினொன்னு என ஆகிவிடும்.மதிக்கவும் மாட்டான்...நாகரீகமாகவும் நடந்து கொள்வதில்லை.
12ஆம் இடம் கெட்டுவிட்டால் 3ஆம் அதிபதி கெட்டுவிட்டால் இரவில் சந்தோசமாக இருக்க முடியாது.விரக்திதான் உண்டாகும்.கிளியை பிடிச்சு பூனை கையில கொடுத்தது மாதிரி என்பது ஏழாம் இடம் கெட்டவனுக்கு.
உலக அழகியை கிழவனுக்கு கட்டிகொடுத்தால் என்ன பலன் கிடைக்கும்..? அது போலத்தான் 12ஆம் இடம் கெட்டவனுக்கும் 3ஆம் இடம் கெட்டவனுக்கும் கட்டிகொடுப்பது.வீரியம் இல்லாத ஜாதகங்களை இணைத்துவிட்டால் கள்ளக்காதல்தான் பெருகும்...கள்ளக்காதல் விபரீதத்தில்தான் முடியும்
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கனவன் கொலை என பேப்பரில் செய்தி படிக்கிறோம்..இப்படி விபரீதம் உண்டாக காரணம் வன்முறை உண்டாக்கும் கிரகங்களின் இணைவுதான் .மேலும் கணவனுக்கோ மனைவிக்கோ,உறவில் திருப்தியின்மை,அல்லது அதீத விருப்பங்கள்தான் சிக்கலை உண்டாக்குகின்றன..அன்பும்,பாசமு
செவ்வாய் ,ராகு வன்முறை எண்ணத்தை உண்டாக்கும் இவற்றுடன் ஏழாம் அதிபதி சேர்ந்துவிட்டால் குடும்பத்தில் கலவரம்,வன்முறை வெடிக்கும்.சனி,செவ்வாய்,சுக்கி
|
Tuesday, September 29, 2015
திருமண பொருத்தம்-நிலையான குடும்ப வாழ்க்கை
அதிக வருமானம்… அற்புதமான எதிர்காலம்
Posted By Muthukumar,On Sep 29,2015
படித்து விட்டு வேலைக்குப் போய் சம்பாதிப்பதைவிட, ஏதாவது ஒரு தொழிலை சொந்தமாக ஆரம்பித்து வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தினை இன்றைக்கு பலரிடமும் வெளிப்படையாகப் பார்க்க முடிகிறது. தவிர, பல தொழில்களுக்கும் இப்போது பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. சிறிய முதலீட்டில் நடத்தப்படும் இட்லி கடை இருந்தாலும் சரி,ஓரளவு பெரிய முதலீட்டில் நடத்தப்படும் லாண்டரி ஷாப்களாக இருந்தாலும் சரி, நிறையவே வருமானம் தருவதாக இருக்கின்றன.
இதற்கு முக்கிய காரணம், மக்களிடம் அதிக அளவில் புழங்கும் பணம்தான். இன்றைக்கு எதையுமே நினைத்தவுடன் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள். இதற்காக எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருக்கிறார்கள்.
தவிர, தற்போது தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழ்நிலை நிறையவே இருக்கிறது. தொழில் துவங்கத் தேவையான முதலீடுகளான வங்கிக் கடன் எளிதாகவே கிடைக்கிறது. கொஞ்சம் பெரிய தொழில் எனில், பிரைவேட் ஈக்விட்டி என்னும் பிஇ ஃபண்டுகள் பணத்தை முதலீடு செய்யத் தயாராகவே இருக்கின்றன.
வித்தியாசமான அணுகுமுறையும், கடினமான உழைப்பும் உங்களிடம் இருந்தால், நீங்கள் தொடங்கும் தொழிலில் நிச்சயம் வெற்றி பெறலாம் என்ற சூழ்நிலையே தற்போது உள்ளது. இந்தச் சூழ்நிலையில் அதிக லாபம் தரும் அற்புதமான ஐந்து தொழில்களை வாசகர்களுக்குத் தருகிறோம். இந்த தொழிலில் உள்ள வாய்ப்புகள் என்ன, இந்தத் தொழில் துவங்குவதற்கு என்னென்ன தேவை என்பதைக் குறித்து எடுத்துச் சொல்லி இருக்கிறோம். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த தொழில்களை கவனிக்கலாமே!
1 ரெடி டு ஈட் ஃபுட்ஸ்!

உலக அளவில் ரெடி டு ஈட் ஃபுட்டுக்கான வரவேற்பு அதிகம் உள்ளது. மாறி வரும் வாழ்க்கை முறையின் காரணமாக இதன் தேவை அதிகரித்துள்ளது. இப்போது பல குடும்பங்களில் கணவனும் மனைவியும் வேலைக்குப் போகிறார்கள். மேலும், பலரது சம்பளமும் இப்போது குறிப்பிடத்தகுந்த அளவு உயர்ந்திருப்பதால், செலவு செய்யவும் தயாராக இருக்கிறார்கள். தவிர, வேலை காரணமாக சொந்த ஊரைவிட்டு, வெளியூருக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதால், இந்த ரெடி டு ஈட் ஃபுட்டுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்களின் எண்ணிக்கை கூடுவதால் ஏற்றுமதிக்கும் உகந்த பொருளாக உள்ளது.

சந்தை மதிப்பு: ரூ. 4,000 கோடி, இத்துறை வருடத்துக்கு 21.99% வளர்ச்சி அடைகிறது.
இந்தத் தொழில் துவங்குவதற்கு FSSAI லைசென்ஸ் வாங்க வேண்டும்.
தேவையான இயந்திரங்கள்: இயந்திரம், சப்பாத்தி செய்யும் இயந்திரம், டபுள் ஸ்பைரல் மிக்ஸர், பிரையிங் மெஷின் ஆகியவை தேவை.
தேவையான ஆட்கள்: 2 நபர்கள்.
தொழில் வாய்ப்புகள்: சென்னை, கோவை மற்றும் வளர்ச்சி அடையும் மாவட்டங்கள்.
வரிக்குப் பிந்தைய வருமானம்: 30 சதவிகிதம்

‘‘மாதம் ரூ.70-90 ஆயிரம் வருமானம்!’’
2 லாண்டரி சர்வீஸ்!
லாண்டரி சர்வீஸ் என்பது இன்றைய வேகமான வாழ்க்கை முறைக்கு அவசியமானதாக மாறி உள்ளது. 2017-ம் ஆண்டுக்குள் லாண்டரி சேவை 65 சதவிகிதம் வளர்ச்சி அடையும் என சி அண்டு டபிள்யூ (Cushman & Wakefield) ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும், புதிதாக 52 ஆயிரம் ஹோட்டல்கள் துவக்கப்படும் எனவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளது. மேற்கூறிய துறைகள் வேகமாக வளர்ச்சி அடையும்போது லாண்டரி சேவையின் தேவையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

புதிதாக வேலைக்குப் போகும் இளைஞர்களின் வளர்ச்சி அதிகரித்து வருவதாலும் இந்த லாண்டரி சேவைக்கு அதிக வரவேற்பு உள்ளது. அதாவது, அவர்களின் துணிகளைத் துவைத்து அயன் செய்து தருவதற்கான கட்டணம் என்பது மிகவும் குறைவு. இந்த தொழிலுக்கு தண்ணீர் அதிகம் தேவை.

தேவையான இயந்திரங்கள்: தொழில் துறைக்குத் தேவையான வாஷிங் மெஷின், ஹைட்ரோ கரைப்பன், துணிகளை உலர்த்தும் இயந்திரம், அயன் செய்யும் டேபிள் மற்றும் அதற்கான இயந்திரம்.
தேவையான ஆட்கள்: அதிகபட்சம் 40 நபர்கள்.
தொழில் வாய்ப்புகள்: மருத்துவமனை, ஹோட்டல், வேலைக்குப் போகும் தனிநபர்கள், கல்வி நிறுவனங்கள், ரயில்வே, பேருந்துகள் போன்றவை.
வரிக்குப் பின் வருமானம்: 16% கிடைக்கும்.

‘‘20 – 25% லாபம் கிடைக்கும்!’’
3 கார் வாஷிங்/சர்வீஸ் சென்டர்!

இரண்டு சக்கர வாகனத்துக்கு இணையாக கார்களின் தேவை இன்று அதிகரித்துள்ளது. கார் வாங்குவதற்கு எளிதாகக் கடன் கிடைப்பது இதற்கு ஒரு முக்கியமான காரணம் ஆகும். அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் கார்களின் எண்ணிக்கை 40 – 45 கோடியாக உயர வாய்ப்புள்ளது. தற்போது 7 கோடி கார்கள் உள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் உலகின் 5-வது மிகப் பெரிய கன்ஸ்யூமர் நாடாக இந்தியா மாறும். வேகமாக வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே, கார் பராமரிப்பு என்பது அவசியமான ஒன்றாக மாறி உள்ளது.

தேவையான இயந்திரம்: பிரஷ், ஜெட் ஸ்பிரே, உலர்த்தும் இயந்திரம், சென்சர், கன்ட்ரோலர், பம்ப், டைர்வ்ஸ், நாசில் போன்றவை.
தொழில் வாய்ப்பு: வளர்ச்சி அடையும் அனைத்துப் பகுதிகளும்.
வரிக்குப் பின் வருமானம்: 30% கிடைக்கும்.

‘‘கவனமாக செய்தால் கூடுதல் லாபம்!’’
4 பயோமாஸ்/எரிபொருள் தயாரிப்பு!

தொழில் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதால், இந்த பயோமாஸ் பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது. முக்கியமாக டீ, புகையிலை, லெதர், டெக்ஸ்டைல்ஸ் தொழிற்சாலைகளில் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. மேலும், நிலக்கரியின் விலை அதிகம் என்பதால், பாய்லர் உள்ள தொழிற்சாலைகள் அனைத்திலும் இதன் பயன்பாடு அதிகம். அதோடு அதிலிருந்து கிடைக்கும் வெப்பமும் குறைவானதாகவே இருக்கும். இதனால் இந்தக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் எரிபொருளுக்கு அதிக வரவேற்பு உள்ளது.

தேவையான இயந்திரம்: கழிவுகளை அரைக்கும் இயந்திரம், ஜெனரேட்டர் அவசியம் தேவை.
தொழில் வாய்ப்பு: தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இடம். டீ தயாரிப்பு தொழிற்சாலை உள்ள ஊட்டியில் அதிக வரவேற்பு உள்ள தொழில் இது. இதில் மட்டும் வருடத்துக்கு 50 ஆயிரம் டன் கழிவு தேவைப்படுகிறது.
வரிக்குப் பின் வருமானம்: 10% கிடைக்கும்.

" எப்போதும் வரவேற்பு!"
5 டிஷ்யூ பேப்பர்!

சுத்தமாக இருக்க வேண்டும் என்பது இன்றைக்கு எல்லோரது எதிர்பார்ப்பு. இதனால் மட்டும்தான் நோய்களின் தாக்கம் குறைவாக இருக்கும் எனவும் நம்புகிறார்கள். மேலும், ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் யூஸ் அண்ட் த்ரோ கலாச்சாரம் நம் நாட்டில் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் மனிதனின் அன்றாடத் தேவைகளுக்கு டிஷ்யூ பேப்பர் அவசியமாக உள்ளது. மேலும், ஹோட்டல், மருத்துவமனை, சுற்றுலா ஸ்தலங்கள், வீடுகள், நிறுவனங்களில் இதன் தேவை அதிகமாக உள்ளது. டிஷ்யூ பேப்பர் தொழிலின் வளர்ச்சி, வருகிற 2016 ஆண்டுக்குள் சராசரியாக 4.9 சதவிகிதமாக இருக்கும்.

தேவையான இயந்திரம்: பலவிதமான டிஷ்யூ பேப்பர்கள் சந்தையில் தேவைப்படுகிறது. எனவே, ஒவ்வொரு விதமான டிஷ்யூ பேப்பரைத் தயாரிக்க தனித்தனி மெஷின் உள்ளது. 27X27 செ.மீ அளவுள்ள டிஷ்யூ பேப்பர் தயாரிப்பதற்கு டூ கலர் பிரின்டிங் மெஷின், எம்போஸிங் மெஷின், ரோலர் ஆகியவை தேவை. இந்த எந்திரங்கள் கோவை, டெல்லி, பெங்களூரு ஆகிய இடங்களில் கிடைக்கிறது.
தொழில் வாய்ப்பு: ஹோட்டல், மருத்துவமனை, பியூட்டி பார்லர்கள், வீடுகள் ஆகிய இடங்களில் வாய்ப்பு அதிகம் உள்ளது.
வரிக்குப் பின் வருமானம்: 10% கிடைக்கும்.

‘‘நேரடி மார்க்கெட்… கூடுதல் லாபம்!’’
குறிப்பு: மேற்கூறிய அனைத்து தொழில்களுக்கும் என்இஇடி(New Entrepreneurship Cum Enterprise Development Scheme (NEEDS) என்ற திட்டத்தின் கீழ் இயந்திரம் வாங்கும் மதிப்பில் 25% மானியம் கிடைக்கும்.
Related
முதலீட்டில் நஷ்டத்தைத் தவிர்க்கும் 10 குணாதிசயங்கள்!In "உபயோகமான தகவல்கள்"
கூகுள் தேடல் டிப்ஸ்In "கம்ப்யூட்டர் செய்தி"
ஹோம் பட்ஜெட்: சீட்டுத் திட்டம்: லாபமா, நஷ்டமா?In "உபயோகமான தகவல்கள்"
Posted in: உபயோகமான தகவல்கள்
Subscribe to:
Posts (Atom)