Tuesday, September 29, 2015

திருமண பொருத்தம்-நிலையான குடும்ப வாழ்க்கை

Posted By Muthukumar,On Sep 29,2015

ஜோதிடம் பார்க்கும்போது,ராசிபலன்,நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்த்துவிட்டு இரண்டு பேரும் டாக்டராக இருக்காங்க..அருமையா ஜாதகமும் பொருந்தியிருக்கு என பார்ப்பது அதிகம்..அதாவது முதலில் இருவரது அந்தஸ்துக்கு மட்டுமே பொருத்தம் நிர்ணயம் செய்யப்படுகிறது..அதன் பின் தான் ஜாதக பொருத்தம் ..அதையும் லைட்டா பார்த்துக்குவோம் என்பது போல ஊறுகாய் மாதிரி தொட்டு கொள்ளுபவர்களே அதிகம்.

இருவருக்கும் ராசி பொருத்தம்,லக்ன பொருத்தம்,சந்திர லக்னத்துக்கு ஏழாம் அதிபதி,லக்னத்துக்கு ஏழாம் அதிபதி மறையாமல் இருக்கிறதா என பார்த்துவிட வேண்டும்..அதன் பின் இருவருக்கும் பாதகாதிபதி திசை நடக்கிறதா ,பகை,நீச ,வக்ர ,பாவ கிரக திசை நடக்கிரதா என பார்த்துக்கொள்ள வேண்டும்.குரு,சுக்கிரன் இருவருக்கும் கெடாமல் இருக்கிறதா என பார்த்துக்கொள்ள வேண்டும்.அடேயப்பா இவ்வளவு பார்த்தா 40 வயசானாலும் கல்யாணம், பண்ண முடியாது என்கிறீர்களா..? நல்ல ஜாதகமாக இருந்தால் நல்ல ஜாதகத்துடன் இணைப்பதே சிறப்பு.நம்முடையது ஓட்டை வண்டி எனில் ,சதாரணமாக பார்த்தாலே போதும்.நம்ம ஜாதகம் மோசமாக இருந்தால் ஒரு நல்ல பெண்ணின் வாழ்க்கையை ,நல்ல பையன் வாழ்க்கையை கெடுக்கவும் கூடாது.

7ஆம் அதிபதி,எட்டாம் அதிபதி,குடும்பாதிபதி கெடாமல் இருக்கும் ஜாதகங்கள் ,அதே போல நல்ல ஜாதகத்துடன் சேர்ந்தால் நல்ல வாழ்க்கை அமையும் இல்லையேல் பிரிவு உண்டாக்கிவிடுகிறது.

7ஆம் அதிபதி கெட்டிருக்கும் பையனுக்கு பொண்ணை கொடுத்தால் அவன் மனைவியை நேசிக்க மாட்டான்...பத்தோடு பதினொன்னு என ஆகிவிடும்.மதிக்கவும் மாட்டான்...நாகரீகமாகவும் நடந்து கொள்வதில்லை.

12ஆம் இடம் கெட்டுவிட்டால் 3ஆம் அதிபதி கெட்டுவிட்டால் இரவில் சந்தோசமாக இருக்க முடியாது.விரக்திதான் உண்டாகும்.கிளியை பிடிச்சு பூனை கையில கொடுத்தது மாதிரி என்பது ஏழாம் இடம் கெட்டவனுக்கு.
உலக அழகியை கிழவனுக்கு கட்டிகொடுத்தால் என்ன பலன் கிடைக்கும்..? அது போலத்தான் 12ஆம் இடம் கெட்டவனுக்கும் 3ஆம் இடம் கெட்டவனுக்கும் கட்டிகொடுப்பது.வீரியம் இல்லாத ஜாதகங்களை இணைத்துவிட்டால் கள்ளக்காதல்தான் பெருகும்...கள்ளக்காதல் விபரீதத்தில்தான் முடியும் 

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கனவன் கொலை என பேப்பரில் செய்தி படிக்கிறோம்..இப்படி விபரீதம் உண்டாக காரணம் வன்முறை உண்டாக்கும் கிரகங்களின் இணைவுதான் .மேலும் கணவனுக்கோ மனைவிக்கோ,உறவில் திருப்தியின்மை,அல்லது அதீத விருப்பங்கள்தான் சிக்கலை உண்டாக்குகின்றன..அன்பும்,பாசமும் ஒருவர் மேல் ஒருவருக்கு இருந்தாலும்,குரு எனும் நல்லவர் ஜாதகத்தில் கெடாமல் இருந்தாலும்,குடும்பாதிபதி கெடாமல் இருந்தால் குடும்பம் நல்லபடியாய் நடக்கும்.

செவ்வாய் ,ராகு வன்முறை எண்ணத்தை உண்டாக்கும் இவற்றுடன் ஏழாம் அதிபதி சேர்ந்துவிட்டால் குடும்பத்தில் கலவரம்,வன்முறை வெடிக்கும்.சனி,செவ்வாய்,சுக்கிரன் இனைவு உண்டானால் பாலியல் வன்முறை உண்டாகிவிடும்...இந்த ஜாதகத்தை சேர்க்கும்போது கவனமாக இல்லாவிட்டால் குடும்பத்தில் பல குழப்பங்களை உண்டாக்கிவிடும்.குடும்பமே சிக்கலான சூழலில் தள்ளப்பட்டுவிடும்.

அதிக வருமானம்… அற்புதமான எதிர்காலம்


டித்து விட்டு வேலைக்குப் போய் சம்பாதிப்பதைவிட, ஏதாவது ஒரு தொழிலை சொந்தமாக ஆரம்பித்து வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணத்தினை இன்றைக்கு பலரிடமும் வெளிப்படையாகப் பார்க்க முடிகிறது. தவிர, பல தொழில்களுக்கும் இப்போது பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. சிறிய முதலீட்டில் நடத்தப்படும் இட்லி கடை இருந்தாலும் சரி,ஓரளவு பெரிய முதலீட்டில் நடத்தப்படும் லாண்டரி ஷாப்களாக இருந்தாலும் சரி, நிறையவே வருமானம் தருவதாக இருக்கின்றன.
இதற்கு முக்கிய காரணம், மக்களிடம் அதிக அளவில் புழங்கும் பணம்தான். இன்றைக்கு எதையுமே நினைத்தவுடன் வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்றுதான் மக்கள் நினைக்கிறார்கள். இதற்காக எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக இருக்கிறார்கள்.
தவிர, தற்போது தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழ்நிலை நிறையவே இருக்கிறது. தொழில் துவங்கத் தேவையான முதலீடுகளான வங்கிக் கடன் எளிதாகவே கிடைக்கிறது. கொஞ்சம் பெரிய தொழில் எனில், பிரைவேட் ஈக்விட்டி என்னும் பிஇ ஃபண்டுகள் பணத்தை முதலீடு செய்யத் தயாராகவே இருக்கின்றன.
வித்தியாசமான அணுகுமுறையும், கடினமான உழைப்பும் உங்களிடம் இருந்தால், நீங்கள் தொடங்கும் தொழிலில் நிச்சயம் வெற்றி பெறலாம் என்ற சூழ்நிலையே தற்போது உள்ளது. இந்தச் சூழ்நிலையில் அதிக லாபம் தரும் அற்புதமான ஐந்து தொழில்களை வாசகர்களுக்குத் தருகிறோம். இந்த தொழிலில் உள்ள வாய்ப்புகள் என்ன, இந்தத் தொழில் துவங்குவதற்கு என்னென்ன தேவை என்பதைக் குறித்து எடுத்துச் சொல்லி இருக்கிறோம். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்கள் இந்த தொழில்களை கவனிக்கலாமே!
1 ரெடி டு ஈட் ஃபுட்ஸ்!
உலக அளவில் ரெடி டு ஈட் ஃபுட்டுக்கான வரவேற்பு அதிகம் உள்ளது. மாறி வரும் வாழ்க்கை முறையின் காரணமாக இதன் தேவை அதிகரித்துள்ளது. இப்போது பல குடும்பங்களில் கணவனும் மனைவியும் வேலைக்குப் போகிறார்கள். மேலும், பலரது சம்பளமும் இப்போது குறிப்பிடத்தகுந்த அளவு உயர்ந்திருப்பதால், செலவு செய்யவும் தயாராக இருக்கிறார்கள். தவிர, வேலை காரணமாக சொந்த ஊரைவிட்டு, வெளியூருக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதால், இந்த ரெடி டு ஈட் ஃபுட்டுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்களின் எண்ணிக்கை கூடுவதால் ஏற்றுமதிக்கும் உகந்த பொருளாக உள்ளது.
சந்தை மதிப்பு: ரூ. 4,000 கோடி, இத்துறை வருடத்துக்கு 21.99% வளர்ச்சி அடைகிறது. 
இந்தத் தொழில் துவங்குவதற்கு  FSSAI லைசென்ஸ் வாங்க வேண்டும்.
தேவையான இயந்திரங்கள்: இயந்திரம், சப்பாத்தி செய்யும் இயந்திரம், டபுள் ஸ்பைரல் மிக்ஸர், பிரையிங் மெஷின் ஆகியவை தேவை.
தேவையான ஆட்கள்: 2 நபர்கள்.
தொழில் வாய்ப்புகள்: சென்னை, கோவை மற்றும் வளர்ச்சி அடையும் மாவட்டங்கள்.
வரிக்குப் பிந்தைய வருமானம்:  30 சதவிகிதம்
‘‘மாதம் ரூ.70-90 ஆயிரம் வருமானம்!’’

2 லாண்டரி சர்வீஸ்!
லாண்டரி சர்வீஸ் என்பது இன்றைய வேகமான வாழ்க்கை முறைக்கு அவசியமானதாக மாறி உள்ளது. 2017-ம் ஆண்டுக்குள் லாண்டரி சேவை 65 சதவிகிதம் வளர்ச்சி அடையும் என சி அண்டு டபிள்யூ (Cushman & Wakefield) ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும், புதிதாக 52 ஆயிரம் ஹோட்டல்கள் துவக்கப்படும் எனவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளது. மேற்கூறிய துறைகள் வேகமாக வளர்ச்சி அடையும்போது லாண்டரி சேவையின் தேவையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
புதிதாக வேலைக்குப் போகும் இளைஞர்களின் வளர்ச்சி அதிகரித்து வருவதாலும் இந்த லாண்டரி சேவைக்கு அதிக வரவேற்பு உள்ளது. அதாவது, அவர்களின் துணிகளைத் துவைத்து அயன் செய்து தருவதற்கான கட்டணம் என்பது மிகவும் குறைவு. இந்த தொழிலுக்கு தண்ணீர் அதிகம் தேவை.
தேவையான இயந்திரங்கள்: தொழில் துறைக்குத் தேவையான வாஷிங் மெஷின், ஹைட்ரோ கரைப்பன், துணிகளை உலர்த்தும் இயந்திரம், அயன் செய்யும் டேபிள் மற்றும் அதற்கான இயந்திரம்.
தேவையான ஆட்கள்: அதிகபட்சம் 40 நபர்கள்.
தொழில் வாய்ப்புகள்: மருத்துவமனை, ஹோட்டல், வேலைக்குப் போகும் தனிநபர்கள், கல்வி நிறுவனங்கள், ரயில்வே, பேருந்துகள் போன்றவை.
வரிக்குப் பின் வருமானம்: 16% கிடைக்கும்.
‘‘20 – 25% லாபம் கிடைக்கும்!’’

3 கார் வாஷிங்/சர்வீஸ் சென்டர்!
இரண்டு சக்கர வாகனத்துக்கு இணையாக கார்களின் தேவை இன்று அதிகரித்துள்ளது. கார் வாங்குவதற்கு எளிதாகக் கடன் கிடைப்பது இதற்கு ஒரு முக்கியமான காரணம் ஆகும். அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் கார்களின் எண்ணிக்கை 40 – 45 கோடியாக உயர வாய்ப்புள்ளது. தற்போது 7 கோடி கார்கள் உள்ளது. 2025-ம் ஆண்டுக்குள் உலகின் 5-வது மிகப் பெரிய கன்ஸ்யூமர் நாடாக இந்தியா மாறும். வேகமாக வளர்ச்சி அடையும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே, கார் பராமரிப்பு என்பது அவசியமான ஒன்றாக மாறி உள்ளது.
தேவையான இயந்திரம்: பிரஷ், ஜெட் ஸ்பிரே, உலர்த்தும் இயந்திரம், சென்சர், கன்ட்ரோலர், பம்ப், டைர்வ்ஸ், நாசில் போன்றவை.
தொழில் வாய்ப்பு: வளர்ச்சி அடையும் அனைத்துப் பகுதிகளும்.
வரிக்குப் பின் வருமானம்: 30% கிடைக்கும்.
‘‘கவனமாக செய்தால் கூடுதல் லாபம்!’’

4 பயோமாஸ்/எரிபொருள் தயாரிப்பு!
தொழில் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருவதால், இந்த பயோமாஸ் பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது. முக்கியமாக டீ, புகையிலை, லெதர், டெக்ஸ்டைல்ஸ் தொழிற்சாலைகளில் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. மேலும், நிலக்கரியின் விலை அதிகம் என்பதால், பாய்லர் உள்ள தொழிற்சாலைகள் அனைத்திலும் இதன் பயன்பாடு அதிகம். அதோடு அதிலிருந்து கிடைக்கும் வெப்பமும் குறைவானதாகவே இருக்கும். இதனால் இந்தக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் எரிபொருளுக்கு அதிக வரவேற்பு உள்ளது.
தேவையான இயந்திரம்: கழிவுகளை அரைக்கும் இயந்திரம், ஜெனரேட்டர் அவசியம் தேவை.
தொழில் வாய்ப்பு: தொழிற்சாலைகள் அதிகம் உள்ள இடம். டீ தயாரிப்பு தொழிற்சாலை உள்ள ஊட்டியில் அதிக வரவேற்பு உள்ள தொழில் இது. இதில் மட்டும் வருடத்துக்கு 50 ஆயிரம் டன் கழிவு தேவைப்படுகிறது.
வரிக்குப் பின் வருமானம்:  10% கிடைக்கும்.
" எப்போதும்  வரவேற்பு!"

5 டிஷ்யூ பேப்பர்!
சுத்தமாக இருக்க வேண்டும் என்பது இன்றைக்கு எல்லோரது எதிர்பார்ப்பு. இதனால் மட்டும்தான் நோய்களின் தாக்கம் குறைவாக இருக்கும் எனவும் நம்புகிறார்கள். மேலும், ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் யூஸ் அண்ட் த்ரோ கலாச்சாரம் நம் நாட்டில் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் மனிதனின் அன்றாடத் தேவைகளுக்கு டிஷ்யூ  பேப்பர் அவசியமாக உள்ளது. மேலும், ஹோட்டல், மருத்துவமனை, சுற்றுலா ஸ்தலங்கள், வீடுகள், நிறுவனங்களில் இதன் தேவை அதிகமாக உள்ளது. டிஷ்யூ பேப்பர் தொழிலின்  வளர்ச்சி, வருகிற 2016 ஆண்டுக்குள் சராசரியாக 4.9 சதவிகிதமாக இருக்கும்.
தேவையான இயந்திரம்: பலவிதமான டிஷ்யூ பேப்பர்கள் சந்தையில் தேவைப்படுகிறது. எனவே, ஒவ்வொரு விதமான டிஷ்யூ பேப்பரைத் தயாரிக்க தனித்தனி மெஷின் உள்ளது. 27X27 செ.மீ அளவுள்ள டிஷ்யூ பேப்பர் தயாரிப்பதற்கு டூ கலர் பிரின்டிங் மெஷின், எம்போஸிங் மெஷின், ரோலர் ஆகியவை தேவை. இந்த எந்திரங்கள் கோவை, டெல்லி, பெங்களூரு ஆகிய இடங்களில் கிடைக்கிறது.
தொழில் வாய்ப்பு: ஹோட்டல், மருத்துவமனை, பியூட்டி பார்லர்கள், வீடுகள் ஆகிய இடங்களில் வாய்ப்பு அதிகம் உள்ளது.
வரிக்குப் பின் வருமானம்: 10%  கிடைக்கும்.
‘‘நேரடி மார்க்கெட்… கூடுதல் லாபம்!’’


குறிப்பு: மேற்கூறிய அனைத்து தொழில்களுக்கும் என்இஇடி(New Entrepreneurship Cum Enterprise    Development Scheme (NEEDS)  என்ற திட்டத்தின் கீழ் இயந்திரம் வாங்கும் மதிப்பில் 25% மானியம் கிடைக்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Monday, August 31, 2015

அழும் குழந்தைகளை சிரிக்கவைக்க


`குழந்தை நடுசாமத்துல கண்விழிச்சு `வீல் வீல்’னு அழுதுகிட்டே இருக்கான்… அவனோட அழுகைக்குக் காரணம் என்னனு கண்டுபிடிக்க முடியல டாக்டர்!’’– இந்தக் காலத்து இளம்தாய்மார்கள் அநேகம் பேர் குழந்தைகள் நல மருத்துவர்களிடம் இப்படிப் புலம்புவதைப் பார்த்திருக்கிறோம். அந்த மருத்துவரும் அவருக்குத் தெரிந்த வரையில் வைத்தியப் புலனாய்வு செய்து அழுகையை நிறுத்த முயற்சிப்பார்.சரி… மருத்துவ வசதி குறைந்த அந்தக் காலத்தில் பச்சிளம்குழந்தைகள் இதுபோல திடீரென அழும்போது… ஏன், எதற்கு அழுகிறது என்று எப்படிக் கண்டுபிடித்தார்கள்? இதோ சொல்ல வருகிறார், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி நல்லம்மாள்.‘‘மாமன் அடிச்சானோ மல்லிகைப்பூ செண்டாலே…அத்தை அடிச்சாளோ அமுதூட்டும் கையாலே…யார் அடிச்சார் நீ அழவே…அடிச்சாரை சொல்லியழு..!’’– தனது இரண்டு வயது கொள்ளுப்பேத்தியை மடியில் கிடத்தி தாலாட்டுப் பாடிக்கொண்டே நம்மிடம் பேசினார் நல்லம்மாள்…‘‘எனக்கு 70 வயசுங்க. பேரன், பேத்தி, கொள்ளுப்பேத்தினு எடுத்தாச்சுங்க.  பச்சைப் புள்ளைங்க அழுதா, ‘எனக்கு தூக்கம் வந்துருச்சு’னு சொல்லுதுனு அர்த்தம். தொட்டில்ல போட்டு மெதுவா தாலாட்டுப் பாடி தூங்க வைப்போமுங்க. அதுக்கும் தூங்காம அடம் பிடிச்சு அழுதா, அப்போ தூக்கத்தைத் தவிர அதுக்கு வேற ஏதோ பிரச்னைனு தெரிஞ்சுக்குவோம்ங்க. வயித்து வலி எடுத்தாலும் குழந்தைங்க ஓயாம அழுமுங்க. ரெண்டு வயசு வரையுள்ள கொழந்தைங்கள, ‘வௌக்கெண்ணெய் குழந்தை’னு கிராமத்துல சொல்ற அளவுக்கு, வௌக்கெண்ணெய்னு சொல்லப்படுற ஆமணக்கு எண்ணெய், கொழந்தைக்குப் பலவிதங்கள்ல பயன்படும்ங்க. ஓயாம அழும் கொழந்தையை காலு மேல மல்லாக்கப் படுக்க வெச்சு, மூக்கை பிடிச்சபடி, வௌக்கெண்ணயில ரெண்டு சங்கு வாயில ஊத்தி விடுவோம்ங்க. வயிறு கட்டியிருந்தா, அது இளக்கம் கொடுத்து வலி நின்னு போகும்ங்க. அப்புறம் கொழந்த சிரிச்சுக்கிட்டே, அம்மாவைப் கூப்பிடும். தாய்ப்பால் கொடுத்ததும் வயிறு நிறைஞ்சு, நிம்மதியா தூங்கிடும்ங்க.வெயில் காலங்கள்ல புழுக்கம் அதிகம் இருந்தா, கொழந்தைங்களுக்குச் சிறுநீர்ச்சூடு (நீர்க்கடுப்பு) பிடிச்சிக்கும்ங்க. அதைப் போக்க தொப்புள்ல தேங்காய் எண்ணெய சில சொட்டுக்கள் வெக்கணும். கொஞ்ச நேரத்துல சிறுநீர் போகும். அப்படீன்னா, சூடு பிடிச்சதுதான் அதுக்குப் பிரச்னைனு அர்த்தம். அழுகையும் நின்னுடும்.தொட்டில்ல புள்ளையைப் போட்டுட்டு கவனிக்காம போயிட்டா, கொழந்த தலையை நீட்டிப் பார்க்க முயற்சிக்கும்போது, தலைகீழா தொங்கிக் கிடக்கலாம்ங்க. அதனால சில சமயம் குடல் இறக்கம் ஏற்படலாம். இதனாலயும் கொழந்த விடாம அழலாம். இதுக்கும் விளக்கெண்ணெய்தான் வைத்தியம். கொழந்த வயித்துல சில சொட்டு விளக்கெண்ணெய் விட்டு, லேசா வலது வட்டமா சில முறையும், இடது வட்டமா சில முறையும் நீவினா குடல் இறக்கம் பழைய நிலைக்குத் திரும்பிடும்; அழுகையும் நின்னுடும்.தரையில படுக்க வைக்கும்போது சில சமயம் கொழந்தையோட காதுக்குள்ள சின்ன எறும்பு இல்ல பூச்சி ஏதாசும் போயிடும்ங்க. இதனாலயும் கொழந்தை அழலாம். மிதமா சூடு செஞ்சு ஆறவெச்ச (தேங்காய்) எண்ணெய் சில சொட்டு அது காதுல விட்டு, சட்டுனு திருப்பி ஒருக்களிச்சி படுக்க வெச்சா, காதுக்குள்ள போன எறும்பு வெளிய வந்துடும்.விசேஷ வீடுகளுக்கு குழந்தைகளை தூக்கிட்டுப் போனா, நலக்கம் (தொற்று) ஏற்பட்டு அழுதுகிட்டே இருக்கும்ங்க. கண் இமைகள் குத்தி, நாக்கை நீட்டி அழும்ங்கிறது இதோட அறிகுறி. இதைப் போக்க, ஒரே ஒரு மிளகை மட்டும் பொடிச்சு வெச்சுக்கிட்டு, ரெண்டு, மூணு வேளைக்குத் தாய்ப்பால்ல கலந்து சங்குல ஊத்திவிட்டா, நலக்கம் நீங்கிடும்.இதையெல்லாம்விட, கொழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்காம புட்டிப்பால் கொடுக்குறது, பசி, அஜீரணம், தொற்றுனு அதை பல விதத்துலயும் அழ வைக்கலாம்ங்க. அதனால, பெத்த கொழந்தைக்குப் பால் கொடுங்க பொண்ணுங்களா!’’ என்று முடித்த நல்லம்மாள்,‘‘அத்தை அடிச்சாரோ அரளிப்பூ செண்டாலே… இல்லைமாமன் அடிச்சாரோ மயிலிறகு துண்டாலே..!’’ – மறுபடியும் தாலாட்டைத் தொடங்கினார்!

Tuesday, June 9, 2015

சூப் நல்லதா… கெட்டதா?!


மாநகரங்களில் மட்டுமல்ல, சிறுநகரங்களிலும்கூட தற்போது மலைக்கவைக்கும் எண்ணிக்கையில் முளைவிட்டுக் கொண்டிருக்கின்றன சூப் கடைகள். இதன் அலாதி சுவை சுண்டியிழுப்பதால், சுற்றிச் சுற்றி வருகின்றன குழந்தைகள்! ‘சூப் குடிப்பது ஆரோக்கியம்’ என்கிற பிரசாரத்தால் படையெடுக்கின்றனர் பெரியவர்கள்!
”வீட்டுல செய்யுற சூப், கஷாயம் மாதிரி இருக்கும். ஆனா, கடைகள்ல குடிக்கிற சூப், சூப்பர்! சூப் குடிச்சா ஸ்ட்ரெங்த் கிடைக்கும்னுதான் ஆரம்பத்தில் சூப் கடைகளில் பைக்கை நிறுத்த ஆரம்பிச்சேன். இப்போ நான் கிட்டத்தட்ட அடிமை ஆயிட்டேன்னு நினைக்கிறேன். யெஸ்… ஐயாம் எ சூப் பாய்!” என்று சொல்லிச் சிரிக்கிறார், திருச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சந்திரமௌலி. இப்படி பலதரப்பினரின் ஓட்டுகளும் ஒட்டுமொத்தமாக விழ ஆரம்பித்திருப்பதால்… வேகவேகமாக சூடுபிடித்து வருகிறது சூப் டிரெண்ட்!
ஆனால், ”ஆரோக்கியம் என்று நினைத்து குடித்துக்கொண்டிருக்கும் இந்த சூப் வகைகளில், உண்மை யாகவே ஆரோக்கியம் கிடைக்கிறதா என்று யாரும் சிந்திப்பதில்லை. குறிப்பாக,  பெரும்பாலான கடைகளில் விற்கப்படும் சூப்களில் சுவைக்காக சேர்க்கப்படும் பொருட் கள், ஆரோக்கியத்தைவிட, எதிர் விளைவுகளையே அதிகம் தருவதாக இருக்கின்றன” என்று அதிர்ச்சியூட்டுகிறார், சென்னையைச் சேர்ந்த ‘டயட்டீஷியன்’ கிருஷ்ணமூர்த்தி.
‘என்னது… சூப்ல கூடவா சூனியம் வெக்கிறானுங்கோ…?!’ என்று அதிர்கிறீர்களா, கிருஷ்ணமூர்த்தி சொல்வதைத் தொடர்ந்து படியுங்கள்!

”நம் பாரம்பரிய சமையலில் ஒன்று ரசம். இந்த ரசத்தின் அடிப்படையில் தோன்றியதே சூப். நம்முடைய மிளகு ரசத்துக்கு இணையான சத்து உள்ள சூப், எதுவுமே இல்லை என்பதே உண்மை. மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்ததுதான் சூப் கலாசாரம், இன்று, இது  ஒரு ஃபேஷனாக மாறிவிட்டது. ஸ்டார் ஹோட்டல்களில், சாப்பிட ஆரம்பிப் பதற்கு முன்பாக ‘ஸ்டார்ட்டர்’ என்கிற வகையில் சூப் பரிமாறப்படுகிறது. ஆரோக்கியத்தை முன்னிறுத்தி தயாரிக்கப்படும் சூப்கள், உடலுக்கு நல்லது. சூப், நம் உடம்பில் உள்ள என்சைம்களைத் தூண்டுவதால், செரி மானம் சரிவர நடக்கும். அசிடிட்டியைக் குறைக்கும், பசியைத் தூண்டும். இதுதான் ஹோட்டல்களில் இதை ஸ்டார்ட்டர் என்கிற வகையில் பரிமாறக் காரணம்.
ஆனால், ‘அந்தக் கடையில் சூப் டேஸ்ட்டா இருக்கும்’, ‘இந்தக் கடையில் 10 வெரைட்டி சூப் கிடைக்கும்’ என்று தேடித்தேடிக் குடிப்பவர்களுக்கு, நல்ல பலன் கிடைக்காது. காரணம், பெரும்பாலான கடைகளில் தயாரிக்கப்படும் சூப்களில் சுவையூட்டிகள் மற்றும் மோனோசோடியம் போன்ற வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இதனால் சுவை அதிகமாகும்… அதேசமயம், சத்துக்கள் போதுமான அளவுக்கு  இருக்காது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் வரக்கூடும். ஏற்கெனவே ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், உடம்பில் உப்பின் அளவு அதிகம் உள்ளவர்கள் போன்றவர்களுக்கு அந்த பாதிப்பு அதிகமாகக்கூடும். எனவே, மோனோசோடியம் கலந்த சூப்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டும்” என்றவர், வீட்டில் தயாரிக்கும் சூப்பின் சிறப்புகளையும் குறிப்பிட்டார்.
”வீட்டில் தயாரிக்கப்படும் சூப்பில் உள்ள பலன்கள் பற்பல. சூப்பில் குறைந்த அளவு கலோரி இருப்பதால், குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும். சர்க்கரை நோயாளிகள், இருமல், ஜலதோஷம், சுவாசக் குழாய் பிரச்னை உள்ளவர்களுக்கும் மிகவும் நன்மை தரவல்லது சூப். சூப்பில் மூன்று வகை உண்டு. கிளியர் சூப் (clear soup), திக் சூப் (thick soup) மற்றும் தீசிஸ் சூப் (thesis soup). தாது உப்புகள் அதிகம் இருக்கும் கிளியர் சூப், உடல்நலக் குறைவால் திட உணவு சாப்பிட முடியாமல் இருப்பவர்களுக்கு வேண்டிய ஊட்டச்சத்தைத் தரவல்லது. அதிக விட்டமின்களும் சுவையும் கொண்ட திக் மற்றும் தீசிஸ் சூப்களை அனைவரும் சாப்பிடலாம்.
பொதுவாக சூப் சாப்பிட ஏற்ற நேரம், காலை 11 மணி. அப்போதுதான், இந்த சூப் நம் உடலில் வேலை செய்து, செரிமானத்தைத் தூண்டி அடுத்த வேளைக்கான உணவு எடுத்துக்கொள்ள நம்மை தயார்படுத்தும். பிடித்த சூப்பையே தொடர்ந்து சாப்பிடாமல், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சூப் எடுத்துக்கொள்வது, எல்லாச் சத்துக்களும் கிடைக்க வைக்கும். இன்று பலரும் ‘நடைபயிற்சி’ செல்லும் போதோ, சென்று திரும்பும் போதோ ரோட்டோரத்தில் கிடைக்கும் ஏதாவது ஒரு சூப்பை வாங்கிச் சாப்பிடு கிறார்கள். ஆனால், அந்த நேரத்தில் தண்ணீரே நம் உடலுக்கு அதிகம் தேவைப் படும். நடைபயிற்சியின் போது வியர்வையாக உட லில் இருந்து வெளியேறிய தண்ணீரை, அதிகமான தண் ணீர் எடுத்துக் கொள்வதன் மூலமே ஈடுசெய்ய வேண் டும்” என்ற கிருஷ்ணமூர்த்தி,
”வீட்டில் சுகாதாரமான சூழலில் தயாரிக்கப்படும், சுவையூட்டிகள் கலக்காத, எண்ணெய் அதிகம் சேர்க் காத சூப்கள் அளவில்லா ஆரோக்கியம் தரவல்லவை. கடைகளில் வாங்கிக் குடிக் கும் சூப்கள், அதற்கு நேர் மாறானவை. இதேபோல சூப் பவுடர்களை வாங்கி தயாரிக்கப்படும் சூப்களும் ஆபத்தானவையே. இவற்றில் கலர் மற்றும் வேதிப் பொருட்கள் சேர்க்கப்படு வதால், உடல்நலத்துக்கு தீங்கையே தரும். அதுவும் கண்டகண்ட கடைகளில் சூப் வாங்கிக் குடிப்பது ஆபத்தானது. வெளியில் சூப் சாப்பிட ஆசைப்படுபவர் களை, வீட்டில் சூப் பருக வைக்கும் பழக்கத்துக்கு கொண்டு வருவது நல்லது!” என்று சொன்னார்!
சரி, இதைப் பற்றி சூப் கடை வைத்திருப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள்?
சென்னை, பம்மலில்  சூப் கடை வைத்திருக்கும் தாண்டவராயனிடம் கேட்ட போது, ”வாடிக்கையா சூப் குடிக்கிறவங்களோட எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாயிட்டே வருது. சென்னையில் மட்டும் எனக்கு 20 கடைகள் இருக்கு. எல்லா கடைகளிலும் அதிகம் விற்பனை ஆகுறது, காளான் சூப், வெஜ் சூப் இது ரெண்டும்தான்.
சூப் கடைகள்ல சுவைக் காக சில பொருட்களைச் சேர்க்கறது உண்மைதான். ஆனா, என்னோட கடை யில நூத்துக்கு நூறு நேரடியான சூப்தான் விற்பனை செய்றேன். மோனோ சோடியம்ங்கிற பொருளைத்தான் சூப்புல சேர்க்கிறாங்க. இது பலவிதமான உணவுப் பொருளை சமைக்கறதுக்காக ஹோட்டல்கள்ல பயன்படுத்துற பிரபலமான ஒரு பொருள்தான். இது உடம்புக்கு தீமை தரும்ங்கிறது உண்மைதான். அதனாலதான் இதை நாங்க சேர்க்கிறதில்லை” என்று சொன்ன தாண்டவராயன், இந்த மோனோசோடியம் கலக்கப்பட்டிருக்கும் சூப்பை கண்டுபிடிக்க ஒரு வழியும் சொன்னார்.
”சூப் குடிக்கும்போது நாக்கு சுறுசுறுனு இருக்கும், சுவை கூடுதலா இருக்கும். காரமான சூப் குடிச்சாலும் கொஞ்சம் இனிக்கிற மாதிரியே இருக்கும். இதெல்லாம் இருந்தா, அந்த சூப்புல மோனோசோடியம் கட்டாயம் சேர்த்து இருக்காங்கனு தெரிஞ்சுக்கலாம். இதன் பின்விளைவுகளை சொல்ல முடியாது. அதனால, வீடா இருந்தாலும், கடையா இருந்தாலும் தரமான சூப்பா சாப்பிட்டா… பிரச்னையே இருக்காது” என்று வார்த்தைகளில் அக்கறை கோத்தார்.
சூப் பிரியர்களே… சூதனமாக இருந்துகொள்ளுங்கள்!
நன்றி- அவள் விகடன்

கழுதைப்பால்

Posted By Muthukumar,On June 9,2015
donkey milk
குழந்தைகளுக்கு கழுதைப்பால் கொடுக்கும் வழக்கம் ஆதிகாலம் தொட்டு, இன்றுவரை இருந்து வருகிறது. வாத நோய்,கரப்பான், சிரங்கு, பித்தம் மற்றும் சித்தப் பிரமை போக்கும் மருத்துவ குணம் கழுதைப்பாலில் உண்டு என்று சித்த மருத்துவர்களும் கூறுகின்றனர். ஆனால், குழந்தை நல மருத்துவர்கள் ” குழந்தைகளுக்கு கழுதைப்பால் கொடுப்பது நல்லதல்ல அது தேவையற்ற சிக்கலை ஏற்படுத்திவிடும்” என்கின்றனர்.
கழுதைப்பால் கொடுப்பதை மூட நம்பிக்கை என்றே சொல்லவேண்டும். சூடு பண்ணாத எந்தப் பாலிலும் நோய்க் கிருமிகள் உண்டு. தாய்ப் பால் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. கழுதைப்பால் கொடுப்பதால், நோய்க் கிருமிகள் குழந்தைகளைத் தாக்க வாய்ப்புண்டு. கழுதைப்பால் ஜீரணமாக நீண்ட நேரமாகும். இதன்மூலம் மனித செல்லுக்குள் உள்ள நோய் எதிர்ப்பு உயிரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு தொற்று நோய்கள் குழந்தைகளின் உடலில் உருவாகலாம். கழுதைப்பால் கொடுக்கும் நடைமுறை தொடர்ந்தால், எதிர்காலத்தில் மிருகங்களுக்கு வரும் நோய்கள் மனிதர்களுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இனிமேலாவது குழந்தைகளுக்கு கழுதைப்பால் கொடுப்பதை நிறுத்துவது நல்லது.

விசித்திரமான‌ விநோதங்களும்! அபூர்வமான‌ அதிசயங்களும்!


அன்றாட வாழ்க்கையில், நிறைய நகைச்சுவைகள் மற்றும் அனுபவத்தைப் பெறுகிறோம். ஆனால் இன்றைய நவீன உலக வாழ்க்கையை பார்க்கும் போது, சாதாரண விஷய ங்களில் உள்ள நிறைய
உண்மைகள் விசித்திரமாகவே கருதப்படுகின் றன.
மேலும் அத்தகைய உண்மைகளை கேட்டால், பலரும் வாயில் கை வைத்து ‘அப்படியா!!!’ என்று ஆச்சரியமாக கேட்பார்கள். சொன் னால் கூட நம்பமாட்டார்கள். உதாரணமாக, உலகிலேயே வெடிகுண்டு வெடித்தாலும் இறக்காத பூச்சி கரப்பான்பூச்சி என்று தெரியும். ஆனால் அந்த பூச்சி தலை இல்லாமல்கூட உயிருடன் இருக்கும்என்று சொ ன்னால் ஆச்சரியம் தானே.
இதுபோன்று நிறைய விசித்திரமான சில உண்மைகள் உள்ளன. அவற்றில் சிலவற் றை கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் வேறு ஏதாவது இயற்கையில் உள்ள சில விசித் திரமான உண்மைகளை எங்களுடன் பகி ர்ந்து கொள்ளுங்கள். சரி, அந்த விசித்திர மான உண்மைகளைப் பார்ப்போமா!!!
லிப்ஸ்டிக்
பெண்களுக்கு லிப்ஸ்டிக் என்றால் அவ் வளவு பிரியம். ஆனால் அந்த லிப்ஸ்டி க்கை போடும் முன், அது எதனால் ஆனது என்று சற்று யோசியுங்கள். ஏனெனில் லிப்ஸ்டிக்கில் மீன் செதில்கள் உள்ளன.
ஹெட்போன்
தொடர்ச்சியாக விருப்பமான பாடல்களை ஹெட்போனில் கேட்கிறீர்களா? அவ்வாறு ஒரு மணிநேரம் பாட்டு கேட்டால், காதுகளில் பாக்டீரியாவானது 700 மடங்கு அதிகரிக்கும்.
இறால்
கடல் உணவுகளில் இறால் ரொம்ப பிடிக்குமா? அப்படியெனில் அடுத்த முறை அதன் தலையை சாப்பிடும் போது, அதன் இதயத்தை சாப்பிடும் உணர்வைப் பெறுவீர்கள். ஏனெனில் இறாலுக்கு இதயமானது அங்கு தான் உள்ளது.
நாக்கு
எப்படி கைவிரலில் உள்ள ரேகைகள் ஒவ் வொருவருக்கும் வேறுபடுகிறதோ, அதே போன்று உதடுகளின் ரேகைகளும்.
பட்டாம்பூச்சி
இந்த அழகான பட்டாம்பூச்சி, பூக்களில் உள்ள தேனின் சுவையை வாயால் தான் சுவைக்கிறது என்று நினைத்தால், அது தான் தவறு. ஏனெனில் உண்மையில் பட்டாம்பூச்சி தேனின் சுவையை அதன் கால்களில் தான் சுவைக்கிறது.
யானை
பாலூட்டிகளிலேயே யானையின் பிரசவ காலம் தான் அதிகம். அதுவும் 645 நாட்கள், யானையானது தன் கருவை சுமக்கும்.
ஆங்கில மொழி
ஆங்கில மொழியில் உள்ள ரைம்ஸ்களில் மாதம், ஆரஞ்சு, ஊதா மற்றும் சில்வர் போன்ற வார்த்தைகளே வராது என்ற உண்மை தெரியுமா?
நெருப்புக்கோழி
உலகிலேயே மிகவும் பெரிய பறவையான நெருப்புக் கோழி யின் மூளையைவிட, அதன் கண்கள் பெரியது என்பது ஆச்சரியப்பட வைக்கும் ஒரு உண்மை.
புகைப்பிடித்தல்
இப்போதுசொல்லப்போகும் உண்மை அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது என்னவெனில், சிகரெட்டை பற்ற வைக்கும் லைட்டரானது, தீக்குச்சி க்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது.
முழங்கை ட்ரிக்
கைகளை எவ்வளவு தான் அங்கும் இங்கும் அசைக்க முடிந்தாலும், முழங்கையை மட்டு ம் எவராலும் நாக்கால் தொட முடியாது. இப் போது அதை நிச்சயம் முயற்சிப்பீர்கள் பாருங் களேன்.
சிலந்தி
உலகில் எத்தனையே ஃபோபியாக்களைப் பார்த்திருப்போ ம். ஆனால் இன்றும் சிலந்தியின் மீதுள்ள பயத்தாலேயே உயிர் போகும் வாய் ப்பு உள்ளது.
தும்மல்
சொன்னால் நம்பமாட்டீர்கள், மிகவும் கடுமையாக தும் மினால் விலா எலும்புகளில் முறி வு ஏற்படும். மேலும் இவ்வாறு திடீரென்று கடுமையாக தும்பும் போது, சில நேரங்களில் தலை அல்லது கழுத்தில் உள்ள இரத்த நாள ங்கள்  சிதைவடைந்து இறப்பை சந்திக்கவும் கூடும். ஆகவே இந்த மாதிரியான கடுமை யான தும்மல் வரும் சூழ்நிலையில், கண்க ளை திறந்து தும்மினால், இத்தகைய அபாய த்தில் இருந்து விடுபடலாம்.
பிறப்பு
குழந்தையாக இருந்து வளர வளர, உடலின் கண்கள் மட்டும் பிறக்கும் போது இருந்த அளவில் தான் இருக்கம். ஆனால் மூக்கு மற்றும் காதுகள் வளர்ச்சியடையும் என்பது தெரியுமா?
கம்ப்யூட்டர்
கம்ப்யூட்டர் கீ போட்டின், ஒரே வரிசையி ல் ‘typewriter’என்னும் மிக வும் நீளமான வார்த்தையை டைப் செய்யலாம்.
முதலை
பொதுவாக கீழ் தாடை இறங்கிதான் வாயானது திறக்கப்படும். ஆனால் முதலைக்கு மட்டும்தான், மேல் தாடை தூக்கி வாய் திறக் கப்படும்.
கரப்பான்பூச்சி
வீட்டில் பெரும்தொல்லையைக் கொடுக்கு ம் கரப்பான்பூச்சி, தலை இல்லாமல், 9 நாட் கள் உயிருடன் வாழும் தன்மை கொண்ட து. எனவே வீட்டில் கரப்பான்பூச்சி அடித்து கொல்லும்போது, கவனமாக அடித்துக் கொல்லுங்கள்.
வெங்காயம்
யாருக்குமே வெங்காயம் வெட்டுவது என் பது பிடிக்காது. ஏனெனில் அது தேவையி ல்லாமல் அழ வைக்கும். ஆனால் அவ்வா று வெங்காயத்தை வெட்டும் போது கண் ணீர் வரக்கூடாது என்றால், வாயில் சூயிங் கம் போட்டுக்கொண்டு வெட்டினால், உண் மையில் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை தவிர்க்கலாம்.
தூசிப்படிந்த வீடு
வீட்டில் அடிக்கடி தூசிபடிகிறதா? அப்படி யெனில் அதற்கு காரணம், சருமத்தில் உள் ள இறந்த செல்கள்தான். அவைதான் வீட்டி ல் படிந்து, வீட்டை அடிக்கடி தூசியடைய வைக்கின்றன.
கர்ப்பமான மீன்
வீட்டில் தங்கமீன் கர்ப்பமாக இருந்தால், அதனை ‘ட்விட்’ (twit) என் று தான் சொல்ல வேண்டுமே தவிர, ‘கர்ப்பமான தங்கமீன்’ என்று சொல்லக்கூடாது.
உலகில் உள்ள வித விதமான அடிமைத்தனங்கள்
உலகில் உள்ளோர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அடிமைத்தனங்கள் இருக்கும். அதில் அடிமை த்தனம் என்று சொல்லும் போமு, பெரும் பாலும் அனைவரது நினைவுக்கும் வருவது புகைப்பி டித்தல், மது அருந்துதல், போதை ப் பொருட்கள் பயன்படுத்துதல், வீடியோ கேம்ஸ் விளையாடுதல் போன்றவை தான் ஞாபகத்திற்கு வரும். ஆனால் உலகில் இன்னும் சில விசித்திரமான, அதிசயப்படக் கூடிய வகையில் சில அடிமைத்தனங்களும் உள்ளன.
அவற்றில் சிலவற்றைக் கேட்டால், அருவெறுப்பை ஏற்படுத்தக் கூடிய வகையில் இருக்கும். ஆனால் அவற்றையும் மக்கள் அன்றாடம் மேற்கொள்கின்றனர். மேலும் அத் தகைய அடிமைத்தனத்தால், இத்த னை நாட்கள் உயிர் வாழ்கின்றன ரா என்று சற்று யோசித்தால், ஆச்ச ரியப்படக்கூடிய வகையில் தான் இருக்கும்.
இப்போது அவற்றில் அந்த மாதிரியான சில விசித்திரமான அடிமைத்தனங்களைப் பற்றி கீழே கொடுத்துள்ளோம். அதைப்படித்து பாருங்களேன்…
கார் அடிமை
அனைவருக்குமே கார் என்றால் மிகவும் பிடிக்கும். மேலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித மான கார் பிடிக்கும். அந்த வகை யில் நதானியேல் என்பவர், தனது சிவப்பு நிற 1998 மான்டே கார்லோ என்ற காருக்கு சேஸ் என்று பெய ரிட்டு, தனது வாழ்க்கை யின் அன்பு கிடைத்துவிட்டது என்று அதனுடன் வாழ்கிறார். மேலும் அவர் அந்த கார் வாங்கிய தினத்தை அதற் கான பிறந்தநாளாக கருதி, அதற்கு பரிசுகளை வாங்கி மகிழ்வார்.
பூனை அடிமை
43 வயது பெண்மணியான லிசா என்பவர், தனது செல்லப் பிராணியான பூனையின் மயிர் சுவைக்கு அடிமையாக உள்ளார். மேலும் இவர் தனது சொந்த பூனையின் மயிரை மட்டுமின்றி, எந்த ஒரு பூனையின் மயிரையும் சாப்பிடுவார்.
இரத்த அடிமை
blood drinking couple
உண்மையிலேயே இரத்தக்காட்டேரியைப் பார்த் திருக்கிறீர்களா? ஆம், இரத்தத்திற்கு அடிமை யாக உள்ளவர்கள் உண்டு. அதிலும் 29 வயதான மிச்செல் என்னும் பெண், மனித இரத்தம் மற்றும் பன்றியின் இரத்தத்தை கடந்த 15 ஆண்டுகளாக குடித்து வருகிறார்.
அழுக்கு அடிமை
இதுவும் வித்தியாசமான ஒரு அடிமைத் தனம் தான். அதிலும் ஹெய் டி சேரிகளில் வாழும் மக்கள், தினமும் அழுக்குகளை தண்ணீரில் கலந்து குடித்து வருகிறார்.
இறுதிச்சடங்கு அடிமை
என் புரியவில்லையா? சிலருக்கு மரண நிகழ்ச்சியில் பங்கேற்கும்பழக்கம் இருக்கும். அதில் 42 வயதா ன லூயிஸ் ஸ்குவாரிஸி என் பவர், கடந்த 20 ஆண்டுகளாக, அவர் வசி க்கும் பகுதியில் நடக்கும் அனைத்து இறுதிச்சடங்கிலும் தவறாமல் கலந் து கொள்கிறார். மேலும் இந்த மாதி ரியான விருப்பம் உள்ளவர்களும் இவ்வுலகில் உண்டு.
ஐஸ் அடிமை
ஐஸ் கட்டிகளை சாப்பிடும் பழக்கம் சிலருக்கு உண்டு. அதிலும் ஐஸ் கட்டிகளை இடைவெளி யே இல்லாமல் சிலர் மென்று சாப்பிடுவார்கள். இவ்வாறு இதற்கு அடிமையாவதற்கு காரணம், உடலில் இரு ம்புச்சத்து அளவுக்கு குறைவாக இருப்பது என்று நிபுணர்கள் கூறு கின்றனர்.
காஸ்மெட்டிக் சர்ஜரி அடிமை
உலகில் மில்லியன் கணக்கில் மக்கள் காஸ்மெட்டிக் சர்ஜரி செய்து கொள்வார்கள். அதே சமயம், சில மில்லியன் மக்கள் அந்த காஸ் மெட்டிக் சர்ஜரிக்கு அடிமையாக இருக்கிறார்கள். உதாரணமாக, இதில் ஒரு பிரபலமான அடிமை என்று சொன்னால் ஜாய்ஸ்லின் வில் டென்ஸ்டீன் என்பவர், காஸ் மெட்டிக் சர்ஜரிக்காக ஒரு வருட த்திற்கு 4,000,000 டாலர்கள் செலவழித்துள்ளார்.
டேனிங் அடிமை
பெரும்பாலான மக்கள் கடற்கரை ஓரங் களில் செய்யப்படும் டேனிங்கிற்கு அடி மையாக இருப்பார்கள். இந்த அடிமை க்கு டேனோரேக் ஸியா என்று பெயர்.
உடலில் துளையிடுதல்…
தற்போதுள்ள மக்கள் ஃபேஷன் என்ற பெயரில், உடலில் வலியை ஏற்படுத்தக்கூடிய விதவித மான டாட்டூக்கள் மற்றும் தொப்புள் வளையம், நாக்குகளில் வளையம் போன்றவற்றிற்கு அடி மையாக உள்ளனர்.
சமூக வலைதளங்கள்
சிறுவர் முதல் பெரியவர்கள் வரை, அனைவரது மத்தியிலும் இருக்கும் ஒருவிதமான அடிமைத்தனம் தான் சமூக வலைதளங்களில் உலாவுதல். அதிலும் ஃபேஸ் புக், டுவிட்டர் போன்ற வற்றில் இருப்பது மிகவும் பிரபலமா னது.
முடியை பிடுங்குதல்…
உலகில் 11 மில்லியன் மக்கள், முடியின் நுனியி ல் உள்ள வெடிப்பு க்களைப் பிடுங்கும் பழக்கத்தி ற்கு அடிமையாகி யுள்ளனர்.
டிடர்ஜெண்ட் அடிமை
எப்போதாவது டிடர்ஜெண்ட்டை சுவைத்துள் ளீர்களா? பொதுவாக டிடர்ஜெண்ட்டுகளை சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும். ஆ னால், 19 வயதான டெம்பஸ்ட் என்பவர், டிட ர்ஜெண்ட்டின் சுவைக்கு அடிமையாகியுள்ளா ர்.
கண்ணாடி டம்ளர்கள்
ஜோஷ் என்பவருக்கும் கண்ணாடி டம்ளர்கள் என்றால் மிகவும் பிடிக்கும். உடனே ஒயின் குடிப்பதற்கு என்று நினைக் காதீர்கள். கண்ணாடி டம்ளர்களை சாப்பிடுவத ற்கு மிகவும் பிடிக்குமாம். மேலும் அவர், கடந்த நான்கு ஆண்டுகளில் 100 க்கும் மேற்பட்ட கண் ணாடி டம்ளர்களையும், 250 பல்ப்புக்களையும் சாப்பிட்டிருப்பதாக சொல் கிறார்.
மலமிளக்கும் மாத்திரை (Laxative)
இந்த மாத்திரையானது 15 வயதான கிம்பர்லி என்னும் பெண்ணுக்குசாக்லெட் போன்றது. அதிலும் ஒரு நா ளைக்கு 100 மாத்திரைகளை சாப்பிடு வார். இதனால் அவர் இரத்தப்போக்குட ன் கூடிய அல்சர் மற்றும் அதிகப்படியா ன ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் மரு த்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
கற்கள்
44 வயதான தெரேசா என்னும் பெண், கற்களின் சுவை யானது பிடித்துவிட்டது. இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக கற்களை சாப்பிட்டு வந்திருக்கிறார். இதனால் அவரது பற்கள் உடைந்து போய், கடுமை யான வயிற்று வலிக்கு ஆளானாலும், கற்கள் சாப்பிடுவதை மட்டும் நிறுத்தவில்லை.
நெயில் பாலிஷ்
நெயில் பாலிஷை நகங்களுக்கு போடும் அடிமைத்தனம் இருக்கிறது என்று சொன் னால், நம்பலாம். ஆனால் 32 வயதான ஜேமிக்கு, நெயில் பாலிஷின் வாசனை மற்றும் சுவை பிடித்து விட்டது. இத னால் ஒரு நாளைக்கு 6 பாட்டில்நெயில் பாலி ஷை குடித்துவருகிறா ர்.