Tuesday, June 9, 2015

கழுதைப்பால்

Posted By Muthukumar,On June 9,2015
donkey milk
குழந்தைகளுக்கு கழுதைப்பால் கொடுக்கும் வழக்கம் ஆதிகாலம் தொட்டு, இன்றுவரை இருந்து வருகிறது. வாத நோய்,கரப்பான், சிரங்கு, பித்தம் மற்றும் சித்தப் பிரமை போக்கும் மருத்துவ குணம் கழுதைப்பாலில் உண்டு என்று சித்த மருத்துவர்களும் கூறுகின்றனர். ஆனால், குழந்தை நல மருத்துவர்கள் ” குழந்தைகளுக்கு கழுதைப்பால் கொடுப்பது நல்லதல்ல அது தேவையற்ற சிக்கலை ஏற்படுத்திவிடும்” என்கின்றனர்.
கழுதைப்பால் கொடுப்பதை மூட நம்பிக்கை என்றே சொல்லவேண்டும். சூடு பண்ணாத எந்தப் பாலிலும் நோய்க் கிருமிகள் உண்டு. தாய்ப் பால் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. கழுதைப்பால் கொடுப்பதால், நோய்க் கிருமிகள் குழந்தைகளைத் தாக்க வாய்ப்புண்டு. கழுதைப்பால் ஜீரணமாக நீண்ட நேரமாகும். இதன்மூலம் மனித செல்லுக்குள் உள்ள நோய் எதிர்ப்பு உயிரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு தொற்று நோய்கள் குழந்தைகளின் உடலில் உருவாகலாம். கழுதைப்பால் கொடுக்கும் நடைமுறை தொடர்ந்தால், எதிர்காலத்தில் மிருகங்களுக்கு வரும் நோய்கள் மனிதர்களுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இனிமேலாவது குழந்தைகளுக்கு கழுதைப்பால் கொடுப்பதை நிறுத்துவது நல்லது.

No comments:

Post a Comment