Posted on November 11, 2014 by Muthukumar
ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களுக் கான டிப்ஸ்! உஷார்
எந்தத் துறை நன்கு வளர்கிறதோ, அந்தத் துறையில் மோசடி பேர் வழிகளின் நடமாட்டமும் அதிகமாகவே இருக்கும். இதற்கு இணையமும் விதிவிலக்கல்ல. முக்கியமாக, ஆன்லைன் ஷாப்பிங்கில்
”ஆன்லைன் ஷாப்பிங்கில் பல நல்ல விஷயங்கள் இருப்பது போல ஏமாற்று விஷயங்களும் இருக்கவே செய்கின்றன. போலி பொருட்களை விற்பது, குறிப்பிட்ட காலத்துக்குள் பொருளை டெலிவரி செய்யாமல் இழுத்தடிப்பது, போலி தளங்களை உருவாக்கி ஏமாற்றுவது என சில விஷயங்கள்
இதில் உள்ளன. கடந்த மார்ச் மாதம் கூட TimTara என்ற ஆன்லைன் ஷாப்பிங் இணையதளத்தின் நிறுவனர் ஏமாற்று நடவடிக்கைகளால் கைது செய்யப்பட்டார். அந்த இணையதள மும் அதன்பின்னர் மூடப்பட்டது. இது போன்ற சம்பவங்களும் அவ்வப்போ து நிகழ்கின்றன.
கவர்ச்சி விளம்பரங்கள்!

கவர்ச்சிகரமான விளம்பரங்களைச் செய்வதன் மூலம் கனஜோராக மோசடி செய்கின்றன பல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள். அதாவது, ரூ.50,000/- மதிப்புள்ள ஒரு பொருளை வெறும் 500 ரூபாய்க்குத் தருவதாக விளம்பரங்கள் செய்யும். இதை நம்பி பலரும் அந்தப் பொருளை வாங்க போட்டிபோட கடைசியில், யாராவது ஒருவருக்கு மட்டுமே அந்தப்பொருள் கிடைக்கும் என்று சொ
ல்லிவிடும். ஆனால், ஏற்கெனவே கட்டிய பணத்தைத் திரும்பத் தர மாட் டோம், அதற்கு பதில் ஏதேனும் பொருள் வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லும். வேறு வழியில்லாமல் நாம் வாங்கும் இப்பொருள், கடையில் விற்கும் விலையைவிட அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
கவர்ச்சிகரமான விளம்பரங்களைச் செய்வதன் மூலம் கனஜோராக மோசடி செய்கின்றன பல ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள். அதாவது, ரூ.50,000/- மதிப்புள்ள ஒரு பொருளை வெறும் 500 ரூபாய்க்குத் தருவதாக விளம்பரங்கள் செய்யும். இதை நம்பி பலரும் அந்தப் பொருளை வாங்க போட்டிபோட கடைசியில், யாராவது ஒருவருக்கு மட்டுமே அந்தப்பொருள் கிடைக்கும் என்று சொ
இரண்டு நிமிட நிபந்தனை!
இந்த ஏமாற்று வித்தையில் வேடிக் கையானவிஷயம், வாடிக்கை
யா ளர்கள்பொருளை வாங்கும்போது சுவாரஸ்யத்தைக் கூட்டவும், வேகமாக அந்த வேலையைச் செய்து முடிக்கவும் சில ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் ஒரு டெக்னிக்கை பின்பற்றுகின்றன. அதாவது, பொருளைவாங்க 2 நிமி டங்களே அவகாசம்தரும். இதற்குள் நீங்கள் ஆர்டரை புக் செய்ய வேண்டும். இல்லையெனில், இந்த ஆஃபர் உங் களுக்கு
கிடைக்காது என்று சொல்வதால், நாம் பரபரப்புக்குள்ளாவோம். ஏற்கெனவே பணம் கட்டிவிட்டோம்; எனவே, 2 நிமிடத்தில் பொருளை வாங்கிவிட வேண்டும். இல்லாவிட்டால் கட்டியபணம் போய்விடும் என்கிற அவசரத்தில்தான் நாம் செயல்படு வோம். இந்த இரண்டு நிமிடத்தில் பொரு
ட்களை சரியாக புக்செய்ய முடியாமல் பணத்தை இழக்கிறார்கள் பலர்.
மறைமுக கட்டணங்கள்!
இன்னும் சில இணையதளங்கள் Free Trail, Half Price, போன்று பல ஆஃபர்களை தருகின்றன. இதிலு ம், பெரும்பாலும் நடப்பது மோசடியே. உண்மையில் இவர்கள் மறைமுக கட்டணங்கள் (Hidden Charges) என்ற பெயரில் அதிகமான
பணத்தை உங்களிடமிருந்து கறந்து விடுவார்கள். உண்மையாகவே இலவசம் என்றால் உங்கள் கிரெடிட், டெபிட் கார்டு தகவல்க ளைக்கேட்கமாட்டார்கள். இதே போல, திடீரென இலவசபோன், கம்ப்யூட்டர் என்று மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ். வந்தாலும் அவற்றை நீங்கள் கண்டுகொள்ளவே கூடாது.

ஷிப்பிங் கட்டண மோசடி!
ஷிப்பிங் கட்டண மோசடி!
உண்மையாக வாடிக்கையாளர்களி ன்மீது அக்கறை கொண்டிருக்கும் தளங்கள், டிவி வாங்கினால்கூட அதை கொண்டுவந்து தருவதற்கு எந்தக்கட்டணத்தையும்கேட்காது. அப்படியே கேட்டாலும் அது குறைவான தொகையாகவே இருக்கும். பொரு
ளை கொண்டுவந்து தர அதிக கட்டணம் கேட்கும் இணையதளங்களை நம்பக் கூடாது. இதில் இபே மட்டும் விதிவிலக்கு, காரணம், அத்தளத்தில் பொருட்க ளை விற்பவர்கள் பல நிறுவனங்களை ச்சேர்ந்தவர்கள். அவர்கள் விலைகுறைவாக தருவதால் பொருட்களை கொண்டு வந்து சேர்க்க கட்டணம் கேட்கலாம்.
நோ ரிட்டர்ன், ப்ளீஸ்!
விதிமுறைகளில் மோசடி!
கூரியர் மோசடி!
ஆன்லைன் ஷாப்பிங் மூலம் ஆர்டர் செய்திருக்கும் பொரு ளானது கூரியர் மூலமாக நமக்கு அனுப்பப்படும். ஆனால், அந்த கூரியரை பிரித்து பார்க்கும் போ
து அப்பொருளானது இல்லாமல்கூட இருக்கலாம். வீட்டுக்குவந்த கூரியரில் பொருள் ஏதும் இல்லை எனில், உடனே ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனத்துக்கு தெரியப்படுத்துவது அவசியம். ஆன் லைன் ஷாப்பிங் நிறு வனம் வாடிக்கையாளர்களுக்கு பொ ருட்களை அனுப்பியதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியாமல் போனால், அதன்பிறகு அந்த நிறுவனத்
தின்மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கும் வேலையில் இறங்கலாம். சில ஆன்லைன் ஷாப்பிங் நிறு வனங்கள் மூன்றாம் நபர் விற்பனையாளர்களைக்கொண்டு செயல்ப
டுவதால் அவர்களாலும் ஏமாற்றப்படலாம், ஜாக்கிர தை.
வாரன்டி இருக்கிறதா?
பல இணையதளங்கள் உற்பத்தியாளர் வாரன்டியுடன் தான் (Manufacturer Warranty)பொருளை விற்கின்
றன. ஒரு குறிப்பிட்ட பொருள் சந்தை விலையைவிட மிக க் குறைவாக இருந்தால், உற்பத்தி யாளர் வாரன்டி தராமல் மோசடி செ ய்துவிடுகின்றன சில நிறுவனங்கள். அப்படியே வாரன்டி தந்தாலும் அதற் கான பொறுப்பு அந்த ஆன் லைன் நிறுவனமா அல்லது உற்பத்தி செய்த நிறுவனமா என்கிற விஷயத்தில் நம்மை குழப்பி ஏமாற்றிவிடும்.

உஷாரய்யா உஷாரு!

உஷாரய்யா உஷாரு!
ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது இப்படி நடக்கும் மோசடிகளில் நாம் சிக்கி ஏமாறாமல் இருக்க சில விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
* பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பொருளை ரூ.100 அல்லது
200-க்கு தருகிறோம் என்று சொல்லும் தளங்களை ஒதுக்குவது நல்லது.
* பொருள் ஏலத்தில் (Auction, Bid) விற்க ப்படும்போது பொருளின் விலை சந்தை விலையைவிட சற்றேகுறைவாக மட்டு மே இருக்க வேண்டும். மிகஅதிக விலையு ள்ள பொருளை, மிகக்குறைந்த விலைக்கு ஏலத்தில்விற்றால் அது போலியாக இரு க்க வாய்ப்புள்ளது.

*பொருளை வாங்கும்போது, அதை ஏற்கெனவே வாங்கியவர்களின் கருத்தை வாங்கும் தளத்திலோ அல்லது இணையத்திலோ தேடிவிட்டு வாங்கவேண்டு ம்.
* ஒரு பொருளை ஆர்டர் செய்தவுடன் நமக்கு அது அவசியமில்லை என்று தோன்றும் அல்லது வேறு ஒரு பொரு ளை வாங்கத் தோன்றும். அம்மாதிரியான சமயங்களில் நீங்கள் ஆர்டர் செய்த பொருளை கேன்சல் செய்யும்
வசதியைக் குறிப்பிட்ட தளம் உங்களுக்கு வழங்குகிறதா என்று கவனித்து விட்டு, வாங்குவதற்கான வேலையில் இறங்குவது நல்லது. அதோடு முழுப்பணமும் உங்களுக்கு வந்து சேரும்படியாகவும் இருக்க வேண்டும். ஆர்டரை கேன்சல் செய்தால் பெரும்பாலும், ஐந்து முதல் ஏழு நாட்களுக்குள் உங்கள் பணம் திரும்ப வந்துவிடும்.
* கிரெடிட்கார்டு, டெபிட்கார்டு, நெட் பேங் கிங் மூலம் பணம் செலுத்துபவர்கள் மிக மிக பாதுகாப்பான தளம் என்று நம்பிக்கை இருந்தால்மட்டுமே
பய ன்படுத்துங்கள். இல்லைஎன்றால், பொருளை வாங்கும்போது பணம் தருகிறமாதிரி (Cash On Delivery)வைத்துக் கொள்ளுங்கள்.
* முதல்முறையாக ஆன்லைன் மூலம் பொரு ள் வாங்குபவர்கள் அதுகுறித்து நன்குபரிச்சய
ம் கொண்டவர் மூலம் வாங்கலாம்.
* ஆர்டர் செய்த பின்னர் உங்களுக்கு வரும் மின்ன ஞ்சல், குறுஞ்செய்தி போன்றவற்றை பொருள் உங்களுக்கு கிடைக்கும்வரை பத்திரமாக வைத்திருக் கவும்.”
No comments:
Post a Comment