Sunday, May 31, 2015

குழந்தைக்கு எந்த வயதில் என்ன உணவு?


குழந்தை வளர்ப்பில், தாய்மார்கள் முக்கிய கவனத்தை செலுத்த வேண்டியது அதன் உணவு முறையில் தான். ஒரு ஆண்டு காலம், நாம் அளிக்கும் சத்தான உணவே அவர்களின் எதிர்கால ஆரோக்கியத்திற்கு அஸ்திவாரமாக அமையும் என்கின்றனர் மருத்துவர்கள். பிறந்தது
முதல் ஒரு வயது நிறைவு பெறும் வரை, உணவு முறையில் அதிக கவனம் செலுத்தவேண்டும். குழந்தையின் தன்மைக்கேற்ப மாதந்தோறும் உணவு முறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்த மருத்துவர்களின் பரிந்துரையை காண்போம்:
0-4 மாதம் வரை: தாய்ப்பாலிலேயே குழந்தைக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடும். ஏனெனில், தாய்ப்பாலில் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ளது. மேலும் அந்த தாய்ப்பால், அவர்களின் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதோடு, பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் பிலிரூபின் என்னும் நிறமியை வெளியேற்றிவிடும். அதிலும் அந்த தாய்ப்பாலை
குறைந்தது நான்கு மாதங்களுக்கு கொடுக்க வேண்டும். இதனால் அவர்களது உறுப்புகள் அனைத்தும் வலுவடைவதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்பட ஆரம்பிக்கும்.
4-6 மாதம் வரை
: நான்கு மாதங்களுக்குப் பின்னர் குழந்தைகள் வேறு உணவை சாப்பிடுவதில், கவனத்தை செலுத்துவது போன்று தெரிந்தால், அப்போது ஒரு டேபிள் ஸ்பூன் வேக வைத்த இனிப்பு உருளைக்கிழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்பழம், பீச் போன்றவற்றை
நன்கு மசித்து கொடுக்க வேண்டும். அதிலும் இவர்களது ஆர்வத்தை எவ்வாறு தெரிந்து கொள்வதென்றால், ஒரு நாளைக்கு 8-10 முறை தாய்ப்பால் கொடுத்தும் அவர்கள் பசிக்கு அழுதால், அப்போது இந்த உணவுகளையும், தாய்ப்பால் கொடுத்து சிறிது நேரத்திற்குப் பின் கொடுக்கலாம். அதுவும் ஒருடேபிள் ஸ்பூன் தான் கொடுக்க வேண்டும்.
6-8 மாதம் வரை: இந்த மாதங்களில் தாய்ப்பால், பழங்களை கொடுக்கும் போதோ, மெதுவாக வேக வைத்து மசித்த சாதம், காய்கறிகள், பருப்பு வகைகள், சிக்கன் போன்ற அனைத்தையும் கொடுக்கலாம். அதிலும் அவ்வாறு கொடுக்கும் போது, அவர்களுக்கு 3-9 டேபிள்
ஸ்பூன் செர்லாக், 2-3 முறை தாய்ப்பால் மற்றும் 1/4 அல்லது 1/2 கப் வேக வைத்து மசித்த காய்கறிகள் என்று கொடுக்க ஆரம்பிக்கலாம். அவ்வாறு இவற்றையெல்லாம் கொடுக்கும் போது, குழந்தைகளுக்கு அந்த உணவுகளால் ஏதாவது அலர்ஜி போன்று வருகிறதா என்று அவ்வப்போது கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வந்தால், உடனே அந்த உணவுகளில் எவற்றால் ஆகிறது என்று மருத்துவரிடம் சென்று ஆலோசித்து, அவற்றை தவிர மற்றவற்றை கொடுக்கலாம்.
8-10 மாதம் வரை: இந்த வயதில், சீஸ், தயிர் மற்றும் இரும்புச்சத்துள்ள தானியங்களான அரிசி, பார்லி, கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை மெதுவாக கொடுக்க ஆரம்பிக்கலாம். அத்துடன் 1/4 கப் புரோட்டீன் உணவுகளான முட்டை, மீன் போன்றவற்றையும்
கொடுக்க ஆரம்பிக்கலாம்.
10-12 மாதம்: இந்த வயதில் அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். அளவாக இருக்க வேண்டும். உணவுகள் கொடுக்கும் போது மிகவும் கவனமாகவும், அளவாகவும் கொடுக்க வேண்டும். அதாவது 1/3 கப் பால்பொருட்கள் அல்லது 1/2 கப் சீஸ் உடன் 1/4 அல்லது 1/2 கப் சாதத்துடன், காய்கறிகள் மற்றும் புரோட்டீன் உணவுகளை நிச்சயம் கொடுக்க வேண்டும்.

பாம்புக்கு முட்டையும் பாலும் வைப்ப‍து ஏன்?



நமது வீட்டில் இருக்கும் பெண்கள்,  பாம்பு புற்றுக்குள்  முட்டையைப் போட்டு, அதில் பாலையும் ஊற்றுவார்கள். கேட்டால் பாம்பு பாலையும் முட் டையையும் விரும்பிக் குடிக்கும் என்பார்கள். ஆனால் உண்மை என்ன வென்றால்,
பாம்புக்கு முட்டையும் குடிக்காது பாலையும் குடிக்காது.
பின் ஏன் பாம்புக்கு முட்டையும் பாலையும் கொடுக்கிறார்கள். இதற்கான விஞ்ஞான விளக்க‍ம் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ள‍து.
பெருங்காடுகளிலும் மலைக்குகைகளிலும் ஆதி மனிதர்கள் வாழ்ந்து வந்தார்கள். அந்த ஆதி மனிதர்களுக்கு இந்த பாம்புகள்தான் பெரிய உயிரிழப்புக்களும் பெருத்த காயங்களும் ஏற்பட்டு அவர்களுக்கு பெருந் தலைவலி யாகவே  இருந்து வருகிறது. இதனை தடுக்க‍வும், தங்களைத் தற்காத்து கொள்ள‍ ஒரு உத்தியைக்கையாண்டார்கள்.
அந்த உத்தி அவர்களுக்கு பெரிய அளவில் கைகொடுத்த‍து.
அந்த உத்தி என்னவென்றால், பாம்புகளைக் கொல்ல‍ மனமில்லாமல் அவைகளை தெய்வங்களாக்கி அந்த புற்றுக்குள் முட்டையையும் பாலையும் ஊற்றினார்கள். பாம்புகளின் இனப்பெருக்கத் தை கட்டுப்படுத்த‍ எண்ணினார்கள். அதன்படி இந்த பாம்புகள் இனப் பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். 

பெண் பாம்பு, தான் உடலுறவுக்கு தயார் என்ப தை ஆண் பாம்புக்கு உணர்த்த‍ தனது உடலில் இருந்து பரோமோன்ஸ்  என்ற ஒருவித திரவத்தை அந்த ஆண் பாம்புக்கு காற்றின் மூலாமக  அனுப்பும். அதனை நுகர்ந்த அந்த ஆண் பாம்பு பெண் பாம்பைத் தேடி வந்து கலவிக்கொள்ளும். 

பாலிலிருந்தும் முட்டையிலிருந்தும் வெளிப்படும் ஒரு வித வாசனை, இந்த பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தி இனச் சேர்க்கையை தடுத்து அதன் மூலம் இன‌ப்பெருக்க‍த்தை கட்டுப்படுத்துகிற து.

Sunday, May 24, 2015

கவுட் பிரச்னை


“முற்றிய சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் புண், வீக்கம் வருவது சகஜம். சர்க்கரை நோய் இல்லாத சிலரும் ‘காலில் வீக்கம், எரிச்சல்… நடக்க முடியவில்லை’ என்று வருகின்றனர்.  இந்த கால் வீக்கத்தை உற்றுப் பார்த்தால், ஏதோ நீர் கோத்துக் கொண்டது போல இருக்கும்.  சப்பாத்திக் கள்ளியை காலில் கட்டி வைத்தால் எப்படி குத்துமோ, வலிக்குமோ அதே வலியை உணர்வார்கள். இந்த அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு கவுட் பிரச்னை இருக்க வாய்ப்பு அதிகம்” என்கிற ஹோமியோபதி மருத்துவர் ராமகிருஷ்ணன், ‘கவுட்’ பற்றிய டவுட்களைக் களைகிறார்.
  

கவுட் என்றால்?
கவுட்(Gout) என்பது ஒரு வகை மூட்டுவாதம். ரத்தத்தில் யூரிக் அமிலம் (Uric acid) அளவு அதிகரிக்கும்போது கவுட் ஏற்படும். சராசரியாக ஒரு மனிதனுக்கு 6-7 மி.லி கிராம் அளவுக்கு யூரிக் அமிலம் உடலில் இருப்பது இயல்புநிலை. இதற்கு மேல் சென்றால் கவுட் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அறிகுறிகள்?
பெருவிரலில் வீக்கம், நீர் கோத்து வலியுடன் கூடிய எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். பெரும்பாலும் கால் பெருவிரலில் கவுட் வரும். சிலருக்கு கைவிரல், முழங்கால் முட்டி, முழுங்கை முட்டி போன்ற எந்த மூட்டுகளில் வேண்டுமானாலும் வலியும், வீக்கமும் வரலாம். இந்த வீக்கத்தில் நீர் கோத்துக் கொண்டு தாளாத வலி ஏற்படும். முள் குத்துவது போன்ற எரிச்சலையும், நெருப்பின் மேல் நடப்பது போன்ற எரிச்சலையும் சிலர் உணர்வதாகச் சொல்கின்றனர்.
யாருக்கு கவுட் வரலாம்?
பெரும்பாலும் ஆண்களுக்கு கவுட் அதிகமாக வரும். ஆனால், இப்போது பெண்களுக்கும் கூட வருகிறது. 35 வயதுக்கு மேற்பட்ட நபருக்கு கவுட் பிரச்னை வரலாம். குறிப்பாக ஒயின், பீர் அருந்து பவர்களுக்கு கவுட் வர வாய்ப்புகள் அதிகம். மற்றபடி மரபியல், உணவுப் பழக்கங்கள் போன்ற காரணங் களால் கவுட் வரும் என்று உறுதியாக சொல்ல முடியாது.
தீர்வு என்ன?
கவுட் பிரச்னையைக் கண்டுகொள்ளாமல் விட்டால் அது சிறுநீரகத்தையும் பாதிக்கலாம்.  ஆறு மாதங்களாக கவுட் பிரச்னை இருக்கிறது என்றால், நோய் குணமாக 3-4 மாதங்களாவது தேவைப்படும். ஐந்து ஆண்டுகளாக கவுட் பிரச்னை பாதித்திருந்தால், குணமாக குறைந்தது ஒர் ஆண்டு பிடிக்கும். இது அவரவர் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பொறுத்தது. ரத்தத்தில் யூரிக் அமிலம் கலந்திருந்தால், இதற்கு மட்டும் மருந்து கொடுத்து சரி செய்ய முடியாது. இப்படி செய்தாலும் முழுமையாக குணப்படுத்த முடியாது. உடல் முழுவதற்கும் தேவைப்படுகிற ஆற்றலை தந்து, நோய் எதிர்ப்பு திறனை கூட்டி யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்தி சிகிச்சை செய்வதே சரியான முறை. இந்த பிரச்னைக்கு ஹோமியோபதி சிகிச்சை முறையில் தீர்வு இருக்கிறது. தகுதியான மருத்துவரைச் சந்திந்து, சிகிச்சை பெறுவதன் மூலம் நிரந்தரத் தீர்வை காணலாம்.


கவுட் தவிர்க்க
திரவ உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். குளிர்பானங்கள், பதப்படுத்தப்பட்ட திரவ உணவுகளைத் தவிர்த்து இயற்கையாகக் கிடைக்கக் கூடிய திரவ உணவுகளை உண்பதால் கவுட் பிரச்னையின் தாக்கம் குறையும்.
பீர், ஒயின் மட்டுமல்ல, மதுவை முற்றிலுமாகத் தவிர்ப்பது நல்லது.
கொழுப்பு குறைந்த பால் பொருட்களைச் சாப்பிடலாம். காலை உணவில் அவசியம் புரதச் சத்துக்கள் இடம் பெறுமாறு பார்த்துக் கொள்ளவும்.
அசைவ உணவுகளால் கவுட் பிரச்னை வருகிறது என்று உறுதியாக சொல்ல முடியாது. எனினும் அசைவ உணவுகளை அளவாக உண்ணலாம். குறிப்பாக ஈரல், மண்ணீரல், குடல் போன்ற உறுப்புகள் சார்ந்த அசைவ உணவுகளை அவசியம் தவிர்க்க வேண்டும்.
உடல் எடையை சீராகப் பராமரிப்பது அவசியம். உடல் எடை கூடாமல் பார்த்துக் கொண்டால் யூரிக் அமிலங்களின் அளவு உடலில் அதிகரிக்காமல் இருக்கும். உடல் எடையைக் குறைக்கிறேன் என்று எக்காரணத்தைக் கொண்டும் சாப்பிடாமல் இருக்கக் கூடாது. அதாவது விரதம் இருக்கத் தேவையில்லை. தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலமாக உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.
இயற்கை முறையில் விளையும் ஆர்கானிக் உணவுகளையே பிரதான உணவாக மாற்றிக் கொள்வதன் மூலம் யூரிக் அமிலங்களின் அளவு உடலில் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

உங்க காதுக்கு ஏற்ற‍ அலங்காரம்… காதலங்காரம்



காது அமைப்பில் வித்தியாசம் இருக்கலாம். அதை காதணிகள், மேக்கப் பினால்
சரி செய்து கொள்ளலாம்.
நீளக் காது என்றால் ஃபவுண்டேஷன் போட்டு சிறிதாக காட்டலாம். விதவிதமான காதணிகளால் அலங்கரிக்கலாம்.
காதின் கீழ் விளிம்பு அகலமாக இருந்தால்பட்டையாக நிறைய கல் வைத்த பேசரி தோடுகளை போட்டுக் கொள்ளுங் கள்.
சின்ன காது என்றால் காது மடல்களில் 2, 3 துளை போட்டு சின்னச் சின்ன வளையங் களை மாட்டி, காது விளிம்பில் கல் பதித்த சரம் போன்ற தோடுஅல்லது தொங்கட்டான் போடலாம்.
குண்டு முகத்துக்கு தொங்கட்டான் வேண்டாம். காதோடு ஒட்டின டிசைன் தோடு எடுப்பாக இரு க்கும்.
கழுத்தில் மெலிதான செயின் என்றால் காதணியை சற்று பெரிதாக அணி ந்து கொள்ளு ங்கள். காதோரம் குட்டிக் குட் டித் தோடுகள் அழகாக இருக் கும்.
அகலமான முகம் உள்ளவர்கள் நீள தொங்கட்டான்கள், ஒன்றின் கீழ்ஒன்றுவரும் குடை ஜிமிக்கிகள், பெரியவளைய ங்கள் போடலாம். கழுத்து நீளம் குறை வென் றால் காதணி நீளத்தை குறைக்கவும். காது மடல்களில் அணியும் தோடுகள், குட்டி தொங் கட்டான்கள், வளையங்கள் முகஅழகைகூட்டு ம். விழாக்களுக்கு செல்லும் போது அகலமான மாட்டல், கல் வைத்த குண்டு ஜிமிக்கி, பட்டை நெக்லஸ் போட்டுக்கொண்டு பட்டையை கிளப்பு ங்க.