| Posted On Aug 15,2012,By Muthukumar |
தம்பதிகளிடம் ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் விவாகரத்துகள் அதிகரித்து
வருவது உலகம் முழுவதும் அன்றாட நிகழ்வாகி விட்டது. ஈகோ பிரச்னையால் உப்பு
பெறாத விஷயம் கூட விவாகரத்தில் முடிவது தொடர் கதையாகிவிட்டது. தம்பதிகளின்
கருத்து வேறுபாடுகளை களைந்து விவாகரத்தை தடுக்க பல்வேறு அமைப்புகள்
முயற்சியில் ஈடுபட்டுள்ளன. விவாகரத்துகளை தடுக்கும் வழிமுறை குறித்த
பல்வேறு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று புதிய நேசல் ஸ்ப்ரே ஒன்றை தம்பதிகளின் சண்டைக்கு சமரச தீர்வாக அறிமுகப்படுத்தி உள்ளது. ஜூரிச் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு இது. மன உளைச்சலும் அதனால் ஏற்படும் நரம்பு மண்டல பாதிப்புகளும் குறித்த ஆய்வில் இத்தகவல் வெளியாகி உள்ளது. ஆய்வுக்காக அடிக்கடி சண்டையிடும் சுமார் 47 தம்பதிகள் தேர்வு செய்யப்பட்டு 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். ஒரு பிரிவினருக்கு புதிய நேசல் ஸ்ப்ரே, சண்டையின் போது 5 முறை பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டது. இவர்களிடையே நேசல் ஸ்ப்ரே அடித்த 45 நிமிடங்களில் கோபம், ஈகோ குறைந்து சமரசம் ஏற்பட துவங்கியது. மற்றொரு பிரிவினரிடையே சண்டையில் சமரசம் இல்லை. ஆண், பெண் வேறுபாடின்றி தம்பதிகளில் இருவரும் இதனை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:
தம்பதிகளிடையே சண்டை தவிர்க்க முடியாதது என்ற நிலையில், ஆக்சிடோசின் ரசாயன கலப்புள்ள ஸ்பிரேயை சிறிது மூக்கில் அடித்துக் கொண்டால் போதும். வந்த வேகத்தில் கோபம் மறைந்து விடும். சண்டை வலுக்காது சமரசம் நிச்சயம். இந்த ஸ்பிரே கோபத்தை குறைப்பதுடன் எதிர்பார்ப்பு, ஏமாற்றம், உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தி சூழ்நிலைக்கு தகுந்தவாறு சுமூகமான மனநிலையை உருவாக்கும். உடலில் உள்ள சுரப்பிகளில் ஆக்சிடோசின் சுரப்பியும் ஒன்று. இது மூளையின் ஹைப்போதாலமஸ் பகுதியில் உள்ளது.பெண்களுக்கு பிரசவ காலத்தில் இந்த சுரப்பி செர்விக்ஸ் பகுதியை விரிவடைய செய்து பிரசவத்தை எளிதாக்குகிறது. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும் இது காரணமாகிறது. உடலின் பல்வேறு உறுப்புகளையும் கட்டுப்படுத்துகிறது. இதனால் கோபம், ஆவேசம், ஆத்திரம், சுமூகமான மனநிலைகள் ஏற்படுகின்றன. எதிர்மறை எண்ணங்கள் தோன்றும் போது இதயத் துடிப்பு, கோபம் அதிகரிக்கும். இந்நிலை தொடர்ந்தால் உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படும். இந்த நிலையை ஆக்டோசின் நேசல் ஸ்பிரே மாற்றும். இதனால் பாதிப்பும் பக்க விளைவுகளும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இல்லத்தரசிங்களே உங்களுக்கு பால் காய்ச்ச தெரியுமானு யாராவது கேட்டா இது
என்ன கேள்வி? பால் கூடவா காய்ச்சத் தெரியாது? அது என்ன பெரிய விஷயமா? என்று
சாதாரணமாகக் கேட்பார்கள். அப்படி கேட்க நினைப்பவர்களில் நீங்களும் ஒருவரா
தோழிகளே. 



நெருக்கடியான இன்றைய சூழலில் சின்னதாய் வீடு கிடைப்பதே சிரமமான செயலாக
உள்ளது. இருக்கும் இடத்தில் எவ்வாறு அழகுபடுத்துவது என்பதே அனைவரின்
மனதிலும் எழும் கேள்வி. சின்ன இடத்தைக் கூட சிறப்பாக அழகுபடுத்தலாம்
என்கின்றனர் வீட்டு உள் அலங்கார நிபுணர்கள். 
வேண்டும்.

செருப்பை தேர்ந்தெடுக்கும் போது, அழகு மற்றும் அளவு ஆகியவை பொருத்தமாக இருக்கும்படி கவனித்துக் கொள்ள வேண்டும்.
முடியாமல் அலறியவாறு திணறிக்கொண்டு இருந்த து.
திருமணம், திருவிழா ஏதேனும் பார்ட்டி என்று வந்தால் உடனே மேக் அப் போட்டு
கொண்டு அழகாய் வலம் வருவோம். நாம் போட்டு இருக்கும் மேக் அப் கலைந்து
விடாமல் நம்மை அழகாய் காட்டவேண்டும். அழகாய் காட்டுவதற்கு நாம் போட்டு
இருக்கும் மேக் அப் கலையாமல் பாதுகாக்க வேண்டும். மேக் அப் போடும் போது
அதிகமாகிவிட்டாலும் அதனை திருத்தமாக போடுவதில்தான் இருக்கிறது அழகின்
ரகசியம்.
அப்போது அவரது வலை யில் மீன்களுடன் நண்டுக ளும் சிக்கின. அவற்றை அந்த மீனவர் கரைக்கு கொண்டு வந்தார்.