Tuesday, August 14, 2012

விவாகரத்தை தடுக்க புதிய ஸ்பிரே: மூக்கில் 5 முறை அடித்தால் போதும்

Posted On Aug 15,2012,By Muthukumar
தம்பதிகளிடம் ஏற்படும் கருத்து வேறுபாடுகளால் விவாகரத்துகள் அதிகரித்து வருவது உலகம் முழுவதும் அன்றாட நிகழ்வாகி விட்டது. ஈகோ பிரச்னையால் உப்பு பெறாத விஷயம் கூட விவாகரத்தில் முடிவது தொடர் கதையாகிவிட்டது. தம்பதிகளின் கருத்து வேறுபாடுகளை களைந்து விவாகரத்தை தடுக்க பல்வேறு அமைப்புகள் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. விவாகரத்துகளை தடுக்கும் வழிமுறை குறித்த பல்வேறு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று புதிய நேசல் ஸ்ப்ரே ஒன்றை தம்பதிகளின் சண்டைக்கு சமரச தீர்வாக அறிமுகப்படுத்தி உள்ளது. ஜூரிச் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு இது. மன உளைச்சலும் அதனால் ஏற்படும் நரம்பு மண்டல பாதிப்புகளும் குறித்த ஆய்வில் இத்தகவல் வெளியாகி உள்ளது. ஆய்வுக்காக அடிக்கடி சண்டையிடும் சுமார் 47 தம்பதிகள் தேர்வு செய்யப்பட்டு 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். ஒரு பிரிவினருக்கு புதிய நேசல் ஸ்ப்ரே, சண்டையின் போது 5 முறை பயன்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டது. இவர்களிடையே நேசல் ஸ்ப்ரே அடித்த 45 நிமிடங்களில் கோபம், ஈகோ குறைந்து சமரசம் ஏற்பட துவங்கியது. மற்றொரு பிரிவினரிடையே சண்டையில் சமரசம் இல்லை. ஆண், பெண் வேறுபாடின்றி தம்பதிகளில் இருவரும் இதனை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:
தம்பதிகளிடையே சண்டை தவிர்க்க முடியாதது என்ற நிலையில், ஆக்சிடோசின் ரசாயன கலப்புள்ள ஸ்பிரேயை சிறிது மூக்கில் அடித்துக் கொண்டால் போதும். வந்த வேகத்தில் கோபம் மறைந்து விடும். சண்டை வலுக்காது சமரசம் நிச்சயம். இந்த ஸ்பிரே கோபத்தை குறைப்பதுடன் எதிர்பார்ப்பு, ஏமாற்றம், உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தி சூழ்நிலைக்கு தகுந்தவாறு சுமூகமான மனநிலையை உருவாக்கும். உடலில் உள்ள சுரப்பிகளில் ஆக்சிடோசின் சுரப்பியும் ஒன்று. இது மூளையின் ஹைப்போதாலமஸ் பகுதியில் உள்ளது.பெண்களுக்கு பிரசவ காலத்தில் இந்த சுரப்பி செர்விக்ஸ் பகுதியை விரிவடைய செய்து பிரசவத்தை எளிதாக்குகிறது. தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும் இது காரணமாகிறது. உடலின் பல்வேறு உறுப்புகளையும் கட்டுப்படுத்துகிறது. இதனால் கோபம், ஆவேசம், ஆத்திரம், சுமூகமான மனநிலைகள் ஏற்படுகின்றன. எதிர்மறை எண்ணங்கள் தோன்றும் போது இதயத் துடிப்பு, கோபம் அதிகரிக்கும். இந்நிலை தொடர்ந்தால் உயர் ரத்த அழுத்த பாதிப்பு ஏற்படும். இந்த நிலையை ஆக்டோசின் நேசல் ஸ்பிரே மாற்றும். இதனால் பாதிப்பும் பக்க விளைவுகளும் கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 ரூபாய்க்கு பட்டுப் புடவை

Posted On Aug 15,2012,By Muthukumar

 காதலின் நினைவுச் சின்னமான தாஜ்மகாலுக்கு அருகில் யமுனை நதிக்கரை ஓரத்தில், அற்புதமான தொழில் ஒன்று நடந்துகொண்டிருக்கிறது. இந்தியாவிலே மிக அதிகமாக மறுசுழற்சி முறையில் அங்கு பட்டுப்புடவைகள் உருவாகிறது.

Sarry1 பார்த்து பார்த்து அழகான பட்டுபுடவைகளை தேர்ந்தெடுத்தாலும், நாளுக்கு நாள் புதிய புடவை கள் அறிமுகமாகிக்கொண்டே இருக்கின்றன. அத னால் ஒரு சில வருடங்களுக்கு முன்னால் வாங் கியது, தற்போது பழையதாகிவிடும். புதிது புதிதாக வாங்கும்போது பழைய புடவைகளை ஒதுக்கித் தள்ளி, ஓரங்கட்டித்தானே ஆகவேண்டும். அப்படி ஓரங்கட்டப்படும் புடவைகளை வாங்குவதற்கு நாடு முழுவதும் ஏஜெண்டுகளை இந்த கிராம மறுசுழற்சி வியாபாரிகள் வைத்திருக்கிறார்கள். வெளிநாடு களில் இருந்துகூட பழைய புடவைகளை இவர்கள் வாங்குகிறார்கள். யமுனை நதிக்கரை ஓரத்தில் இருக்கும் சிறிய ரக தொழிற்சாலைகளில் அவை மறு சுழற்சி செய்யப்பட்டு புதிய புடவைகளாக உரு மாறுகிறது.
நக்லா தேவ்ஜித் என்பது யமுனை நதிக்கரை ஓரத்து காலனிகளில் ஒன்று. அங்கிருக்கும் பிரபல பட்டுப் புடவை வியாபாரி முகமது நிசார். மறு சுழற்சி பட்டுகளை பெண்களை கவரும் விதத்தில் விதவித மாக அடுக்கி வைத்துக்கொண்டிருக்கும் அவர் சொல்கிறார்..
"நாங்கள் சென்னை, சூரத் உள்பட நாட்டின் பல பகுதிகளில் இருந்து பழைய புடவைகளை வாங்குகிறோம். விலை கொடுத்தும் வாங்கு வோம். இலவசமாகவும் பெறுவோம். ஓரளவு கிழிந்த புடவைகள் மிகக்குறைந்த விலைக்கு கிடைக்கும். சில பெண்கள் கணவரிடம் புதிய புடவைகள் வாங்குவதற்காக, நல்ல புடவை களைக்கூட எங்களிடம் தந்துவிடுவார்கள். முதலில் அந்த புடவைகளை தரம் பிரிப்போம். பின்பு அவைகளை துவைப்பதற்காக யமுனைக்கு கொண்டு செல்வோம். அங்குதான் பழைய புடவைகளை புதியதாக்கும் வித்தைகளை செய்கிறோம்'' என்று அவர் ரசித்து சொல்கிறார்.
இந்த நதிக்கரை ஓரத்தில் புடவைகள் தரம் பிரிக்கப் படுகிறது. பிளீச்சிங் திரவத்தில் முக்கி எடுக்கப்படுகிறது. நிறம் கொடுக்கப்படுகிறது. ஆங்காங்கே உலரவைக்கப் படுகிறது. இதை எல்லாம் பார்க்கும்போது நதிக்கரை ஓரத்தில் வானவில் போன்ற காட்சி கிடைக்கிறது. இந்த மறுசுழற்சியில் இருக்கும் ரகசியங்களை அவர்கள் வெளியே சொல்வதில்லை.
Sarry2
புடவை ஒன்றின் ஒரு பகுதி மட்டும் நிறம் மங்கி இருந்தால் அதை அப்படியே வெட்டி எடுத்து நீக்குகி றார்கள். இன்னொரு பகுதியில் லேசான கிழிசல் தெரிந் தால் அதை வெளியே தெரியாத அளவிற்கு தைக்கி றார்கள். அதற்கு பொருத்தமாக இன்னொரு புடவையை அதில் சேர்க்கிறார்கள். கடைசியாக அந்த புடவையை பார்க்கும்போது புதிய புடவைபோல் தோன்றுகிறது.
புடவைகளில் தேவையற்றவைகளை நீக்கவும், புதிய வற்றை சேர்க்கவும் ஏராளமான ஆண்களும், பெண்க ளும், கத்திரி, ஊசி, நூல் போன்றவைகளுடன் காட்சி தருகிறார்கள். கடைசியில் அழகாக அயர்ன் செய்து, அடுக்கி, கவரில் வைக்கிறார்கள்.
"நாங்கள் பெரும்பாலான பட்டுப்புடவைகளை 50 ரூபாய்க்குதான் விற்கிறோம். 100, 150 ரூபாய்க்கும் விற்பதுண்டு..'' என்கிறார், முகமது நிசார்.
இப்போது யமுனை நதிக்கரை ஓரத்தில் இந்த மறுசுழற்சி புடவை தயாரிப்பு பணியில் 150-க்கு மேற்பட்ட `யூனிட்டுகள்' செயல்படுகின்றன. இந்தியா முழுவதும் இருந்து தாஜ்மகாலை பார்க்கச் செல்கிறவர்கள், அப்படியே இந்த யூனிட்டுகளுக்கும் சென்று புடவைகளை வாங்கிவிட்டு செல்கிறார்கள். திரைச்சீலை, சீட் கவர் போன்றவைகளை தைக்கவும் இங்கு வந்து மலிவு விலை புடவைகளை வாங்கிச் செல்கிறார்கள்

Sunday, August 12, 2012

உங்களுக்கு தெரியுமா பாலை எப்படி காய்சனும்னு

Posted On Aug 12,2012By Muthukumar
இல்லத்தரசிங்களே உங்களுக்கு பால் காய்ச்ச தெரியுமானு யாராவது கேட்டா இது என்ன கேள்வி? பால் கூடவா காய்ச்சத் தெரியாது? அது என்ன பெரிய விஷயமா? என்று சாதாரணமாகக் கேட்பார்கள். அப்படி கேட்க நினைப்பவர்களில் நீங்களும் ஒருவரா தோழிகளே.
நீங்கள் எப்படி பால் காய்ச்சனும்னு உணவியல் நிபுணர் ஷைனி சந்திரன் தருகிற தகவல்களைப் படித்துப் பாருங்கள். அப்போது உங்களுக்கு தெரியும் பால் காய்ச்சுவதன் அருமை என்ன என்று.!
பாலைப் பலமுறை சுட வைப்பது மிக மிகத் தவறான பழக்கம்.
காய்ச்சிய பாலை, 2-3 நிமிடங்களுக்கு மேலாக நீண்ட நேரம் சுட வைக்கும் போது, அதில் உள்ள வைட்டமின், பி காம்ப்ளக்ஸ் சத்துக்களான, பி1, பி2, பி12 ஆகியவை ஆவியாகிவிடும்.
கால்சியம் மற்றும் வைட்டமின் சத்துக்களுக்காகத்தான் பால் குடிக்கிறோம். ஆனால், பாலை அடிக்கடி சுட வைப்பதால், அந்த சத்துக்கள் வீணாகிவிடும். பால் குடிப்பதும் வீண்தான்.
பசும் பாலில் தீங்கு தரும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகள் இருக்கும். அவை காய்ச்சும் போது அழிந்துவிடும். பசும் பால் வாங்குபவர்கள், பால் பொங்கியதும் உடனே இறக்கி விடாமல், 8-10 நிமிடங்கள் காய்ச்ச வேண்டும். கரண்டியால், பாலைக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் பால், 100 டிகிரி செல்சியஸ் வரை சூடாகி, தீங்கு தரும் பாக்டீரியாக்கள் அழியும்.
இன்று பெரும்பாலும் பாக்கெட் பாலை வாங்குகிறோம். அது ஏற்கனவே, சுத்தம் செய்யப்பட்ட பின்தான், பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகிறது என்பதால், அதை நீண்ட நேரம் காய்ச்ச வேண்டும் என்ற அவசியமில்லை. பதப்படுத்தப்பட்ட பாக்கெட் பாலில் ஏற்கனவே, பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டிருப்பதால், அதை, 6-8 நிமிடங்கள் சூடு செய்தால் போதும்.
பாலைக் காய்ச்சியதும் குடித்து விடவேண்டும். பாலை ஆறவிட்டு, மீண்டும் சூடாக்கி, சத்துக்களை அழித்த பாலைக் குடிப்பதைத் தவிர்க்கவேண்டும். பொதுவாக, எந்த வகைப் பாலாக இருந்தாலும், அதை இரண்டு முறைக்கு மேல் சுடவைக்க வேண்டாம்.
ஒருமுறை பாலைக் காய்ச்சியபின், அதை பிரிட்ஜில் வைக்கலாம். காபி, டீ எனத் தயார் செய்யும்போது, மீண்டும் மொத்தப் பாலையும் காய்ச்சாமல், எத்தனை டம்ளர் தேவைப்படுகிறதோ, அந்தளவிற்கு மட்டும் பாலை எடுத்துத் தயார் செய்யலாம்.
இனியாவது பால் காய்ச்சும் போது சத்துக்களை அழித்துவிடாமல் ஒழுங்காக பால் காய்ச்சலாம் தோழிகளே.

பலூன் சாகசம்!

Posted On Aug 12,2012,By Muthukumar

AirBalloon
குட்டி பலூன்கள் குழந்தைகளுக்குப் பிடிக்கும். ஆனால் பெரியவர்களைக் கவர்ந்தவை `மெகா' பலூன்கள். அந்த பிரம்மாண்ட பலூன்களில் பறப்பது சர்வதேச அளவில் ஒரு சாகச விளையாட்டாகவும், பொழுதுபோக்காகவும் உள்ளது.
145 ஆண்டுகளுக்கு முன்னர், பலூன் போன்ற ஓர் அமைப்பில் பறக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஜோசப் மாண்ட் கால்பியர், எடியன் மாண்ட் கால்பியர் என்ற பிரான்சு நாட்டு சகோதரர்கள் மெல்லிய காகிதங்களைக் கொண்டு ஒரு பெட்டி செய்து, அதனுள் வெப்பமான காற்றை நிரப்பினார்கள். அது, விறகு போட்டு எரித்த அடுப்பில் இருந்து வெளிப்பட்ட காற்று.
வெப்பக் காற்று நிரப்பப்பட்ட அக்காகிதப் பெட்டி, ஆகாயத்தில் மிகவும் உயரத்துக்குச் சென்று பறந்தது.
அதே சகோதரர்கள் 1783-ம் ஆண்டு, துணியால் செய்யப்பட்ட பெட்டியில் வெப்ப வாயுவை அடைத்துப் பறக்கவிட்டுச் சோதனை நடத்தினார்கள்.
அதே ஆண்டில் ஆகஸ்டு மாதம் 17-ம் தேதி பிரான்சில் சார்லஸ் என்பவர் பட்டுத் துணியில் பலூன் போன்ற ஒன்றைச் செய்து ஹைட்ரஜன் வாயுவை அதில் நிரப்பி அந்தப் பலூனின் உதவியுடன் ஆகாயத்தில் பறந்தார். ஆனால் அந்த முயற்சி பாதுகாப்பானதாக இல்லை. அபாயகரமானதாக இருந்தது.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜெல்ரீஸ் என்பவரும், பிளாங்கார்டு என்பவரும் மேம்படுத்தப்பட்ட ஒரு பெரிய பலூனில் ஏறி 1785-ம் ஆண்டு ஜனவரி 7-ம் தேதி வானத்தில் பறந்தார்கள். 22 மைல் தூரம் அவர்கள் வானத்தில் பயணம் செய்தார்கள். அதைப் போல பலரும் மிகுந்த துணிச்சலுடன் பலூன் மூலம் நீண்டநேரம் விமானத்தில் பறந்து சாதனை படைத்தனர்.
பிரேசில் நாட்டைச் சேர்ந்த சாந்தா டியூமா என்பவர், பலூனில் ஒரு சிறு எந்திரத்தைப் பொருத்தி அதன் உதவியுடன் வானத்தில் பறந்து பயணித்தார்.
அவரது பலூனின் முகப்பில் உள்ள ஒரு காற்றாடியை அவர் பொருத்திய எந்திரம் சுழலச் செய்தது. காற்றாடி சுழல்வதால் காற்று பின்னோக்கித் தள்ளப்பட, பலூன் ஆகாயத்தில் பறந்தது.
சாந்தா டியூமாவுக்குப் பிறகு பலரும் பலூன்கள் மூலம் பறந்து சாதனை புரிந்தனர். அதன்பிறகு பல்வேறு மாற்றங்களுடன் பலூனில் பறப்பது பாதுகாப்பானதாக மாறியது.

பெண்கள் சொல்வதை கேளுங்க! ஈஸியா அட்ராக்ட் செய்யலாம்!!

Posted On Aug 12,2012,By Muthukumar
பொண்ணுங்களுக்கு என்ன புடிக்கும்? எப்படி நடந்துக்கிட்டா அவர்களை ஈசியா அட்ராக்ட் செய்யலாம் என்று யோசிப்பவர்களா நீங்கள்?. உங்களுக்காகவே ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் உளவியல் நிபுணர்கள் புதிதாக திருமணம் செய்துகொண்ட ஆண்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் படியுங்களேன்.
பெண்களைக் கவர முதலில் டேக் இட் ஈசி பாலிசியை வளர்த்துக்கொள்ளுங்கள், எதற்கும் கவலைப்படாதீர்கள். அதுதான் பெண்ணைக் கவர்வதற்கான முதற்படி. எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எதையாவது செய்ய ஆரம்பித்து கடைசியில் உள்ளதும் போய்விடும்.
தன்னம்பிக்கை கொண்ட ஆண்களால்தான் பெண்களை எளிதில் கவரமுடியும். எனவே எந்த சூழ்நிலையிலும் தலைகவிழ்ந்து பேசாதீர்கள். கண்களை நேருக்கு நேராக சந்தித்து பேசுங்கள். உங்கள் உடல்மொழி, பேசும் திறன் போன்ற அனைத்திலும் தன்னம்பிக்கை மிளிரட்டும்.
சிடுமூஞ்சித்தனமாவோ, ரிசர்வ் டைப் ஆகவோ இருப்பதை விட புன்னகையுடன் இருக்கும் ஆண்களைத்தான் பெண்கள் அதிகம் கவர்கின்றனராம் எனவே உங்கள் உதடுகளில் புன்னகை தவழட்டும். சந்தோசமான புன்னகையை தினசரி கண்ணாடியைப் பார்த்தாவது பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.
பேசும் வார்த்தைகளில் தன்னம்பிக்கை மிளிரட்டும். அதேபோல் உங்களுக்கு தெரிந்தவைகளை எல்லாம் பேசி பெண்களை மிரட்சியடையச் செய்யவேண்டாம். அவர்களுக்கு என்ன பிடிக்கிறதோ அது தொடர்பானவைகளை முதலில் பேசி அசத்துங்கள். பின்னர் உங்களின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துங்கள்.
பெண்கள் கூறுவதை காதுகொடுத்து கவனியுங்கள். நீங்கள் கவனிக்க ஆரம்பித்தாலே அவர்களின் மனதில் உயர்ந்து விடுவீர்கள். பெண்களின் கண்களை கூர்ந்து கவனியுங்கள் அப்புறம் நீங்கள் கூறுவதை அவர்கள் கேட்க ஆரம்பித்து விடுவார்கள்.
காதலிக்காகவோ, மனைவிக்காகவோ பொது இடங்களில் சென்று காத்திருப்பதில் தவறில்லை. அது உங்கள் மீதான மதிப்பினை அதிகரிக்கும். காத்திருக்கும் சமயங்களில் என்ன பேசலாம் என்பதை ஒத்திகை பார்க்க இயலும்.

செல்லப்பிராணியை எப்படி, எதற்காக வளர்க்க வேண்டும்?


இந்த உலகத்தில் செல்லப்பிராணிகள் இல்லாத வீட்டைப்பார்க்கவே முடியாது. ஏனெனில் அந்த அளவில் அனைவருக்கும் செல்லப் பிரா ணிகள் என்றால் பிடிக்கும். அதிலு ம் இவர்கள் வீட்டில் நாய், பூனை, முயல், கிளி என்று எதுவானாலும் சரி, அவர்கள் வீட்டில் வளர்த்து மகி ழ்வார்கள். மேலும் செல்லப்பிரா ணிகளை வளர்ப்பவர்களுக்கு, எதை வாங்கினால் நம்முடன் எளி தில் அது பழகும், நாம் எவ்வாறு அத னுடன் பழகுவோம் என்பதும் நன்கு தெரியும். கொஞ்ச நாட்களில் அது வீட்டில் உள்ளவர்களுடன் மிகவும் நெருக்கமாகி, வீட்டில் ஒருவராக வே மாறிவிடும். என்னதான் செல்லப்பிராணிகளை விரும்பி வாங் கி, மனதளவில் சந்தோஷமடைகிறோமோ, அதே அளவில் உடலள விலும் நன்மையை அடைய வேண்டும். ஆகவே இவ்வாறு உடல் அளவில் நன்மையை பெற, அந்த செல்லப்பிராணியை எப்படி, எதற் காக சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
* அலுவலகத்தில் உள்ள அதிக வே லையின் காரணமாக, மன அழுத்தத் துடன் வீட்டிற்கு வருவோம். அப்போது வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணி கள் நம்மை பார்க்கும்போது, ஆசை யோடு தாவிக்குதித்து நம்முடன் விளையாடும். அந்த நேரத்தில் நம் மிடம் விளையாடுவதைப் பார்க்கும் போது, மனஅழுத்தம் குறை ந்து, சற்று நிம்மதியாக இருக்கும். இந்த கட்டத்தில் நம்மை சமாதானப் படுத்துவதில், நம் செல்லப் பிரா ணியை தவிர யாராலும் நமது மன அழுத்தத்தை குறைக்க முடியாது. ஆகவே அத்தகைய நம் செல்லப் பிராணியை நாம் சுத்தமாக வைத் துக் கொள்ளாமல் இருந்தால், அதன்மேல் இருக்கும் கிருமிகள் நம்மைத் தாக்கி உடலில் நோயை ஏற்படுத்தும்.
* காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்யும்போது, நம்முடன் அந்த செல்லப்பிராணிகளையும் அழைத்துக் செல்லலாம். செல்லப் பிரா ணிகளுடன் விளையாட நிறைய விளையாட்டுக்கள் இருக்கின்றன. மேலும் நீங்கள் சோம்பேறியாக இருப்பவராக இருந்தால், நமது வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணியை அழைத்துச் செல்வது மிகவும் நல்லது. ஏனெனில் அதை நாம் வெளியில் அழைத்துச்செல்கிறோம் என்றால் மிகுந்த ஆசையோடு, அங்கம் இங்கும் ஓடி நம்முடன் விளையாடும். மேலும் இதுவே ஒரு நல்ல உட ற்பயிற்சியாக அமை யும்.
* வீட்டில் செல்லப்பிராணிகள் வாங்குகிறோம் என்றால், அதனை நமது நண்பனாகத்தான் நினைப்போம். மேலும் அவை நமக்கு மிக வும் விசுவாசமாக இருக்கும், எந்த நேரத்திலும் துரோகம் வி ளைவிக்காது. என்ன தான் பிரச் சனையை நீங்கள் சந்திக்க நேர் ந்தாலும், யார் உங்களை விட்  டுச் சென்றாலும், நாம் ஆசை யாக வளர்க்கும் செல்லப்பிரா ணிகள் நம்மை விட்டுச் செல் லாது. இவற்றில் நாய்கள் தான் மிகவும் சிறந்தது.
* எத்தனை பேர் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, நீங்கள் சொல்வதை கேட்கிறார்கள்? யாரும் இல்லையா? கவலைப்படவே ண் டாம். எந்த நேரத்திலும் நீங்கள் சொல்வதை மற்றும் நீங்கள் செய்வதை திரும்பி செய்யும் ஒரு உயிர், செல்லப்பிராணிகள் தான். அந்த நேரத்தில் உங்களு க்கு செல்லப்பிராணியைவிட சிறந்த நண்பர் யாராகவும் இரு க்க முடியாது. மேலும் என்ன கஷ்டம் என்றாலும், எந்த இரக சியம் என்றாலும் அதனை யாரி டமாவது சொல்ல வேண்டும் என்று தோன்றினால், அதை நம து செல்லப்பிராணிகளிடம் சொ ல்லலாம். சொல்லப்போனால், இந்த உலகில் யாரை நம்புகிறோ மோ, இல்லையோ, நமது செல்லப்பிராணிகளை நம்பலாம்.
* செல்லப்பிராணிகள் வீட்டில் இருந் தால், நமக்கு வீட்டில் ஒரு பாது காப்பு இருப்பது போல் இருக்கும். செல்லப் பிராணிகள் நமக்கு ஒரு சிறந்த நண் பன் என்று சொல்வதோடு, நமக்கு ஒரு நல்ல பாதுகாப்பையும் தரும். அது நம் முடன் இருக்கும்போது, கெட்ட எண் ணத்துடன் பழகும் எவரையும் விரை வில் காட்டிக் கொடுத்துவிடும்.

டிசைனர்’ தக்காளி ரெடி!

Posted On Aug 12,2012,By Muthukumar

Tomato
`வாரக் கணக்கில் வைத்திருந்தாலும் அழுகிப்போகாத, காய்ந்து சுருங்கிப்போகாத, பார்ப்பதற்கு அழகான, சுவை மிகுந்த பழங்களும், காய்கறிகளும் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்' என்று நம்மில் பலரும் கற்பனை செய்து பார்த்திருப்போம். ஆனால் யதார்த்தத்தில் கடைகளில் கிடைக்கும் பழங்களும் காய் கறிகளும் பரவாயில்லை ரகம்தான்.
உதாரணமாக, தக்காளியை எடுத்துக்கொள்ளலாம். இயற்கையில் தக்காளிகள் காய் பருவத்திலிருந்து பழமாக மாறும்போது சமமாக முற்றுவது இல்லை. அதனால் ஒரு தக்காளி பழத்தில் அங்கங்கு திட்டு திட்டாக பச்சை நிறம் மீதமிருக்கும். அதாவது ஒரு பழத்தில் சில பகுதிகள் காயாகவே இருக்கும்.
தக்காளிகளில் உள்ள இந்த பிரச்சினை கடந்த 1920 களில் ஒரு முடிவுக்கு வந்தது. சமமாக முற்றி பழம் முழுவதும் சிவப்பாக, ஒரே வண்ணமாக இருக்கும் ஒரு வித்தியாசமான, ஆனால் இயற்கையான தக்காளி ரகத்தை வியாபாரிகள் கண்டறிந்தனர். அதன்பிறகு அந்த ரகத்தை மட்டுமே உற்பத்தி செய்தனர்.
இந்த தக்காளி ரகம் சமமாக முற்றி ஒரே வண்ணத்தில் இருப்பதற்கு, இதில் உள்ள ஒரு மரபணு மாற்றம் (மியூட்டேஷன்) தான் காரணம் என்று தாவரவியல் விஞ்ஞானிகள் கண்டறிந்தார்கள். இதற்கு காரணமான மரபணு `சமமாக முற்றும்' மரபணு என்று அழைக்கப்பட்டது.
சமமாக முற்றி, பழம் முழுவதும் சிவப்பாக, அழகாக இருக்கும் இந்த தக்காளியில் ஒரு முக்கியமான பிரச்சினையும் இருக்கிறது. அதாவது நன்றாக முற்றி, சிவப்பாக, அழகாக இருந்தாலும் இந்த தக்காளி ரகம் ஏனோ சுவையாக இருப்பதில்லை. இந்த பிரச்சினைக்கான காரணத்தையும், தீர்வையும் கண்டறிய முற்பட்டார்கள் அமெரிக்க மற்றும் ஸ்பெயின் நாட்டு தாவரவியல் ஆய்வாளர்கள்.
`பொசிஷனல் குளோனிங்' என்னும் பிரத்தியேகமான மரபணுவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, `சமமாக முற்றும்' மரபணு இந்த தக்காளியின் மரபணுக் கோப்பில் உள்ள 10-வது குரோமோசோமில் இருப்பதை கண்டறிந்தார் முனைவர் பட்ட மாணவர் குவாங் கையென். அதன்பிறகு தக்காளியின் உணவு உற்பத்தியை கட்டுப் படுத்தும் புரதத்துக்கு காரணமான மரபணுவையும் கண்டுபிடித்தது இந்த ஆய்வுக்குழு.
பொதுவாக, ஒரு தாவரத்தின் உணவு உற்பத்தி அல்லது ஒளிச் சேர்க்கை முழுவதையும் அதன் இலைகளே கவனித்துக்கொள்கின்றன. ஆனால் தக்காளியை பொறுத்தவரை, அதன் உணவு உற்பத்தியில் சுமார் 20 சதவீதம் வளரும் தக்காளி பழத்தி லிருந்து கிடைக்கிறது. இதனால் தக்காளி பழத்தில் அதிக அளவு சர்க்கரையும், ஊட்டச் சத்துகளும் உற்பத்தி ஆகின்றன.
ஆனால், சமமாக முற்றும் மரபணுவில் ஏற்படும் மரபணு மாற்றம் காரணமாக தக்காளியில் உள்ள அதிகமான சர்க்கரை மற்றும் ஊட்டச் சத்துகளை உற்பத்தி செய்யும் புரதம் அழிக்கப்படுகிறது. அதனால் தான், சமமாக முற்றும் மரபணுவில் மாற்றம் உள்ள தக்காளி ரகத்தில் குறைவான அளவு சர்க்கரையும், ஊட்டச் சத்துகளும் உள்ளன என்கிறார் ஆய்வுக்குழுவின் தலைவர் ஜியோவானோனி.
சமமாக முற்றும் மரபணு மாற்றம் உள்ள தக்காளி ரகத்தை தேர்ந்தெடுப்பதன் மூலம் சுவையான மற்றும் ஊட்டச் சத்து நிறைந்த தக்காளிகளை வியாபாரிகள் இழந்து விடுகிறார்கள். இதன் காரணமாக, தக்காளியின் சிவப்பழகில் மயங்கி அதனை வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்களும் பெரிதாக பயனடைவது இல்லை. மிகவும் பயனுள்ள இந்த அறிவியல் உண்மையை தக்காளி தொடர்பான இந்த புதிய ஆய்வு வெளிக்கொண்டு வந்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
இந்த கண்டுபிடிப்பின் மூலம் பல நன்மைகள் உண்டு என்கிறார் கள் ஆய்வாளர்கள். உதாரணமாக, கண்ணைக் கவரும் சிவப்பு வண்ண பழங்கள்தான் எங்களுக்கு வேண்டும் என்று அடம்பிடிக்கும் வியாபாரிகள், முற்றிய தக்காளி பழம் வரும்வரை தாவரங்களை வளரவிட்டு பின்னர் அவற்றை தேர்ந்தெடுத்து பயிர் செய்ய வேண்டியதில்லை. மாறாக, தக்காளி செடிகள் முளை பருவத்தில் இருக்கும்போதே அவற்றில் சமமாக முற்றும் மரபணு மாற்றம் இருக்கிறதா என்பதை டி.என்.ஏ பரிசோதனை மூலம் கண்டறிந்து மரபணு மாற்றமுள்ள செடிகளை தேர்ந்தெடுத்துவிடலாம்.
மற்றொருபுறம், `தக்காளியின் சிவப்பழகைப் பற்றியெல்லாம் எங்களுக்கு கவலையில்லை. அவற்றில் அதிக சுவையும், ஊட்டச் சத்துகளும் இருந்தால் போதும்' (அதாவது சமமாக முற்றும் மரபணு மாற்றம் இருக்கக் கூடாது) என்று விரும்புபவர்கள், சமமாக முற்றும் மரபணு மாற்றம் இல்லாத தக்காளி பயிர்களை தேர்ந்தெடுத்து பயிர் செய்துகொள்ளலாம்.
அடடா இதுவல்லவோ தொழில்நுட்பம், இனி தக்காளிகளில் நாம் எந்த தரத்தை விரும்புகிறோமோ அதை தேர்ந்தெடுத்து பயிர் செய்துகொள்ளலாம். புதுயுக டிசைனர் தக்காளி ரெடி, பயிர் செய்து பயனடைய நீங்க ரெடியா என்கிறார்கள் தாவரவியலாளர்கள்.

Saturday, August 11, 2012

ஈக்கள் எப்படி நோயைப் பரப்புகிறது?

பார்க்க அப்பாவியாகத் தெரியும் இந்த ஈக்கள் செய்யும் வேலை மிக வும் அபாயகரமானது. குப்​பைகள், கழிவு நீர், மலம் போன்ற ஏராள மான கிருமிகள் குடியிருக்கும் இடம் தான் இவற்றின் வாழ்விடம். நூறுக் கும் மேற்பட்ட நுண்ணு யிரிகளை சுமந்து திரியும் ஈயின்  ஆயுட்காலம் ஒரு வாரம்தான். ஆனால், அதற்குள் இது எத்தனை யோ ஆபத்துகளை உருவாக்கி விடுகிறது. ஒவ்வொரு முறையும் சுமார் 500 முட்டைகள் வரை இடு ம் ஈயானது, தன்னுடைய வாழ் நாளில் 75 முதல் 150 முறை முட் டையிடும். அப்படி என்றால் ஒரு ஈ, தனது வாழ்நாளில் எத்தனை ஈக் களை உற்பத்தி செய்கிறது என்று கணக்கிட்டுக்​கொள்​ளுங்கள். கழி வுகளில் குடியிருக்கும் ஈ, உண வாக உட்கொள்​வதும் அக் கழிவு களைத்​தான். ஈக்களின் கால்களி ல் பிசின் போன்ற வட்டமான ஒரு உறுப்பு உள்ளது. கழிவுகளின்மீது உட்காரும்​போது இப்பிசின் போ ன்ற பகுதியில் கிருமிகள் ஒட்டிக் கொள்கின்றன. பிறகு அந்த ஈக்க ள் உணவுப் பொருட்களின் மீதோ அல்லது நம் உடலின் மீதோ உட் காரும்போது, கிருமிகள் எளிதாக நம் உடலுக்குள் சென்று விடுகின் றன.
 
டைஃபாய்டு, காலரா, வயிற்றுப்போக்கு, வாந்தி, போலியோ, மஞ்சள் காமாலை, காச நோய், ஆந்த்ராக்ஸ், கண் அழற்சி, வயிற்றுப் புழுக்க ள் போன்ற பல்வேறு நோய்க ளைத் தோற்றுவிக்கும் காரணி யாக விளங்குகின்றன ஈக்கள். இந்த ஈக்களால் ஆண்டுதோறு ம் பல லட்சம்பேர் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளா கின்றனர். இவை எல்லாம்  ஆர ம்பத்தில் சாதாரண வியாதிக ளாகத்தான் தோன்றும். ஆனா ல், கண்டு​கொள்ளவில்லை என்றால் பெரிய ஆபத்தாகிவி டும். உதாரணமாக வயிற்றுப்போக்கு தொடர்ச்​சியாக இருக்கும்போ து, உடலில் நீர்ச்சத்து குறைந்து மரணம் ஏற்படும் வாய்ப்புண்டு. மஞ் சள் காமாலை, ஆந்த்​ராக்ஸ் போன்ற வையும் உயிருக்கு உலை வைக்கக் கூ டியவை.அதனால் குப்பைகளைத்தேங் க விடாமல் உடனுக்குடன் அப்புறப்படு த்த வேண்டும். வீட்டுக்கு அருகில் தண் ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதன் மூலம் ஈக்களின் எண்ணிக்கை பெரு காமல் தடுக்க முடியும். உணவுப் பொரு ட்களை மூடி வைத்தே பயன்படுத்த வே ண்டும். மொத்தத்தில் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக் கொண் டால் ஈக்களால் பிரச்னை இல்லை. சுற்றுப்புறம் என்பது நம் வீடு மட் டும் அல்ல; பொது இடங்களையும் சேர்த்துத்தான். பக்கத்துத் தெருவி ல் தேங்கி இருக்கும் மழைநீரில் உள்ள ஈ, உங்கள் வீட்டுக்குப் பறந்து வர ஒரு நிமிடம்கூட ஆகாது. ஆகவே கவனம் தேவை!


மிக்ஸி பராமரிப்பு

1. வோல்டேஜ் அதிகமாகவோ அல்ல‍து குறைவாகவோ இருந்தால் மிக்ஸியை உபயோகிக்கக் கூடாது. மோட்டார் கெட்டு விடும்.
2. ஜாரில் 3ல் 2 பங்கு தான் நிரப்ப வேண்டும். அதிகம் போட்டால் விரைவாக பழுது ஏற்படும்.
3. அரிசி மாவு கெட்டியாகத் தேவைப் படும் போது அரிசியைக் கெட்டியாக அரைப்பதாலும் மிக்ஸி கெட்டுவிடு ம்.
4. ஜாரில் போட்டு அரைத்ததும் உட ன் அதில் தண்ணீர் ஊற்றி ஸ்லோ ஸ்பீடில் வைத்து அலம்பித் தனியாக எடுத்து வைக்க வேண்டும். பாத் திரம் கழுவும்போது பாத்திரத்தோடு கழுவலாம் எனப்பாத்திரத்தோ டு சேர்த்துப் போடக் கூடாது.
5. மிக்ஸி பிளேடுகளை சாணை பிடிக்கவே கூடாது. மிக்ஸி பிளே டுகள் மோட்டாரின் வேகத்தைப்பொறுத் தே நைசாக அரைக்கும்.
6. மிக்ஸின் பிளேடுகள் மழுங்கிவிட்டா ல் கல் உப்பை ஒரு கை எடுத்து மிக்ஸி யில் போட்டு ஒரிரு நிமிடங்கள் ஓட்ட வும். பிளேடுகல் கூர்மையாகிவிடும்.
7. ஜார்களில் அடிப்பகுதி ரிப்பேர் ஆகி அடிப்பகுதியில் தண்ணீர் கசிவு இருந்தா ல் உடன் ஜாரை சரி பார்க்க வேண்டும். இல்லையென்றால் தண்ணீர் மோட்டாரி ல் இறங்கி மிக்ஸியில் பழுது ஏற்பட்டுவிடும்.
8. சூடான பொருள்களை மிக்ஸியில் அரைக்கக் கூடாது.
9. மிக்ஸியில் அரைக்கும் போது சூடு உண்டாகிறதா என்பதைக் கவ னித்து இடைவெளி விட்டு அரைக்க வேண்டும்.
10. மிக்ஸி ஓடும்போது மூடியைக் கை யினால் அழுத்திக் கொள்ள வேண்டும்.
11. அரைக்கும்போது பிளேடுகள் லூசா கி உள்ளதா என்பதைக் கவனித்து டை ட்டு செய்து கொ ள்ள வேண்டும்.
12. மிக்ஸியில் ஜாரின் அடிப் பாகத்தில் ரப்பரால் ஆன இணைக்கும் பகுதி அதற் கென்று மிக்ஸியில் அமைக்கப்பட்டுள்ள பள்ளமான பாகத்துடன் சரியாகப் பொருத்தப்பட வேண்டும் இல்லையெனில் மிக்ஸி பழுதா கிவிடும்.
13. அரைக்கும் பொருள்களுடன் பிளேடு சுலபமாக சுற்றக்கூடிய அளவு தண்ணீர்விட்டு அரைக்க வேண்டும். இல்லையெனில் பிளேடு உடையவோ, மோட்டா ர் எரியவோ நேரலாம்.
14. மிக்ஸி ஒடும் போது திறந்து பார்க்கக் கூடாது.
15. இட்லிக்கு மிக்ஸியில் புழுங் கல் அரிசி அரைக்கும் போது இர வே ஊற வைத்துவிட்டால் மிக சிக்கிரமாக அரைத்து விடலாம். மிக்ஸி சூடாவதையும் தடுக்கலாம்.

Ferrari ஆன்டராய்டு மொபைல்

Posted On Aug 12,2012,By Muthukumar


Ferrari நிறுவனம் உலக அளவில் மிக பிரபலமான ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனமாகும். Motorola நிறுவனம் Ferrari  நிறுவனத்துடன் இனைந்து  NEXTEL.

Ferrari-i867 என்ற ஸ்மார்ட்போனை தாயரிக்க உள்ளனர்.









Ferrari  நிறுவனத்தின் சிகப்பு வண்ணத்திலே அறிமுகம் ஆகிறது.
ferrari motorola andriod smartphone

Ferrari-i867  சிறப்பு அம்சங்கள்
  • 3.1″ Touchscreen with 320×480 Pixels Resolution
  • 58 x 114 x 13 mm, 129grams
  • Google Android OS
  • 3 Megapixel Camera
  • 3.5″ Audio Jack, Dual Mics for Noise Cancellation
  • microSD Card Slot (Supports upto 32GB – 2GB Included in Sales Package)
  • GPS, Bluetooth
  • Motorola iDEN Technology, Wi-Fi
  • 1390 mAH Battery
ferrari motorola andriod smartphone
ferrari motorola andriod smartphone



விலை சுமாராக; Rs20000 இருக்கலாம்

சிறிய வீடும் பெரிதாக தெரியும்

Posted On Aug 12,2012,By Muthukumar
நெருக்கடியான இன்றைய சூழலில் சின்னதாய் வீடு கிடைப்பதே சிரமமான செயலாக உள்ளது. இருக்கும் இடத்தில் எவ்வாறு அழகுபடுத்துவது என்பதே அனைவரின் மனதிலும் எழும் கேள்வி. சின்ன இடத்தைக் கூட சிறப்பாக அழகுபடுத்தலாம் என்கின்றனர் வீட்டு உள் அலங்கார நிபுணர்கள்.
சின்ன இடத்திற்கேற்ப நாற்காலிகள் மேஜைகளை தேர்வு செய்து போடுவது இடத்தை பெரிதாக்கி காட்டும். அடர்த்தியான நிறங்களில் பர்னிச்சர்களை தேர்வு செய்யவும். முடிந்தவரை மடக்கி வைக்கும் பொருட்களாக இருந்தால் நல்லது. கண்ணாடி இல்லாத வீட்டினை பார்க்க முடியாது அழகான தொங்கும் கண்ணாடிகளை சுவர்களில் அழகாக பொருத்தினால் சிறிய இடம் கூட மிகப்பெரிய இடம் போல தோற்றமளிக்கும்.
வீட்டுச்சுவர்களுக்கு ஏற்ற வால்பேப்பர் ஒட்டுவது வீட்டின் நீள, அகலத்தை அதிகரிக்கும். அதேபோல் இதமான நிறங்களான ப்ளூ, வயலட், பச்சை போன்ற வர்ணங்களை சுவர்களுக்கு அடிப்பதும் வீட்டை பெரிதாக்கி காட்டும். சீலிங்கும், சுவரும் தொட்டுக்கொள்ளும் இடத்தில் அழகான பார்டர் போல வால்பேப்பரில் ஒட்டுவது அறையின் அகலத்தை அதிகமாக்கி காட்டும்.
சிறிய அறையில் ஜன்னல் இல்லாமல் இருக்கிறதா? கவலை வேண்டாம். ஓவியங்களை சுவர்களில் தொங்கவிட வீடு அழகாவதோடு ஜன்னல் இல்லாத குறையை நீக்கும். சிறிய இடம்தான் இருக்கிறதா ஒரே அலமாரியில் அனைத்தையும் அடுக்குவது போல உள்ள வசதியான அலமாரியை தேர்தெடுப்பது நல்லது.
புத்தகங்களை அடுக்க ஏற்ற உயரமான அலமாரிகளை தேர்ந்தெடுத்து வாங்கவேண்டும். அவை பழமையை பறைசாற்றும் வகையில் இருப்பது நலம். அதே சமயம் கண்களை உறுத்தாத வகையிலும் இருக்கவேண்டும்

Friday, August 10, 2012

கவியரசு கண்ண‍தாசன் குறிப்பிடும் மூன்று வகையான நண்பர்கள்


பனை மரம்

தானாக முளைத்து, தனக்கு கிடைத்த நீரை குடித்து தன் உடம்பை யும், ஓலையையும் மற்றும் நுங்கையும் உலகத்திற்கு தருகிறது நம்மிடம் எந்த உதவியும் கேட்காமல் உதவுபவன் பனைமரம் போன்ற நண்பன்.

தென்னை மரம்

தென்னை நம்மால் நடப்பட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்தால் பலன் தருகிறது. அதுபோல நம்மிடம் உதவி பெற்று நண்பனாக இருப்பவன் தென்னை மரத்துக்கு இணையானவன்.

வாழை மரம்


தினமும் தண்ணீர் ஊற்றினால்தான் பலன்தரும். அதுபோல நம்மிடம் தினமும் உதவி பெற்று வாழ்பவன் வாழைமரம் போன்றவன்.

Thursday, August 9, 2012

ஏ ஜோக்ஸ் கதைகள் தத்துவங்கள்

Posted On Aug 9,2012,By Muthukumar

  • கல்யாணம் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுகிறதென்றால் முதலிரவு எங்கே நிச்சயிக்கபடுகிறது? நான் நேரா அங்கே போயிடுறேன்!:)

  • பெண்கள் 600  வருடத்திற்கு முன்னாடியே ப்ரா அணிய ஆரம்பித்துவிட்டார்களாம்! -அதற்கும் முன்னாடியே பிறந்திருக்கலாம்! J
  
  • குலுங்கும்போதெல்லாம் குலுங்கிவிடுகிறேன் - விழுங்கிவிடலாமா என்று!

  • அவன் : எதுக்கு குனியும்போதெல்லாம் நெஞ்சில் கை வைத்துக்கொள்கிறாய்? 
அவள் : நீ வச்சிடக்கூடாதுன்னுதான்! 

  • நண்பன் 1 : எல்லாம் முடிந்த பிறகு மனைவிகிட்டே பேசுவியா?
நண்பன் 2  : அது என்னிடம் மொபைல் இருப்பதைப் பொறுத்து!"


  • நண்பன் 1 : ஒரு வருசமா லடலை போட்டா திவ்யா எனக்கு ராக்கி கடிட்டாடா!
நண்பன் 2 : இருந்தாலும் உன் தங்கை இப்படி பண்ணியிருக்கக் கூடாது மச்சா!!! 


செம தத்துவம் :-

  • அதிர்ஷ்டத்திற்கும் துரதிர்ஷ்டத்திற்கும் என்ன வித்தியாசம்?
காற்றில் ஸ்கர்ட் விலகும்போது நீ அதை பார்த்திட்டா அது உன்னோட அதிர்ஷ்டம்! 
ஆனா அந்த நேரத்தில உன் கண்ணுல தூசி விழுந்திட்டா அது உன் துரதிர்ஷ்டம்!   



நகைச்சுவைக் கதை:


ஸ்கூல் மணியடித்து பாடமெல்லாம் துவங்கிவிட்டனர்  அப்போது 2-ம் வகுப்பு மாணவி வகுப்பறைக்கு தாமதமாக வருகிறார்.


MISS : ஏன் லேட்டு?



GIRL : ஸ்கூல் பஸ்ஸ விட்டுட்டேன் மேடம்!



MISS : இப்போ டைம் என்ன தெரியுமா 9.30 ? அரைமணி நேரம் லேட்டு


 
GIRL : 
ஸாரி மிஸ்



MISS : நீ தினமும் இப்பிடித்தான் வர்ற? பீரியட்டோட இம்பார்டன்ஸி தெரியுமா உனக்கு?


 
GIRL :
  தெரியும் மிஸ்


MISS : தெரியுமா? என்ன தெரியும்? சொல்லு!



GIRL : அது வந்து மிஸ், ஒரு தடவை எங்கக்கா பீரியட மிஸ் பண்ணிட்டா அதைக் கேட்டதும் எங்கம்மா மயக்கம் போட்டு விழுந்திட்டாங்க, எங்கப்பா ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகிட்டாரு, எங்க வீட்டு கார் டிரைவர் வேலையவிட்டுவிட்டு ஓடிட்டான்!

இணையம் மூலமாக பான் கார்டு பெறுவது எப்ப‍டி?

இணையம் (ஆன்லைன்) மூலமான பான் கார்டை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள் ள‍லாம். இதற்கான படிவங்களை http://www.utitsl.co.in/pan/ அல்லது https://tin.tin.nsdl.com/pan/index.html இணையத் தளங்களிலி ருந்து டவுன்லோட் செய்துகொள்ளலாம்.
இணையத்தில் தோன்றும் விண்ண‍ப்ப‍த்தை பூர்த்தி செய்கையில் அதில் ஏதாவது விவர ங்கள் தவறாக இடம் பெற்று விட்டால் அத னைச் சரிசெய்து மீண்டும் ‘சப்மிட்’ செய்ய வழிவகை செய்திருக் கிறார்கள். விண்ணப்பத்தை ‘சப்மிட்’ செய்த பிறகு கம்ப்யூட்டர் ஸ்க் ரீனில் ‘அக்னாலெட்ஜ்மென்ட்’ பகுதி தோன்றும்,அதில் பத்து இலக்க  பான் எண் இடம் பெற்றிரு க்கும். மேலும், அதில் கலர் புகைப் படம் ஒட்டுவதற்கு 3.5 செ.மீ-க்கு 2.5 செ. மீ இடம்விடப்பட்டிருக்கும். இத னை பிரின்ட் அவுட் எடுத்து, போட்டோவை ஒட்டி, கையப்ப மிட்டு புகைப்படத்துடன் கூடிய சான்று (proof of identity) மற்றும் முகவரி ஆதாரம், பான் கார்ட் விண்ணப்பக் கட்டணத்துக்கான டி.டி அல்லது செக் ஆகியவற்றை National Securities Depository Limited, Trade World, A Wing, 4th Floor, Kamala Mills compound, Senapati Marg, Lower parel, Mumbai-400 013. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
கிரெடிட் கார்ட்மூலம் கட்ட ணம் செலுத்தும்போது கூடு தலாக சேவைக் கட்டணம் இருக்கிறது. 15 நாட்களுக்கு ள் தபால் அல்லது கூரியர் மூலம் பான் கார்ட் வீட்டுக்கு வரும். இம்முறையில் விண்ணப்பிக்கு ம்போது விவரங்களை மிகவும் கவனமாகப் பூர்த்திசெய்வது மிக அவசியம். இல்லை என்றால் கார்ட் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

Wednesday, August 8, 2012

சத்குரு ஜக்கி வாசுதேவின் டெரர் ஆன்மீகம்! கஞ்சா முதல் கொலை வரை!!


மடங்கள் என்றாலே மர்மங்கள் நிறைந்த டிராகுலா குகை என்றாகிவிட்டது. சாயிபாபா, மாயி, ஐக்கி துவங்கி பல்வேறு கார்ப்பரேட் சாமியார்களின் அரண்மனைகளில் கொலைகள் துவங்கி பல்வேறு வன்முறைகள் அரங்கேறியிருக்கின்றன. மக்களை மூடர்களாக்கி பதப்படுத்தும் வேலையை சாமியார்கள் செய்வதால் அவர்களது மோசடி, தகிடுதத்தங்களை ஆளும் வர்க்கம் கண்டு கொள்ளாமல் விடுகிறது. ஜக்கி வாசுதேவின் அத்தகைய மோசடி ஒன்றை இனியவன்  ஆதாரப்பூர்வமாக எழுதியிருக்கிறார். பலருக்கும் ஜக்கியின் இந்த கருப்புப் பக்கம் தெரியாது என்பதால் இங்கு வெளியிடுகிறோம்.

சத்குரு-ஜக்கி-வாசுதேவ்
ஷா யோகா என்கிற பெயரில் பிரச்சாரம் செய்யும் ‘கிட்டு’ என்கிற ‘கிருஷ்ண மூர்த்தி’ என்கிற‘ஜாவா வாசுதேவன்’ என்கிற “ஜக்கி வாசுதேவ்” இவர்க்கு இன்னொரு பெயர் “கார்போரேட் சாமியார்”
இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கோவை மாநகரத்தில் அமைந் துள்ள ப்ரூபாண்ட் ரோடு மேம்பாலம் கீழ் புறத்தில் குதிரை வண்டி நிறுத்து மிடமாக பயன்பாட்டில் இருந்த இடத்தில் சில சமூக விரோதிகளுக்கு கஞ்சா வியாபாரம் செய்ததாகவும், இவருக்கு ‘ரிச்சர்ட்’ என்ற பிரபல ரவுடி வியாபாரத்தில் உதவியதாகவும், இவர்கள் இருவருக்கும் ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது.
வியாபாரத்தின் மூலமாகவோ அல்லது பழக்க வழக்கத்தின் மூலமாகவோ ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அந்தப் பெண்ணின் நிலை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை என்றும்,சில நாட் களில் ரவுடி ரிச்சர்ட்டும் கொலை செய்யப்பட்டதாகவும் கூறுகிறார்கள். அதேபோல ஜக்கியின் மனைவியை இவரே கொலை செய்து விட்டார் என்று வழக்கு நீதிமன்றத்தில் நிலுவை யில் உள்ளபோது, பல ஆண்டுகளுக்கு முன்பே மத்திய புலனாய்வுத் துறை மூலமாக தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
இதையெல்லாம் அறிந்த பத்திரிகை நிருபர்கள் நேரம் வரும் போது ஜக்கியிடம் இதுபற்றி கேள்வி கேட்க வேண்டும் என இருந்த நிலையில்….
கோவை மாநகரில், மாநகராட் சிக்கு சொந்தமான வ.உ.சி. மைதானத் தில் கடந்த 13.12.2011 அன்று ஆனந்த அலை மகா சத் சங் நிகழ்ச்சியில் ஜக்கி வாசுதேவ் கலந்து கொள்ள வரவிருப்பதாகவும்,இது குறித்து கோவை வெஸ்ட் பிரஸ் வளாகத்தில் அன்று மாலை 5.30 மணியளவில் அனைத்து பத்திரிகையாளர்களையும் நேரில் சந்தித்து விளக்கமளிக்க இருப்பதாகவும் தெரிவித்திகிறார்கள்
சுமார் 25 பத்திரிகையாளர்கள் கலந்து கொண்ட அந்தச் சந்திப்பில் மாதம் இரு முறை வெளிவரும்‘ஆயுதம்’ இதழின் செய்தியாளராக பணியாற்றி வந்த மூத்த பத்திரிகை யாளர் எஸ். பூபதி கண்ணன் என்பவர் ஜக்கியைப் பார்த்து கீழ் வரும் கேள்விகளை சரமாரியாக கேட்கத் துவங்கினார். அதன் விவரம்:
1. உங்கள் யோகா மையத்தில் வெளிநாட்டில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது உண்மையா?
2. மேலும் யோகா மையத்திற் குள்ளும் உங்கள் வளாகத்தைச் சுற்றி உள்ள ஒரு சில இடங்களி லும் வெளிப்புற மரங்களிலும் இரகசிய கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறதே உண்மையா?
3. உங்கள் பெயரை ஜாவா வாசுதேவ் என்பது எப்போது ஜக்கி வாசுதேவாக மாற்றிக் கொண்டீர்கள்?இதுவும் உண்மையா?
4. மேலும் 1970 ஆம் ஆண்டு கோவை அவிநாசி ரோடு மேம்பாலத்தின் கீழ் கஞ்சா விற்றதாக கோவை காட்டூர் பி3 காவல் நிலையத்தில் வழக்கு உள்ளதாக கூறப்படுகிறது உண்மையா? என்று சங்கு சக்கரம் சுற்றுவதுபோல அடுக்கடுக்கான கேள்விகள் கேட்டபோது….
ஜக்கியின் முகம் மாறியது; கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் உடனே ஜக்கி செய்தியாளரைப் பார்த்து, “உனக்கு மனநிலை பாதிக்கப்ப்டடதுபோல உள்ளது. அதனால்தான் கேள்விகளை இப்படி கேட்கிறாய்” என்று கூற, சக பத்திரிகையாளர்கள் அதிர்ச்சியடைய – மீண்டும் ஜக்கியின் மனைவியின் சாவில் இருக்கும் கேள்விகளைக் கேட்டபோது, அருகில் இருந்த அவருடைய சீடர் களிடம் மௌனமாக ஜாடை காட்ட, 4 குண்டர்கள் செய்தியாளரை வெளியே தூக்கிக் கொண்டு வந்து ஒருவர் அவருடைய வலது கையை முறுக்கிக் கொண்டும், இன்னொருவர் அவருடைய பாக்கெட்டிற்குள் பத்திரிகையில் இவர் பணிபுரியும் அடையாள அட்டையைப் பறித்துக் கொண்டும் மற்றும் 2 பேர் தோள் பட்டை யில் சரமாரியாக தாக்கினார்கள். வலி தாங்க முடியாமல் கத்தியபோது, சக பத்திரிகை யாளர்கள் வெளியே வந்து பார்த்தவுடன் தாக்குதலை நிறுத்திக் கொண்டார்கள்.
சத்குரு-ஜக்கி-வாசுதேவ்-கார்டூன்
இது சம்பந்தமாக அன்று இரவே தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜே.பி.ஆர். மற்றும் சக நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்தி மறுநாள் (14.2.2011) அன்று காலை சுமார்100க்கும் மேற்பட்ட நிருபர்கள் ஈஷா மையம் ஜக்கி மீது புகார் கொடுத்தனர்.
புகாரைப் பெற்றுக் கொண்ட கோவை மாநகர காவல்துறை ஆணையர் சைலேந்திரபாபு சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதன் அடிப்படையில் அருகிலுள்ள பந்தைய சாலை பி4 காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாருக்கு காவல்நிலைய ஆய்வாளர் நகல் பிரதியை வழங்கினார். நகலின் பதிவு எண்.433/1808. இது இன்று வரை கிணற்றில் போட்ட கல் போல நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறது.
அதேபோல 2006 ஆம் ஆண்டு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் இவர் மீது புகார் கொடுத்தும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டும் வழக்கின் முடிவு வெத்துவேட்டாகி இவரின் மனைவி, மகளையும் இழந்தது தான் மிச்சம். இதுபோல பல மாவட்டங்களிலிருந்த 18வயதிற்குட்பட்ட பெண்கள் இவரால் யோகாசனம் என்கிற மூளைச் சலவை செய்து தன்வசப்படுத்திக் கொண்டார் என்றும் குற்றச்சாட்டு உள்ளது.
இப்படிப்பட்ட சந்தேகத்திற்குரிய மதவாதியான ஜக்கி வாசுதேவ் தன்மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிப்பாரா அல்லது அமைதி காத்து குற்றவாளி என ஒத்துக் கொள்வாரா?
__________________________
நன்றி – இனியவன்
__________________________

தன்னை முட்டாளாக்க‍ நினைத்த‍ வழக்கறிஞரையே முட்டாளாக்கிய நீதிபதி!

ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலைசெய்யப் பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின்பேரி ல் ஒருவரைக் கைதுசெய்து நீதி மன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது.
குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீ ல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என் று குற்றம் சாட்டப்பட்டதோ, அவ ரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழி யே உள்ளே வரப்போகிறார் . நீங்கள் அதைப்பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர் வீர்கள்” என்று கூறி அமர்ந்துவிட்டார்.
நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண் டிருந்தார்கள். 5 நிமிடம், 10 நிமிடம் கழிந்த து. ஒருவரும் வரவேயில்லை. இப்போது வழக்கறிஞர் எழுந்தார்.
“மைலார்ட்! நீங்கள் உட்பட யாருமே காணாமல் போனவர், கொலைதான் செய் யப்பட்டவர் என்பதை முழுமையாக நம்ப வில்லை. அதனால்தான் எல்லோரும் வாச லையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். என வே, உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறிவிட்டு கம்பீரமாக அமர்ந்தார்.

பிற்பகலில் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அளித்தா ர். வக்கீல் எழுந்து, “எப்படி மைலார்ட்?” என் று கேட்டார்.
அதற்கு நீதிபதி சொன்னார், “அந்த பத்து நிமிடமும் நான் வாசலைப் பார்த்தது உண் மைதான். ஆனால், ஒருதடவைகூட குற்றம் சாட்டப்பட்டவர் வாசலைப்பார்க்கவில்லை .”

செருப்பு வாங்கும் போது…

Posted On Aug 9,2012,By Muthukumar
செருப்பை தேர்ந்தெடுக்கும் போது, அழகு மற்றும் அளவு ஆகியவை பொருத்தமாக இருக்கும்படி கவனித்துக் கொள்ள வேண்டும்.
செருப்புகளை தேர்ந்தெடுத்து அணிந்து, நான்கைந்து அடி நடந்து பார்த்து, சரியானதாகவும், நடப்பதற்கு வசதியாகவும் இருந்தால் தான் வாங்க வேண்டும். அதிக இறுக்கமான செருப்புகளை அணியக் கூடாது. விலை குறைந்த செருப்புகளை விட, விலை கூடுதல் என்றாலும், தரமான, பாதங்களுக்கு ஏற்ற செருப்புகளையே வாங்க வேண்டும்.
தோல் செருப்புகளை, தண்ணீரில் நனையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நனைத்தால், செருப்பின் ஆயுளும் குறையும், பாதங்களுக்கு பொருத்தம் இல்லாமல் அழகும் கெட்டு விடும். தரையில் வழுக்காமல், கிரிப் உள்ள செருப்புகளையே பயன்படுத்த வேண்டும். மேலும், அழுத்தம் இல்லாமலும், அதிக கனமாக இல்லாமலும், மிருதுவாகவும் செருப்பு இருக்க வேண்டும்.
மழைக்காலத்தில், ரப்பர் செருப்புகளை அணியக் கூடாது. ஏனென்றால், அது நடக்கும்போது, வழுக்கி விடுவதுடன், துணிகளில் சேற்றை வாரி இறைத்து விடும். வயதான பெண்கள், வாதநோய் ஏற்பட்டவர்களும், குளிரான இடங்களிலும், ஈரத்தன்மைஉள்ள இடங்களிலும், செருப்பு அணியாமல் நடக்கக் கூடாது.
பொதுவாக பெண்களின் பாதங்கள் மென்மையானவை. ஆதலால், ஒருபோதும் இறுக்கமான செருப்புகளையோ, ஷூக்களையோ அணியக் கூடாது. அப்படி அணிந்தால், ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். பிளாஸ்டிக் செருப்புகளை விட, தோல் செருப்புகளும், ஷூக்களுமே சிறந்தவை. கால்களில் நோய் உள்ளவர்கள், உடல் பலம் குறைந்தவர்கள் போன்றோருக்கு, பிளாஸ்டிக் செருப்புகளால் உடலில் அதிக உஷ்ணம் ஏறி, சோர்வு ஏற்படும். கண்களும் எரிச்சலடையும். மேலும், அதிக வியர்வையும் தோன்றும். எனவே, பிளாஸ்டிக் செருப்புகளை தவிர்த்தல் நல்லது.
எவ்வளவு அவசரமாக இருந்தாலும், செருப்புகளையும், ஷூக்களையும் துடைத்து, உள்ளே ஏதாவது இருக்கிறதா? என பார்த்து அணிய வேண்டும். செருப்பு, ஷூக்களுக்கு அடிக்கடி பாலிஷ் செய்ய வேண்டும். இதனால், செருப்புகளுக்கு அழகும், ஆயுளும் கிடைக்கும். பாலிஷ் செய்யும் போது, செருப்பில் இருக்கும் ஈரத் தன்மையும் நீங்கி விடும்.
உங்களுக்கு செருப்பு வாங்குவதற்காக, அளவை கொடுத்து, இன்னொருவரை அனுப்பாதீர். நீங்களே சென்று தேர்ந்தெடுப்பது தான் சிறந்தது.
அடுத்தவர்களின் செருப்புகளை அணியக் கூடாது. இதனால், தோல் நோய் ஏற்படும். ரப்பர், பிளாஸ்டிக் செருப்புகளை அணியும் பெண்கள், அவற்றை தினமும் கழுவி சுத்தம் செய்து உபயோகிக்க வேண்டும்.

Sunday, August 5, 2012

மனித உருவ அமைப்புடன் விசித்திர ஆட்டு குட்டி

Posted On Aug 5,2012,By Muthukumar
மயிலாடுதுறை பகுதி இளையனூர் ஊராட்சி வடகரை கிராமம் வட க்கு தெருவை சேர்ந்தவர் விவசாயி மூர்த்தி. இவருக்கு சொந்தமான ஆடு ஒன்று நேற்று நள்ளிரவு குட்டி ஈன்றது. அந்த ஆடு குட்டி போட முடியாமல் அலறியவாறு திணறிக்கொண்டு இருந்த து.
 
இதை பார்த்த கிராம பெண் கள் 3 பேர் வெகுநேரம் போ ராடி பிரசவம் பார்த்தனர். பின்னர் ஆடு குட்டியை ஈன் றது. அந்த குட்டி வழக்கமா ன ஆட்டு குட்டிப்போல் இல் லாமல் விசித்திரமாக மனித உருவ அமைப்புடன் இருந்த து.
 
மனித உருவம்போல் உடல்வாகும், 2 கைகள், 2 கால்கள் இருந்த து. மேலும் முகம் மனித முகம் போன்றே அமைந்து இருந்தது. குறி ப்பாக ஒரு குழந்தையை போன்ற அந்த ஆட்டுக்குட்டியின் விசித்திர தோற்றத்தை கண்டு மூர்த்தி மற்றும் கிராம மக்கள் பார்த்து ஆச்சரி யம் அடைந்தனர்.
 
சில நிமிடங்களில் அந்த குட்டி இறந்து விட்டது. இந்த அதிசய ஆட்டு க்குட்டி பிறந்த  தகவல் அறிந்த சுற்றுப்புற பகுதி மக்கள் ஏராளமா னோர் ஆர்வமாய் வந்து பார்த்து ஆச்சரியமடைந்தனர். இந்த அதிசய   ஆட்டுக்குட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கொட்டாவி!

Posted On Aug 5,2012,By Muthu kumar

ஒருவர் கொட்டாவி விட்டால், பக்கத்தில் உள்ளவரும் கொட்டாவி விடுவார் என்று கூறுவார்கள். ஆனால் இது அறிவியல் ரீதியற்ற பொதுவான நம்பிக்கை என்பதுதான் நமது எண்ணமாக இருக்கும்.
தற்போது ஆய்வாளர்கள் உறுதிப்படுத்திவிட்டார்கள்- கொட்டாவி விடுபவர் நெருங்கிய உறவினராகவோ, நண்பராகவோ இருந்தால் அது நிச்சயமாகப் பரவும் என்று.
அருகில் உள்ளவர்கள் கொட்டாவி விடுவதைப் பார்ப்பவர்களும் ஏன் கொட்டாவி விடுவதைத் தவிர்க்க முடிவதில்லை என்ற கேள்வி நீண்டகாலமாக விஞ்ஞானிகளின் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தது.
தற்போது இத்தாலியின் பைசா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கொட்டாவி குறித்த உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
கொட்டாவி விடுபவருக்கும், அவருக்கு அருகில் இருந்து அதைப் பார்ப்பவர் அல்லது கேட்பவருக்கும் உள்ள உறவைப் பொறுத்து கொட்டாவியின் தாக்கம் இருக்கும் என்கிறார்கள் இவர்கள்.
நெருங்கிய உறவினர்களுடன் பேசிக்கொண்டிருப்பவர்கள் கொட்டாவி விடுவது அல்லது அதை அடுத்தவருக்குப் பரப்புவதற்கான வாய்ப்பு அதிகம் என்பது இந்த ஆய்வாளர்களின் கருத்து.
இவர்கள் தெரிவிக்கும் கூடுதல் தகவல், குழந்தைகளுக்கு நான்கு அல்லது ஐந்து வயது வரை அடுத்தவரிடம் இருந்து கொட்டாவி தொற்றிக்கொள்வதில்லை. அவர்கள், அடுத்தவர்களின் உணர்வுகளைப் புரிந்து பழகத் தொடங்கும்போதுதான் கொட்டாவி தொற்றுகிறது.

மேக்கப் போடுவதில் மட்டுமல்ல கலைப்பதிலும் கவனம் அவசியம்

Posted On Aug 5,2012,By Muthukumar
திருமணம், திருவிழா ஏதேனும் பார்ட்டி என்று வந்தால் உடனே மேக் அப் போட்டு கொண்டு அழகாய் வலம் வருவோம். நாம் போட்டு இருக்கும் மேக் அப் கலைந்து விடாமல் நம்மை அழகாய் காட்டவேண்டும். அழகாய் காட்டுவதற்கு நாம் போட்டு இருக்கும் மேக் அப் கலையாமல் பாதுகாக்க வேண்டும். மேக் அப் போடும் போது அதிகமாகிவிட்டாலும் அதனை திருத்தமாக போடுவதில்தான் இருக்கிறது அழகின் ரகசியம்.
மேக் அப் போட ஆரம்பிக்கும் போதே போதுமான அளவில் மேக் அப் செய்து கொள்ள வேண்டும். மேக் அதிகமாக போட்டுவிட்டோமே என்று நினைப்பவர்கள் சிறிதளவு பஞ்சு எடுத்து அதிகமுள்ள இடங்களில் துடைக்கவும், அந்த இடத்தில் காம்பாக்ட் பவுடர் போட்டு அட்ஜஸ்ட் செய்ய வேண்டும்.
அதிகப்படியான மேக் அப் செய்திருந்தால் அதனை சரி செய்ய பேஷியல் கிளன்சர் சிறந்த பொருளாகும். அதிகமாக இருக்கும் இடங்களில் கிளன்சர் போட்டு கழுவலாம். கன்னத்தில் அதிகமாக ரூஜ் அப்பிவிட்டால் பஞ்சு எடுத்து கன்னங்களில் உருட்டிவிட்டு சிறிதளவு காம்பாக்ட் பவுடர் போட்டு அட்ஜஸ்ட் செய்யலாம்.
கண் இமைகளின் மேல் ஐஷேடோ அதிகமாவிட்டால் சிறிதளவு கிரீம் போட்டு கழுவி விடலாம். உதடுகளில் லிப்ஸ்டிக் அதிகமாகிவிட்டால் பிளைன் டிஸ்யூ பேப்பர் வைத்து லேசாக உதட்டின் மேல் வைத்து ஒற்றி எடுக்கலாம். இவ்வாறு செய்தால் லிப்ஸ்டிக் அதிகமாக போட்டது போல தெரியாது.
பண்டிகை, திருவிழா மற்றும் பார்ட்டிகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய பின்னர், தூங்கச் செல்வதற்கு முன்பாக மேக்கப்பை நன்றாக கழுவி விடவும். இதனால் சருமத்தின் இயல்புத்தன்மை பாகாக்கப்படும். மேக் அப் போட்டபடியே தூங்குவது சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே சருமத்தைப் பற்றி கவலைப்படுபவர்கள் மேக் அப் கலைத்து விட்டு தூங்குவது பாதுகாப்பானது என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.
மேக்கப்பை கழுவி சுத்தம் செய்யும் போது மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் முகத்தில் கரும்புள்ளிகள் ஏற்பட்டு விடும். குறிப்பாக கண்களைச் சுற்றியிருக்கும் மேக்கப்பை கலைப்பதற்கு பேபி ஷாம்புவை பயன்படுத்துவது சிறந்ததாகும்.
இரண்டு சொட்டு பேபி ஷாம்புவை எடுத்து கைவிரல்களில் தடவிக் கொண்டு, கண் இமை மற்றும் கண்ணைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடவவும். பின்னர் நன்றாக கண்களை மூடிக் கொண்டு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இதன் பின்னர் தூங்கினால் நன்றாக தூக்கமும் வரும் அழகும் பாதுகாக்கப்படும்.

Friday, August 3, 2012

நண்டு உடலில் தெரிந்த இயேசு, பின்லேடன் உருவங்கள் Posted on July 23, 2012 by vidhai2virutcham

Posted On Aug 3,2012,By Muthukumar
அமெரிக்கா தலைநகரம் வாஷிங்டன் அருகேயுள்ள எவரெட் என்ற இடத்தில் கடலில் மீனவர் ஒருவர் மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது அவரது வலை யில் மீன்களுடன் நண்டுக ளும் சிக்கின. அவற்றை அந்த மீனவர் கரைக்கு கொண்டு வந்தார். 
அதில் ஒரு நண்டு உடலி ன் வயிற்றுப் பகுதியில் இயேசு கிறிஸ்து போன்ற உருவம் இருந்தது. அதைப் பார்த்து ஆச்சரியம் அடை ந்த அவர் மற்ற மீனவர்க ளிடம் தெரிவித்தார். அவர்களும் வந்து அதை பார்த்து வியந்தனர். அந்த நண்டு உடலில் இருந்த உருவம் இயேசு மட்டுமின்றி சமீபத்தில் சுட்டு கொல்லப்பட்ட அல்கொய்தா தீவிரவாதி பின்லேடனின் உரு வம் போன்றும் தெரிந்தது

காய்கறி வாங்கும்போது நல்ல‍ காய்கறிகளை தேர்ந்தெடுப்ப‍து எப்ப‍டி?

காய்கறி வாங்குவது எப்படி? உபயோகமான தகவல் என்பதால் இங்கு பகிர்கிறேன்
என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்?
1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும்.
2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும்
3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல‍ முருங்கை காய்
4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும் அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும்
5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அது சல்ல‍ மக்காச்சோளம்.
6.தக்காளிதக்காளி நல்ல‍ சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம் (குறிப்பு பெங்களூர் தக்காளி ஒரு வாரம் ஆனாலும் கெடாது இருக் கும்).
7. கோவைக்காய் : முழுக்க பச்சையாக வாங்க வேண்டும். சிவப்பு லேசாக இருந்தாலும் வாங்க வேண்டாம். பழுத்து ருசி இல்லாமல் இருக்கும்
8. சின்ன வெங்காயம்: பழைய வெங்காயம் வாங்குவதே நல்லது. இரண்டு பல் இருப்பதாக, முத்து முத்தாக தெளிவாக இருப்பதை வாங்கவும்
9. குடை மிளகாய் : தோல் சுருங்காமல் fresh ஆக இருப்பதை வாங் கவும். கரும்பச்சையில் வாங்கவேண்டாம். அடிபட்டிருக்கும். எல்லா நிற குடை மிளகாய்களும் ஒரே சுவையில் தான் இருக்கும்
10. காலிபிளவர்: பூக்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் அடர்த் தியாக காம்பு தடினமனாக இல்லாமல் வாங்கவும்
11. மாங்காய்- தேங்காயை காதருகே வைத்து தட்டி பார்ப்பது போல மாங்காயும் தட்டி பார்க்கவும். சத்தம் வரும். அத்தகைய மாங்காயில் கொட்டை சிறிதாக இருக்கும்
12. பீர்க்கங்காய் ( நார்ச்சத்து உள்ள மிக நல்ல காய் இது ) : அடிப் பகுதி குண்டாக இல்லாமல் காய் முழுதும் ஒரே சைசில் இருக்கு மாறு பார்த்து வாங்குவது நல்லது
13. பரங்கிக்காய் கொட்டைகள் முற்றியதாக வாங்கவும்
14. புடலங்காய் : கெட்டியாக வாங்கவும். அப்போதுதான் விதைப்பகு தி குறைவாக, சதை பகுதி அதிகமாக இருக்கும்
15. உருளை கிழங்கு: முளை விடாமல் பச்சை நரம்பு ஓடாமல் கீறி னாலே தோல் உதிர்ந்து பெயர்ந்து வர வேண்டும்
16. கருணை கிழங்கு: முழுதாக வாங்கும் போது பெரியதாக பார்த்து வாங்குவது நல்லது. வெட்டிய கிழங்கை விற்றால், உள் புறம் இளம் சிவப்பு நிறத்தில் இருக்குமாறு பார்த்து வாங்கவும்
17. சேப்பங்கிழங்கு : முளை விட்டது போல் ஒரு முனை நீண்டிருக் கும் கிழங்கு சமையலுக்கு சுவை சேர்க்காது. உருண்டையாக பார் த்து வாங்கவும்
18. பெரிய வெங்காயம் மேல் (குடுமி) பகுதியில் தண்டு பெரிதாக இல்லாமல் பார்த்து வாங்கவும்
19. இஞ்சி: லேசாக கீறி பார்க்கும் போது தோல் பெயர்ந்து வருவது நல்லது. நார் பகுதி குறைவாக இருக்கும்
20. கத்திரிக்காய்: தோல் softஆக இருப்பதுபோல் பார்த்து வாங்கவும்
21. சுரைக்காய் : நகத்தால் அழுத்தினால் நகம் உள்ளே இறங்க வேண்டும். அப்போது தான் இளசு என்று அர்த்தம்
22. பூண்டு: பல் பல்லாக வெளியே தெரிவது நல்லது. வாங்கலாம்
23. பீன்ஸ் பிரன்ச் பீன்ஸில் நார் அதிகம். புஷ் பீன்ஸில் நார் இருக் காது. தோல் soft-ஆக இருந்தால் சுவை அதிகமாய் இருக்கும்
24. அவரை: தொட்டு பார்த்து விதைகள் பெரிதாக இருக்கும் காய்கள் தவிர்ப்பது நல்லது. இளசாக வாங்கினால் நார் அதிகம் இருக்காது
25. பாகற்காய்: பெரிய பாகற்காயில் உருண்டையை விட, தட்டையா ன நீண்ட காய் நல்லது
26. வாழைப்பூ : மேல் இதழை விரித்து பூக்கள் கருப்பாகாமல் வெளி ர் நிறத்தில் இருக்கிறதா என பார்க்கவும். அப்படி இருந்தால் பிரெஷ் காய் என்று அர்த்தம்
27. மொச்சை :கொட்டை பெரிதாக தெரியும் காய் பார்த்து வாங்கவும்
28. சௌசௌ : வாய் போன்ற பகுதி விரிசல் பெரிதாக இல்லாத படி பார்த்து வாங்கவும். விரிசல் இருந்தால் முற்றிய காய்
29. முள்ளங்கி: லேசாக கீறினால் தோல் மென்மையாக இருந்தால் அது இளசு- நல்ல காய்
30. வெள்ளரி மேல் நகத்தால் குத்தி பார்த்தால் நகம் உள்ளே இறங்கி னால், நல்ல காய். விதைகள் குறைவாக இருக்கும்
31. பச்சை மிளகாய் :நீளமானது சற்று காரம் குறைவாக இருக்கும். சற்றே குண்டானது தான் காரம் தூக்கலாக வாசனையும் பிரமாதமா க இருக்கும்.