Posted On Aug 15,2012,By Muthukumar |
காதலின் நினைவுச் சின்னமான தாஜ்மகாலுக்கு அருகில் யமுனை நதிக்கரை ஓரத்தில், அற்புதமான தொழில் ஒன்று நடந்துகொண்டிருக்கிறது. இந்தியாவிலே மிக அதிகமாக மறுசுழற்சி முறையில் அங்கு பட்டுப்புடவைகள் உருவாகிறது.

நக்லா
தேவ்ஜித் என்பது யமுனை நதிக்கரை ஓரத்து காலனிகளில் ஒன்று. அங்கிருக்கும்
பிரபல பட்டுப் புடவை வியாபாரி முகமது நிசார். மறு சுழற்சி பட்டுகளை பெண்களை
கவரும் விதத்தில் விதவித மாக அடுக்கி வைத்துக்கொண்டிருக்கும் அவர்
சொல்கிறார்..
"நாங்கள்
சென்னை, சூரத் உள்பட நாட்டின் பல பகுதிகளில் இருந்து பழைய புடவைகளை
வாங்குகிறோம். விலை கொடுத்தும் வாங்கு வோம். இலவசமாகவும் பெறுவோம். ஓரளவு
கிழிந்த புடவைகள் மிகக்குறைந்த விலைக்கு கிடைக்கும். சில பெண்கள் கணவரிடம்
புதிய புடவைகள் வாங்குவதற்காக, நல்ல புடவை களைக்கூட எங்களிடம்
தந்துவிடுவார்கள். முதலில் அந்த புடவைகளை தரம் பிரிப்போம். பின்பு அவைகளை
துவைப்பதற்காக யமுனைக்கு கொண்டு செல்வோம். அங்குதான் பழைய புடவைகளை
புதியதாக்கும் வித்தைகளை செய்கிறோம்'' என்று அவர் ரசித்து சொல்கிறார்.
இந்த
நதிக்கரை ஓரத்தில் புடவைகள் தரம் பிரிக்கப் படுகிறது. பிளீச்சிங்
திரவத்தில் முக்கி எடுக்கப்படுகிறது. நிறம் கொடுக்கப்படுகிறது. ஆங்காங்கே
உலரவைக்கப் படுகிறது. இதை எல்லாம் பார்க்கும்போது நதிக்கரை ஓரத்தில்
வானவில் போன்ற காட்சி கிடைக்கிறது. இந்த மறுசுழற்சியில் இருக்கும்
ரகசியங்களை அவர்கள் வெளியே சொல்வதில்லை.
புடவை
ஒன்றின் ஒரு பகுதி மட்டும் நிறம் மங்கி இருந்தால் அதை அப்படியே வெட்டி
எடுத்து நீக்குகி றார்கள். இன்னொரு பகுதியில் லேசான கிழிசல் தெரிந் தால்
அதை வெளியே தெரியாத அளவிற்கு தைக்கி றார்கள். அதற்கு பொருத்தமாக இன்னொரு
புடவையை அதில் சேர்க்கிறார்கள். கடைசியாக அந்த புடவையை பார்க்கும்போது
புதிய புடவைபோல் தோன்றுகிறது.
புடவைகளில் தேவையற்றவைகளை நீக்கவும், புதிய வற்றை சேர்க்கவும் ஏராளமான
ஆண்களும், பெண்க ளும், கத்திரி, ஊசி, நூல் போன்றவைகளுடன் காட்சி
தருகிறார்கள். கடைசியில் அழகாக அயர்ன் செய்து, அடுக்கி, கவரில்
வைக்கிறார்கள்.
"நாங்கள்
பெரும்பாலான பட்டுப்புடவைகளை 50 ரூபாய்க்குதான் விற்கிறோம். 100, 150
ரூபாய்க்கும் விற்பதுண்டு..'' என்கிறார், முகமது நிசார்.
இப்போது
யமுனை நதிக்கரை ஓரத்தில் இந்த மறுசுழற்சி புடவை தயாரிப்பு பணியில்
150-க்கு மேற்பட்ட `யூனிட்டுகள்' செயல்படுகின்றன. இந்தியா முழுவதும்
இருந்து தாஜ்மகாலை பார்க்கச் செல்கிறவர்கள், அப்படியே இந்த
யூனிட்டுகளுக்கும் சென்று புடவைகளை வாங்கிவிட்டு செல்கிறார்கள்.
திரைச்சீலை, சீட் கவர் போன்றவைகளை தைக்கவும் இங்கு வந்து மலிவு விலை
புடவைகளை வாங்கிச் செல்கிறார்கள்
No comments:
Post a Comment