Wednesday, August 8, 2012

தன்னை முட்டாளாக்க‍ நினைத்த‍ வழக்கறிஞரையே முட்டாளாக்கிய நீதிபதி!

ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலைசெய்யப் பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின்பேரி ல் ஒருவரைக் கைதுசெய்து நீதி மன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது.
குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீ ல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என் று குற்றம் சாட்டப்பட்டதோ, அவ ரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழி யே உள்ளே வரப்போகிறார் . நீங்கள் அதைப்பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர் வீர்கள்” என்று கூறி அமர்ந்துவிட்டார்.
நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண் டிருந்தார்கள். 5 நிமிடம், 10 நிமிடம் கழிந்த து. ஒருவரும் வரவேயில்லை. இப்போது வழக்கறிஞர் எழுந்தார்.
“மைலார்ட்! நீங்கள் உட்பட யாருமே காணாமல் போனவர், கொலைதான் செய் யப்பட்டவர் என்பதை முழுமையாக நம்ப வில்லை. அதனால்தான் எல்லோரும் வாச லையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள். என வே, உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறிவிட்டு கம்பீரமாக அமர்ந்தார்.

பிற்பகலில் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அளித்தா ர். வக்கீல் எழுந்து, “எப்படி மைலார்ட்?” என் று கேட்டார்.
அதற்கு நீதிபதி சொன்னார், “அந்த பத்து நிமிடமும் நான் வாசலைப் பார்த்தது உண் மைதான். ஆனால், ஒருதடவைகூட குற்றம் சாட்டப்பட்டவர் வாசலைப்பார்க்கவில்லை .”

No comments:

Post a Comment