Sunday, July 29, 2012

வெவ்வேறு அளவுகளில் மழைத்துளிகள் இருக்கின்றன ஏன் ?



மழைத்துளிகள் என்றாலே ஒருவித பரசவம் மனதில் எழுவது இயல் பு. இயற்கை அன்னையின் அந்த சவரில் (shower) குளிக்க விரும் பாத உயிரினங்களே இருக்க முடியாது எனலாம்.
அந்த மழைத்துளிகள், வளிமண் டலத்தில் உள்ள நீராவி வெப்ப நிலைக்குறைவால்.. தூசித்துணி க்கைகளில் படிந்து முகிலாக அந்த முகில்கள் மேலும் குளிர்ச்சியடையும் போது நீர்த்துளி களாகி நிறை அதிகரிப்பின் விளைவாக பூமியை நோக்கி விழு கின்றன.
அவ்வாறு விழும் நீர்த்துளிகள் கோளமாக வெவ்வேறு அளவுகளில் இருப்பதை கூர்ந்து அவதானித் தால் மட்டுமே காணலாம். ஏன் அவை அப்படி இருக்கின்றன என் பதை விஞ்ஞானிகளும் ஆராயத் தவற வில்லை.
 
வளிமண்டலத்தில் உள்ள காற்றி ன் கூறுகள் மழைத்துளிகளின் பூமி நோக்கிய இயக்கத்தை எதிர்ப் பதால் மழைத்துளிகளுக்கும் காற் றுத் துணிக்கைகளுக்குமிடையே உராய்வு உருவாகி ஒன்றின் பய ணத்தை மற்றையது இடையூறு செய்ய முற்படுவதால் அந்த உராய் வைக் குறைக்கும் நோக்கோடு மழைத்துளிகள் சாத்தியமான சிறிய மேற் பரப்பை உருவாக்கும் வகையில் கோள அமைப்பைப் பெறுவ தாகவும் இதற்கு நீரின் மேற்பரப்பு இழுவிசை (Surface tension) உதவுவதாக விஞ்ஞா னிகள் கண்டறிந்தனர்.
 
அப்போ ஏன் மழைத்துளிகள் ஒரு சீராக இன்றி வெவ்வேறு அளவுகளில் இருக்கின்றன என்று கேட்டால் அதற்கு மழை த்துளிகள் விழும் போது ஒன்றை ஒன்று முட்டி மோதி சேர்வதும் பிரிவதும் நிகழ்வதால் அவற்றின் பருமன் மாறுபடுகின்றன என்றும் கூறினர் விஞ்ஞானிகள்.

ஆட்டோமொபைல் எதிர்காலம்

Posted On July 30,2012,By Muthukumar
  .
இந்த கார் உயரியல் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட கார் ஆகும். DNA மூலம் உருவாக்க பட்ட பாதுகாப்பு வசதி கொண்ட எலெக்ட்ரிக் சக்தி மூலம் இயங்கும் கார் முழு எதிர்காலத்தை படங்களை பார்த்து அறிந்து கொள்ளலாம்.

creature concept

creature concept car

creature concept car

creature concept car

creature concept car

creature concept car

automobile tamilan

கற்பனையாக தோன்றினாலும் எதிர்காலத்தில் நிஜமாகும்


ஆர்ட்டிக் கண்டம் ஆவிகளின் உலகமாக மாறிவிட்ட அதிசயம்: புகைப்படங்கள்



Posted On July 30,2012,By Muthukumar

இந்த புகைப்படங்களை பார்க்கும் போது உங்கள் மனதில் தோற்றுவதென்ன? ஏதோ ஆவிகளின் உலகம் போல் காட்சி அளிக்கலாம்.
ஹாலிவூட் திரைப்படங்களில் வருவதுபோல் உள்ள இந்த இடம் ஆர்டிக் கண்டத்தில் அமைந்துள்ளது. உலகின் கடும் பனிப்பிரதேசமாக கருதப்படும் ஆர்டிக் கண்டத்தில் பனிப்பாறைகள் இவ்வாறு உரைபனியால் மாறி மரங்கள் போல் காட்சி அளிக்கின்றதாம்.

Niccolo Bonfadini எனும் புகைப்படக்காரர் இதை புகைப்படங்களாக எடுத்து வெளியீட்டுள்ளார்.



Photo:Niccolo Bonfadini / Solent News

மீண்டும் 1000 ரூபாய் நாணயத்தைப் புழக்கத்தில் விட மத்திய ரிசர்வ் வங்கி முடிவு

Posted On July 30,2012,By Muthukumar

கடந்த 2010 ஆம் ஆண்டு ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலின் 1000 மாவது ஆண்டுநிறைவு கொண்டாடப் பட்டது.
அப்போது அந்தநாளின் நினைவாக 1000 ரூபாய் நாணயத்தை மத்திய ரிசர்வ் வங்கி அச்சடித்தது. அது அப்போதைக்கு பொதுமக்களின் தேவைக்கு கொடுத்துவிட்டு பின்னர் நிறுத்தி வைக்கப் பட்டு இப்போது,மீண்டும் அந்த 1000 ரூபாய் நாணயத்தை பொதுமக்களின் புழக்கத்திற்கு விட மத்திய ரிசர்வ் வங்கி முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அந்த 1000 ரூபாய் நாணயம் 80% வெள்ளி, 20 % காப்பரால் உருவானது. இந்த நாணயம் ஒன்றின் மதிப்பு 4 ஆயிரத்து 725 ரூபாய் என்று சொல்லப் படுகிறது. நாணயத்தின் ஒருபுறம் தஞ்சைப் பெரிய கோயில், இன்னொரு புறம் ராஜராஜ சோழ மன்னனின் உருவம் மற்றும் கவர்னர் கையொப்பம் என இருக்கும் என்று தெரிகிறது.

இந்த நாணயத்தை பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் என்று அத்தனையையும் பிரதிபலிக்கும் விஷயமாக அனைவரும் பார்ப்பதால், இதை வாங்கிப் பாதுகாக்க பலரும் முன்வருவார்கள் என்றும் மத்திய ரிசர்வ் வங்கியின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த நாணயத்தை பொதுமக்கள் வாங்கும்படி மத்திய அரசு ஆன்லைனில் அறிவித்தல் விட ஏற்பாடு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டரை ரூபாய் நோட்டு பார்த்து இருக்கீங்களா?

Posted On July 29,2012,By Muthukumar


ஒரு ருபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை நாம் பல ரூபாய்களை பார்த்து இருக்கிறோம். அனால் இரண்டரை ரூபாய்? சும்மா விளையாடாத என்று சொல்லாதீர்கள். உண்மையிலேயே ஏதோ ஒரு காலத்தில் இந்திய அரசாங்கம் வெளியிட்ட இரண்டரை ரூபாய் நோட்டின் படம் ஒன்று பார்க்க நேர்ந்தது. உங்கள் பார்வைக்கு விட்டுள்ளேன். இதை பற்றி விபரம் தெரிந்தாவர்கள் சொல்லவும்.

Saturday, July 28, 2012

ரோபாட் ஓட்டல்!

Posted On July 29,2012,By Muthukumar
சீனாவின் ஹார்பின் நகரத்தில், வித்தியாசமான ஓட்டல் உள்ளது. இதில் பணிபுரியும் வரவேற்பாளரில் இருந்து, சர்வர் வரை, அனைத்துமே ரோபாட்கள் தான். இந்த உணவகத்துக்கு, ரோபாட் ஓட்டல் என்று தான் பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓட்டலில், 18 ரோபாட்கள் உள்ளன. வாடிக்கையாளர் உள்ளே நுழைந்ததும், "ரோபாட் உணவகம் உங்களை வரவேற்கிறது...' என பதிவு செய்யப்பட்ட குரலில், ஒரு ரோபாட், வரவேற்கும்.
சமையல் பணியில் உதவுவதற்கும், சில ரோபாட்கள் உள்ளன. சமை யலுக்கு தேவை யான உணவுப் பொருட்களை எடுத்துக் கொடுப்பது போன்ற பணிகளை, இந்த ரோபாட்கள் செய்யும். உணவு தயாரானதும், அதை வாடிக்கையாளரிடம் கொண்டு செல்வதும், ரோபாட் தான். இவை நடந்து செல்வதற்காகவே, ஓட்டலில் பிரத்யேக வழித்தடம் உருவாக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள ஒவ்வொரு ரோபாட்டும், 1.3 மீட்டரிலிருந்து, 1.6 மீட்டர் உயரமுடையவை. பத்துக்கும் மேற்பட்ட முக உணர்வுகளை வெளிப்படுத்தும் தொழில்நுட்பமும், இந்த ரோபாட்களில் செயல்படுத்தப்பட்டுள்ளன. சீன மொழியில், ஒரு சில வார்த்தைகளை, இந்த ரோபாட்கள் பேசும். இந்த ரோபாட்களை இயக்குவதற்காக, ஓட்டலின் ஒரு பகுதியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில், பத்து இன்ஜினியர்கள் பணிபுரிகின்றனர்.
இந்த ரோபாட்களுக்கு இரண்டு மணி நேரம், "சார்ஜ்' ஏற்றினால், ஐந்து மணி நேரம் தொடர்ந்து செயல்படும். சீனாவைச் சேர்ந்த பிரபலமான ரோபாட் தயாரிப்பு நிறுவனம் தான், இந்த ஓட்டலை அமைத்துள்ளது. இதற்காக, 44 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. ஒரு ரோபாட்டை வடிவமைப்பதற்கு, 22 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. தங்களால் தயாரிக்கப்பட்டுள்ள ரோபாட்களை பிரபலப்படுத்துவதற்காகவே, இவர்கள் இந்த ஓட்டலை துவக்கியுள்ளனர். இந்த ஓட்டலில் சாப்பிடுவதற்கு, ஒருவருக்கான சாப்பாட்டு செலவு, குறைந்தது, 1,000 ரூபாய்.
இந்த ஓட்டலுக்காக போட்ட முதலீட்டை எடுப்பதற்கு, இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்பது, சம்பந்தபட்ட நிறுவனத்துக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், இதைப் பார்த்து, பிரபலமான ஓட்டல் நிறுவனங்கள், ரோபாட்களை விலைக்கு வாங்கும் என்ற நப்பாசையில் இருக்கிறது, அந்த நிறுவனம். "அதெல்லாம் சரி... ரோபாட்களை பயன்படுத்துவதற்கு, பல்வேறு தொழில்கள் இருக்கும்போது, ஓட்டல் தொழிலுக்காக பயன்படுத்துவது ஏன்?' என கேட்டால், "சீனாவில் ஓட்டல் வேலைக்கு ஆள் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது. இந்த சிரமத்தை குறைப்பதற்காகவே, ஓட்டல் வேலைக்கான ரோபாட்களை தயார் செய்துள்ளோம்...' என்கின்றனர்.

முப்பரிமான ஓவியங்கள் – 3D Paintings

Posted On July 29,2012,By Muthukumar
ஐசோமெட்ரிக் அல்லது பெர்ஸ்பெக்டிவ் காட்சிக் கோணம் என்பதை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்,உதாரணத்திற்கு கூறுவோமெனில் கார் விளம்பர ஹோர்டிங்களில் எல்லாம் பார்த்திருப்பீர்கள்ஹோர்டிங்கை எங்கிருந்து பார்த்தோமானாலும் கார் நம்மை பார்ப்பது போலவே இருக்கும்.அந்தக் காட்சிக்கோணத்தை அடிப்படையாக வைத்து முப்பரிமான முறையில் தீட்டப்பட்டதேகீழ்கண்டகண்ணுக்கு விருந்தளிக்கும்  ஓவியங்கள் யாவும்.  சமீபத்தில் சீனாவில் நடந்தஒரு ஓவியக் கண்காட்சியில் இடம் பெற்ற முப்பரிமான ஓவியங்கள்…




















தாவரங்கள் ஓய்வு எடுக்கின்றன!

Posted On July 29,2012,By Muthukumar
நாம் உழைக்கிறோம். பிறகு உழைப்பை நிறுத்தி ஓய்வு எடுக்கிறோம். நம்முடைய ஓய்வில் தூக்கம் ஒரு முக்கியமான பகுதி. ஆனால் தாவரங்களின் நிலை என்ன? அவை உழைக்கின்றனவா? ஓய்வு எடுக்கின்றனவா?
தாவரங்களின் உழைப்பின் பயன்தான் காய்களும், கனிகளும். தாவரங்களின் உழைப்பின் பயனை நாம் அனுபவிக்கிறோம். ஆனால் அவற்றின் உழைப்பைப் பற்றி நாம் சிந்திப்பதில்லை. தாவரங்களின் உழைப்பைப் பற்றியே நாம் சிந்திக்காத நிலையில், அவை எப்போது ஓய்வெடுக்கின்றன அல்லது தூங்குகின்றன என்று ஏன் யோசிக்கப் போகிறோம்?
தாவரங்கள் மழைக் காலத்தில் ஓய்வு கொள்கின்றன என்று கூறுவது மிகையாகாது. அவை அக்காலத்தில் கும்பகர்ணர்களாகின்றன. தாவரங்கள் ஓய்வு எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அவை உழைத்துக் களைப்படைகின்றனவா?
ஆம், அவை நன்றாக உழைத்துள்ளன. எனவே நல்ல ஓய்வுக்கு அவை தகுதி உடையவை. அவற்றின் பல்வேறு உறுப்புகளும் வசந்த காலம், கோடை காலம், இலையுதிர்க் காலம் ஆகிய பருவங்களில் தமக்குரிய பணிகளைச் செம்மையாகச் செய்துள்ளன.
தாவரங்கள் எவ்வாறு உழைக்கின்றன என்று கேட்கலாம். மனிதர்களாகிய நாம்தான் சுவாசிக்கிறோம் என்று எண்ண வேண்டியதில்லை. தாவரங்களும் சுவாசிக்கின்றன. அவற்றுக்கும் உணவு ஊட்டும் உறுப்புகள் உள்ளன. அரும்புகள் தோன்றுகின்றன. அவை மலர்களாகின்றன. காய்கள் தோன்றி, கனிகளாகின்றன. இந்த விந்தை நிகழ்ச்சிகள் யாவும் தாவரங்களின் வெவ்வேறு உறுப்புகளின் இடைவிடாத உழைப்பைத்தான் சுட்டிக் காட்டுகின்றன.
இவ்வளவு சிறப்பாகவும், கடுமையாகவும் உழைத்துள்ள தாவரங்களுக்கு ஓய்வு வேண்டும் அல்லவா? ஆகவே மழைக் காலமே அவற்றின் ஓய்வுக் காலம். நாம் ஓய்வெடுக்கையில் எல்லாப் பணிகளையும் மூட்டை கட்டி வைத்துவிடுவதைப் போல தாவரங்களும் தமது பணிகளை அறவே நிறுத்தி வைத்துவிடுகின்றன.
மழைக் காலம் தொடங்கும்போது சில விலங்குகள் மாண்டுவிடுகின்றன. அவற்றைப் போல இறக்காமல் வளமாக வாழும் பெரும்பாலான தாவரங்கள், குறிப்பாக இலைகளை உதிர்க்கும் தாவரங்கள் இலையுதிர்க் காலத்தில் இருந்தோ அல்லது வசந்த காலத்தில் இருந்தோ ஓய்வெடுக்கின்றன. அந்தக் காலத்தில் அவற்றின் பல்வேறு பாகங்கள் தமது பணிகளை வெகுவாகக் குறைத்துக் கொள்கின்றன.
மழைக் காலத்தில் தாவரங்களின் உயிரணுக்களில் ஈரம் இருப்பதில்லை. ஈரம் உலர்ந்து விடுகிறது. தாவரங்களில் அடங்கியுள்ள தண்ணீரில் பெரும்பகுதி, இலைகளில் உள்ள ஆயிரக்கணக்கான துவாரங்கள் வழியாக வெளியேறிவிடுகிறது.
வேர்களும் தண்ணீரை உறிஞ்சுவதை நிறுத்திவிடுகின்றன. மண்ணின் வெப்பநிலை குறைவதால், வேர் ரோமங்களின் உயிரணுக்களை தண்ணீர் எளிதாக ஊடுருவ முடியாது. அதன் விளைவாக உணவு உற்பத்தி, உணவு உட்கொள்ளுதல் ஆகிய நடைமுறைகள் நின்றுவிடுகின்றன.
வேர்கள் தண்ணீரை உறிஞ்சுவதை நிறுத்தியபிறகு இலைகள் உபயோகமற்றுப் போய்விடுகின்றன. அவற்றில் தாவரங்களுக்குத் தேவையான பல தாது உப்புகள் இருக்கின்றன.
மழைக் காலத்தில் தாவரங்கள் தமக்குத் தேவையான பொருட்களை மட்டும் வைத்துக்கொள்கின்றன. அவற்றுக்குத் தேவையில்லாத சுண்ணாம்புச் சத்து, சிலிக்கா போன்றவற்றை இலைகளில் இருந்து அகற்றிவிடுகின்றன.
இலைகளில் தாவரங்களுக்குத் தேவைப்படும் நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷியம், மக்னீஷியம் ஆகியவற்றைத் தாவரங்கள் அடிமரத்துக்கும், மாச்சத்து அதிகமாக அடங்கியுள்ள தண்டுகளுக்கும் அனுப்பி வைக்கின்றன. அவை இலைகளின் நரம்புகள் வழியாக அனுப்பப்படுகின்றன.
கடைசியில், தாவரங்களுக்குத் தேவையில்லாத பொருட்களே இலைகளில் தேங்கியுள்ளன. எனவே அவற்றைத் தாவரங்கள் கீழே உதிர்த்து விடுகின்றன.
தாவரங்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்களைப் பற்றிச் சொல்லும் ஒரு பிரிவு தாவரவியலில் உள்ளது. அந்தப் பிரிவுக்கு `பெனாலஜி' என்று பெயர். அதன் கிரேக்க மூலச் சொல் `பாட்னோமா' ஆகும். அதற்கு, `தோன்றுதல்' என்று பொருள்.

சமூக தளங்களில் நன்னடத்தை வழிகள்

Posted On July 28,2012,By Muthukumar
இன்டர்நெட் பயன்படுத்தும் அனைவரும் ஏதேனும் ஒரு சமூக வலைத்தளத்தில் தங்களைப் பதிந்து வைத்து, நண்பர்களைத் தேடித் தங்கள் உறவினை வலுப்படுத்தி வருகின்றனர். இவற்றின் மூலம் அனைவரும் பயன்பெறுகின்றனர். உலக அளவில் தங்கள் நண்பர்கள் வட்டத்தை விரிவாக்கி, கருத்துக்களையும், தனி நபர் எண்ணங்களையும் பரிமாறிக் கொள்கின்றனர். இதனையே வழியாகக் கொண்டு, தனிநபர் சுதந்திரத்தில் தலையீடுவோரும் இங்கே காணப்படுகின்றனர். இவர்களிடம் நாம் பாதுகாப்பாக இயங்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில் மற்றவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து நாம் இயங்க வேண்டியுள்ளது. இதற்கென நாம் சில அடிப்படை கோட்பாடுகளைக் கடைப்பிடித்தால் அது அனைவருக்கும் நலம் அளிக்கும். அவற்றை இங்கு காணலாம்.
1. உணர்வு பகிர்தலில் கட்டுப்பாடு: என்னதான் நம் நண்பர்களுடன் நம் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொண்டாலும், சிலவற்றை நம்முடனே வைத்துக் கொள்வதுதான் நாகரிகமானது. ஒரு சிலர் வேண்டும் என்றே, உண்மைக்கு மாறான தகவல்களை, வெளிப்படுத்துகின்றனர். நம் உடல்நலக் குறைவு, பாலியல் ரீதியான பிரச்னைகள், மற்றவரை இன்னலுக்குள்ளாக்கும் காதல் பிரச்னைகளை மற்றவர் அறியத் தருவது நம்மைப் பற்றிய அருவருப்பைத்தான் ஏற்படுத்தும். எனவே உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் பிறர் அறியத் தர வேண்டாமே.
2. சமூக தளம் உங்கள் பிரச்சார மேடை அல்ல: இணையத்தில் உருவாக்கப் பட்டிருக்கும் சமூகத் தளங்கள், நம் கருத்துக்களை வெளிப்படுத்தவும் தரப்பட்டிருக்கும் ஓர் இடம் தான். ஆனால், அதனையே நம் பிரச்சார மேடையாக்கி, எப்போதும் நான் எண்ணுவதே, என் கொள்கைகளே, கருத்துக்களே சரி என்ற அளவில் இயங்குவது தவறானதாகும். உங்கள் ஒழுக்க, அரசியல் கோட்பாடுகளை உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள். மற்றவர்கள் அவற்றைப் பின்பற்ற வேண்டும் அல்லது அதற்காக உங்களைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் வெளியிடுவது தவறு.
3.குற்றச்சாட்டுக்கான மேடையா இது?: சிலர் நுகர்வோர் பிரச்னைகளுக்கான மேடையாக சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதுவும் தவறு. ஒன்றிரண்டு பொதுவான பிரச்னைகளை தெரிவிக்கலாம். ஆனால், தொடர்ந்து ஒருவருக்கு அல்லது நிறுவனத்திற்கு எதிரான கருத்துக்களை, அவர்களின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் வெளியிடுவது கூடாது.
4. நீங்கள் என்ன செய்தி ஏஜென்சியா? : இணையத்தில் இப்போது சுடச் சுட செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கையில், அல்லது நடந்து முடிந்த சில நொடிகளில் அது குறித்த தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால், ஒரு சிலர் தங்களுக்குத்தான் முதலில் தெரிந்ததாகக் காட்டிக் கொண்டு அவை பற்றி தகவல்களைத் தெரிவிக்கின்றனர். இதற்கென இருக்கும் நியூஸ் ஏஜென்சிகள் அவற்றைப் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் ஏன் நேரத்தையும், வலைத் தளங்களின் இடத்தையும் வீணடிக்கிறீர்கள்.
5.மேற்கோள்கள் தேவையா?: சிலர் ஐன்ஸ்டீன் சொன்னது, ஷேக்ஸ்பியர் நாயகர்கள் கூறியது என எதனையாவது மேற்கோள் காட்டிக் கொண்டே இருப்பார்கள். தொடர்பற்று இருக்கும் இவை தேவையா? நீங்கள் உங்களைப் பெரிய குருவாக எண்ணுவதனை நிறுத்திக் கொள்ளலாமே.
6. வீணான பெருமை வேண்டாமே!: சிலர் தங்கள் நண்பர்கள் வட்டம் மிகப் பெரிது என்பதைக் காட்டுவதற்காக, தினந்தோறும் தொடர்பு அற்ற பலருக்கு மெசேஜ் அனுப்புவார்கள். இதனால் என்ன நேரப் போகிறது. உண்மையிலேயே நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய நிலை இருந்தால் மட்டுமே நண்பர்களின் வட்டத்தை விரிதாக்குங்கள். நட்பு வட்டத்தில் உள்ளவர்களிடம் ஆரோக்கியமான உறவினைப் பலப்படுத்துங்கள்.
7.உங்களுக்கு தகவல், மற்றவருக்கு குப்பை?: சில தகவல்கள் உங்களுக்கு மட்டுமே தொடர்புடையதாக இருக்கும். மற்றவருக்கு அது கிஞ்சித்தும் பயன்படாததாக இருக்கலாம். அவற்றை அனைவருக்கும் அனுப்புவதனை நிறுத்தவும். ஏனென்றால், சமூக வலைத் தளம் உங்களின் பிரைவேட் டயரி அல்ல.
8. முகம் சுழிக்கும் படங்கள் தேவையா?: என்ன ஏது என்று பார்க்காமல், சிலர் தாங்கள் ரசிக்கும் படங்களைப் பதிக்கின்றனர். மத ரீதியாக சிலர் மனதை அவை புண்படுத்தலாம். நாகரிக அடிப்படையில் சில ஒத்துக் கொள்ளக் கூடாததாக இருக்கலாம். எனவே தேவையற்ற படங்களை வெளியிட வேண்டாமே. அதே போல உங்களின் தோழர்கள் மற்றும் தோழியர்களின் படங்களை வெளியிடுவது மிகப் பெருந் தவறல்லவா. அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையினை பாழ்படுத்த வேண்டாமே.

Friday, July 27, 2012

ஆட்டோமொபைல் எதிர்காலம்

Posted On July 27,2012,By Muthukumar

ஆட்டோமொபை ல் எதிர்காலம்  ஏரோடிசைன்  அமைப்பில் உருவாகும் கார் பற்றி காண்போம்.இந்த கார் மிக எடை குறைவான பொருட்களை(Aerogel) கொண்டு உருவாக்க உள்ளனர். இதன் பாகங்களை இனைப்பதற்கு 99.98% வாயுக்களை பயன்படுத்த உள்ளனர். இதன் நோக்கம் மிக குளிரான பகுதியில் பயன்படுத்த.

extremes crossover car

extremes crossover car

extremes crossover car

extremes crossover car

extremes crossover car

இயற்கை கோலமிடும் `கொல்லிமலை’

Posted On July 27,2012,By Muthukumar
நாமக்கல் நகரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது, கொல்லிமலை. கடல் மட்டத்தில் இருந்து ஏறத்தாழ 1500 மீட்டர் உயரம். மலை உச்சியில் இருந்து பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எங்கும் பச்சைப்பசேல் காட்சி. காரவள்ளி என்ற இடத்தில் இருந்து 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து, கொல்லிமலையின் உச்சிக்கு செல்ல வேண்டும். மரம், செடிகளுக்கு இடையே வாகனங்கள் ஊர்ந்து செல்லும் போது, ஜிலு,ஜிலு என வரும் இயற்கை காற்று தேகத்தை தழுவுவது ஆனந்த `ஜிலீர்' அனுபவம்.

கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, சிற்றருவி, மாசிலா அருவி, தாவரவியல் பூங்கா, படகு இல்லம், அரப்பளீஸ்வரர் கோவில், வியூபாயிண்ட் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் அற்புத பகுதிகள். ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் ஏறத்தாழ 140 அடி உயரத்தில் இருந்து வெள்ளியை உருக்கி கொட்டியது போல தண்ணீர் கொட்டுகிறது. தமிழகத்தின் சிறப்பு வாய்ந்த குற்றாலம் அருவியில் கூட, சீசன் காலங்களில் மட்டுமே தண்ணீர் கொட்டும். ஆனால் இந்த அருவியில் மழைக்காலங்களில் அதிக அளவிலும், கோடைகாலங்களில் குறைந்த அளவிலுமாக ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டிக்கொண்டே இருக்கும்.
இந்த அருவிக்கு அரப்பளீஸ்வரர் கோவிலில் இருந்து செங்குத்தான 1000 படிகளில் இறங்கி செல்ல வேண்டும். முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் செல்ல முடியாது என்பதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் அரப்பளீஸ்வரர் கோவில் அருகே உள்ள சிற்றருவியில் இவர்கள் குளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இங்கு நீராடும் சுற்றுலா பயணிகள், அரப்பளீஸ்வரரை தரிசித்து விட்டு, ஓய்வு எடுப்பதற்கு வசதியாக கோவில் முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறிய பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் பகுதியாக வாடலூர்பட்டியில் உள்ள படகு இல்லம் திகழ்கிறது. இந்த படகு இல்லத்தில் ஏற்கனவே 4 படகுகள் இருந்தன. தற்போது ரூ.2 லட்சம் செலவில் மேலும் 3 புதிய படகுகள் வாங்கி, சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு விடப்பட்டு உள்ளது. கொல்லிமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து படகு சவாரி செய்யாமல் திரும்புவது இல்லை. மகளிர் சுயஉதவி குழு மூலம் இப்படகு இல்லம் பராமரிக்கப்படுவதால், மிக குறைவான கட்டணத்திலேயே சவாரி செய்ய முடிகிறது. அத்துடன் படகு இல்லத்தின் அருகே சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காவும் நிறுவப்பட்டு உள்ளது.
சுற்றுலா பயணிகள் மத்தியில் இங்குள்ள மாசில்லா அருவிக்கு பெரும் வரவேற்பு உண்டு. மாவட்ட நிர்வாகம் உடைமாற்றும் அறை, கழிப்பிட வசதி, காத்திருப்போர் அறை போன்றவைகளை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இந்த அருவியில் பெண்கள் ஆனந்தக்குளியல் போட்டபடி இருக்கிறார்கள்.
அரியூர் கிராமத்தில் இருந்து உற்பத்தியாகும் இந்த அருவி, ஏறத்தாழ 4 கி.மீ. தொலைவுக்கு மரம், செடிகளுக்கு இடையே ஊர்ந்து வந்து, 20 அடி உயரத்தில் இருந்து கொட்டுகிறது. இயற்கை அழகுடன் கூடிய இந்த அருவியில் மூலிகை கலந்த தண்ணீர் கொட்டுவது பயணிகளை அதிக அளவில் ஈர்க்கிறது. பிரசித்தி பெற்ற மாசிபெரியண்ணன் கோவில் அருகே இந்த அருவி அமைந்திருப்பதால் இதற்கு மாசில்லா அருவி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
நாமக்கல் மாவட்டத்தின் ஒரே சுற்றுலாத்தலம் கொல்லிமலை என்பதால், மாவட்ட நிர்வாகம் இதன் மேம்பாட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இது பற்றி மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் சொல்கிறார்..
"தமிழக அரசு கொல்லிமலையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேம்பாட்டு பணிகளை செய்ய ரூ.1 கோடியே 37 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. தமிழக முதல்-அமைச்சர் கொல்லிமலையை சுற்றுச்சூழல் சுற்றுலா தலமாக மாற்ற உத்தரவிட்டதின் பேரில் 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை கண்காணிக்க அடிவார பகுதியில் புதிய சோதனை சாவடி ஒன்றையும் அமைத்து உள்ளோம். இதனால் பிளாஸ்டிக் பைகள் மூலம் கொல்லிமலையின் சுற்றுச்சூழல் மாசுபடுவது முற்றிலும் தடுக்கப்பட்டு உள்ளது.
கொல்லிமலை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாற்றுப்பாதை அமைக்கும் பணியும் தொடங்கி உள்ளது. இந்த பணி வருகிற டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, ஜனவரி மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும்'' என்றார்.
***

14 நாடுகள்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 ஒன்றியங்களில் கொல்லிமலையும் ஒன்று. இந்த ஒன்றியம் தற்போது தனி தாலுகாவாக அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஒன்றியத்தில் 14 ஊராட்சிகள் உள்ளன. இவை அனைத்தும் நாடுகள் என அழைக்கப்படுகின்றன. கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி முற்காலத்தில் கொல்லிமலையை ஆட்சி செய்தார். அப்போது இருந்தே இந்த ஊராட்சிகள் அனைத்தும் நாடுகள் என அழைக்கப்பட்டு வருவதாக மலைவாழ் மக்கள் கூறுகின்றனர்.

வல்வில் ஓரி மன்னனுக்கு அரசு சார்பில் செம்மேடு பஸ்நிலையம் அருகே சிலை அமைக்கப்பட்டு உள்ளது. குதிரையில் கையில் வாளை ஏந்தியவாறு மன்னன் காட்சி அளிக்கிறார். இவரது நினைவாக ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் மாவட்ட நிர்வாகம் சார்பில் வல்வில் ஓரி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
***

கொத்துக் கொத்தாய் பலாப்பழம்

கொல்லிமலையின் அடிவார பகுதியான காரவள்ளியில் கொத்துக் கொத்தாக பலா காய்கள் காய்த்து தொங்குகின்றன. இது கொல்லிமலையின் இயற்கை அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. வழக்கமாக ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பலாப்பழ சீசன் களைகட்டும். இங்கு சுற்றுலா வரும் பயணிகள் ஊர் திரும்பும்போது பலாப் பழங்களை வாங்கி செல்கிறார்கள்.
***



காதலிப்ப‍தால் ஏற்படும் நன்மைகள்

காதலிப்பவர்களுக்கு கண்தெரியாது என்பது முட்டாள்களின் வாத ம் என்று அதிரவைக்கின்றன ர் ஆய்வாளர்கள். காதலில் விழுந்தவ ர்களுக்கு நினைவு த்திறன் அதிகரிக்குமாம் அத ற்கான ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும் என்று கூறி காத லர்களின் வாழ்வில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியிரு க்கின்றனர் ஆய்வாளர்கள்.
கண்ட உடனே காதலில் விழுபவர்கள் சிலர். பேசி பழகிய பின் காத லிப்பவர்கள் சிலர் காதலில் விழுந்துவிட்டால் அவர்களுக்கு இறக் கை முளைத்துவிடும். கண்களை திறந்து கொண்டே காதலிக்க ஆர ம்பித்துவிடுவார்கள் என்கின்றனர் நிபுணர்கள். காதலிக்க ஆரம்பி த்த உடன் அவர்களின் உடலில் நிகழும் ரசாயன மாற்றம் என்னெ  ன்ன என்று நிபுணர்கள் பட்டியிலிட்டுள்ளனர். நீங்களும் கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்களேன்.
பட்டாம்பூச்சி பறக்கும்
உங்களுக்கான நபரை நீங்கள் கண்ட உட ன் மச்சி இவதாண்ட உன் ஆளு என்று மூளை மணியடிக்க ஆரம்பித்து விடு மாம் ( அப்படியா ?) அப்போது மூளையி ல் டோபமைன் எனப்படும் ரசாயனம் சுர க்குமாம். அது உடலுக்கு சக்தியை தருவ தோடு மூளையையும் சுறுசுறு ப்பாக்குகி றதாம். அதனால்தான் காதலிப்பவர்களி ன் கனவுகளில் வானவில் வருகிறது. அவர்களுக்கு இறக்கை முளைக்கிறது. அவர்கள் செல்லும் இடமெ ங்கும் வண்ணத்துப்பூச்சி சிறகடிக்கிறது. ( இதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள பழைய பாரதிராஜா படத் தை பார்க்கலாம்)
உடல் மெருகேறும்
காதலிப்பவர்கள் உடல் கட்டுப்பாட்டோடு அழகாக இருக்குமாம். அவர்களின் உடலி ல் ஆட்டோமேடிக்காக neuro transmitter அதிகரி க்குமாம். அட்ரீனலி ன் உற்பத்தி சிறிதளவு குறையுமாம். அதனால் அவர்க ளுக்கு பசி உணர்வே ஏற்படுவதில்லை. ஜிம் போகாமலே யே உடலில், முகத்தில் ஒரு பளபளப்பு ஏறியிருக்குமாம். அதனா ல் காதலில் விழுந்த வர்களை பையன் ஒரு மார்க்கமாவே இருக்கான் என்னன்னு கவனிங்க என்று அப்பா, அம்மாவிடம் உறவினர்கள் உசுப் பேற்றி விடுகின்ற னர்.
புத்திசாலியாவார்கள்
காதலிப்பவர்கள் முட்டாள்களா? யார் சொன்னது. அப்படி சொல்ப வர்கள்தான் முட்டாள்கள், காதலின் அரு மை தெரியாதவர்கள். காதல் உண்மையி லேயே முட்டாளாக இருப்பவர்களைக் கூட அறிவாளியாக்குமாம். காதல் வசப் பட்டவர்களுக்கு மூளை செல்க ளை புதி தாக வளரச் செய்யும் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது என்று இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ள னர்.
இளமை திரும்பும்
காதலிப்பவர்களுக்கு முதுமை ஏற்படாதாம். அவர்கள் என்றைக் கும் இளமையாக இருப்பார்களாம். அந்த அளவிற்கு அவர்களுக்கு இளமையை தக்கவைக்கும் ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன் சுரக்குமாம். காதலிப்பவர்க ள் எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பதா ல் அவர்களுக்கு கவலை என்பதே ஏற்ப டாதாம்.
நோய் தாக்காது
காதலிப்பவர்களைவிட ஜோடி கிடைக்கா மல் தனியாக இருப்பவர் கள்தான் விரை வில் மரணத்தை தழுவுகின்றனராம். காத லிப்பவர்களுக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாதாம். ரொமான்ஸ் மூடில் இருப் பவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத் தும் ஹார்மோன் சுரப்பு குறைவாகத்தான் சுரக்குமாம். காதலிப்ப வர்களுக்கு இதய நோய் என்பதே ஏற்படாதாம்.
காதலிப்பவர்களுக்கு இவ்வளவு நன்மைகள் இருக்கிறதாம். இன்ன மும் ஏன் வெயிட் பண்றீங்க,போய் சீக்கிரம் லவ் பண்ணுங்கப்பா!