Posted On July 6,2012,By Muthukumar |

ஆஸ்திரேலியாவைச்
சேர்ந்த சில புதுமை விரும்பி விஞ்ஞானிகள், போதை தரும் ஒயினில் தயாரான
உடையை வடிவமைத்துள்ளனர். பெரிய கொப்பரையில், போதை தரும் ஒயினை ஊற்றி,
அதில், "அசேடாபாக்டர்' என்ற பாக்டீரியாவை கலக்கின்றனர். இதையடுத்து, அந்த
ஒயின், நுரை ததும்பிய கெட்டியான திரவமாக மாறி விடுகிறது. இந்த திரவத்தை
மேலும் பக்குவப்படுத்தி, மேலும், சில ரசாயனப் பொருட்களை சேர்த்து,
மென்மையான இழைகளாக அதை மாற்றி விடுகின்றனர். இதைத் தொடர்ந்து, நாம்
விரும்பும் வடிவத்தில், அதை மாற்றி, ஆடைகளாக தயாரிக்கின்றனர். இந்த
புதுமையான உடைகளை வடிவமைக்கும் பணி, இன்னும் முழுமையடையவில்லை என்றாலும்,
சோதனை ரீதியான உடை தயாராகி விட்டது. சமீபத்தில், ஒரு இளம் பெண்ணுக்கு, இந்த
உடைகளை அணிவித்து அழகு பார்த்தனர். ஒயினே போதை தரும் விஷயம். இதில்,
ஒயினில் தயாரிக்கப்பட்ட உடை எப்படி இருக்கும் என்று கேட்கவும் வேண்டுமா.
இந்த புதுமையான உடை தயாராவதற்கு முன்னரே, அதை வாங்குவதற்காக, ஏராளமான இளம்
பெண்கள், முன்பதிவு செய்து வருகின்றனர்.
No comments:
Post a Comment