Sunday, July 22, 2012

குப்பைத் தொட்டியில் வீசப்படும் செல்போனிலிருந்து தங்கம்

Posted On July 22,2012,By Muthukumar
ஆண்டுதோறும் குப்பைத் தொட்டியில் வீசப்படும் செல்போனிலிருந் து 900 கிலோ தங்கம் மற்றும் 18,000 கிலோ வெள்ளியை பிரித்தெடுக்கலாம் என ஒரு ஆய் வு தெரிவிக்கிறது. பெரும்பாலான செல்போன் க ள் செயல்படும் நிலையில் இருந்தாலும், தங் கள் வாழ்நாளை எட்டுவதற்கு முன்பாகவே குப் பைத்தொட்டிக்குப் போய்விடுகின்றன. தொழி ல் நுட்ப வளர்ச்சி காரணமாக நவீன வசதிகளுடன் கூடிய செல்போ ன்களின் வரவே இதற்கு முக்கிய காரணம். அந்த வகையில் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 40 கோடி செல்போன்கள் குப்பையில் வீசப் படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது.
இத்தகைய செல்போன் குப்பையிலிருந்து தங்கம், காப்பர், வெள்ளி போன்ற விலை உயர்ந்த உலோகங்களை பிரித்தெடுக்க முடியும். ஆம், ஒவ்வொரு செல்போனிலும் 0.01 சதவீதம் தங்கம், 20 முதல் 25 சதவீதம் காப்பர் மற்றும் 40 முதல் 50 சதவீதம் மறு சுழற்சி செய்யக் கூடிய பிளாஸ்டிக் அடங்கி உள்ளன. இதன்படி பார்த் தால், 1 டன் செல் போன் குப்பையில் 150 கிராம் தங்கம், 100 கிலோ காப்பர் மற்றும் 3 கிலோ வெள்ளியை பிரித் தெடுக்க முடியும்.
ஆண்டுக்கு சுமார் 7 கோடி செல்போன்கள் கழிவாகின்றன. இவற் றின் எடை சுமார் 6 ஆயிரம் டன்கள் ஆகும்.
இதிலிருந்து 900 கிலோ தங்கம், 18,000 கிலோ வெள்ளி 6 லட்சம் கிலோ காப்பரை பிரித்தெடுக்கலாம். இவற்றின் மதிப்பு பல நூறு கோடியாகும்.

No comments:

Post a Comment