Posted On July 18,2012,By Muthukumar

அதிகாலை வேளையில் மூக்குக் கண்ணாடியில் புகை போலப் படியும் பனி, அதை அணிவோருக்குத் தொந்தரவையும், எரிச்சலையும் ஏற்படுத்தும்.
இனி
அம்மாதிரி சாதாரணக் கண்ணாடிகளுக்கு விடை கொடுத்துவிடலாம். இப்போது,
ஈரப்பதமான இடங்கள், நேரங்களில் புகை போல பனி படியாத மூக்குக் கண்ணாடியைத்
தயாரித்திருக்கிறார்கள். இது, எப்படிப்பட்ட காலநிலையிலும் தெளிவாகவே
இருக்கும்.
`ஆப்டிபாக்'
எனப்படும் இந்த கண்ணாடியில் ஒரு விசேஷப் பூச்சு அமைந்திருக்கிறது. இது
தண்ணீரை கூடுதல் ஈர்ப்பாகக் கவரும். ஆனால் கண்ணாடியில் பனி போல படர
விடாமல், கண்ணுக்குத் தெரியாத படலமாக மாற்றிவிடும். எனவே கண்ணாடியில்
ஈரப்பதம் பட்டாலும் அது தெளிவாகவே இருக்கும் என்கிறார்கள் இதன்
தயாரிப்பாளர்கள்.
இதை
உருவாக்கியிருக்கும் பிரெஞ்சு நிறுவனமான எசிலார், சமையல் கலைஞர்கள்,
ஓட்டப்பந்தய வீரர்கள், சைக்கிள் வீரர்கள், முகமூடி அணியும் மருத்துவ
நிபுணர்கள் போன்றவர்களுக்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும் என்று
கூறுகிறது.
``கண்ணாடி
மூலம் பார்ப்பது இயற்கைப் பார்வைக்கு இணையாக இருக்கும் வகையில் செய்வதற்கு
எங்கள் ஆராய்ச்சியாளர்கள் உழைத்து வருகிறார்கள். அந்த நோக்கில்
`ஆப்டிபாக்' ஒரு முக் கியமான மைல்கல்'' என்கிறார், மேற்கண்ட நிறுவனத்தின்
நிர்வாக இயக்குநர் மைக் கிர்க்லி.
பனி
எதிர்ப்புப் பூச்சைக் காக்க இந்த கண்ணாடியில் ஒவ்வொரு வாரமும் ஒரு வேதித்
திரவத்தை `ஸ்பிரே' செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment